October 19, 2013

நான் நாத்திகனா - நீக்கப்பட்ட பாகங்களுடன் கூடியது (இரண்டாம் பாகம்)

மு.கு: இது தனிபதிவல்ல நான் நாத்திகனா என்பதன் வெட்டப்பட்ட (edited ) பாகங்களை ஒன்றிணைத்து கொண்டுவரப்பட்டது தான் இது.ஆகவே இதில் ஒரு தொடர்ச்சி இருக்காது . சபை நாகரிகம் கருதி சிலவற்றை மட்டுமே சொல்லி இருக்கிறேன்

மறவாமல் பின்குறிப்பையும் படித்து விடுங்கள்


மக்களிடம் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் பிரிவினைகளுக்கும் காரணமாய் விளங்குபவை சாதியையும் மதமும்.அதன் ஆணிவேர்தான் கடவுள்.வேரை தகர்த்தால் தான் சாதியம் எனும் மரம் வீழும் என்றார் ஐயா பெரியார் .மக்களிடம் ஏற்படும் உயர்வு-தாழ்வுகளுக்கு அறிவு ,கலை ,செல்வம் ,வீரம் போன்றவை காரணமாய் இருக்கலாம் .ஆனால் பிறப்பால் ஒருவனை உயர்வு -தாழ்வு என பிரிப்பது எப்படி அறிவுடமையாகும் எனும் கேள்வி எப்போதும் என்னுள்ளே இருக்கும் மனிதனுக்குள் உறங்கி கொண்டிருக்கும் மிருகத்தை கடவுள் எழுப்பி விடுகிறார மத தீவிரவாதம் எனும் பெயரில்.

மத தீவிரவாதம் எனும் காலன் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை குடித்து கொண்டுதான் இருக்கிறது.சாதுவான ஒரு மனிதனை கூட வெறியனாக மாற்றும் சக்தி இதற்க்கு உண்டு. ஆக பக்தி என்பது மனிதனின் பகுத்தறிவை ,சுயசிந்தனையை ,மனிதாபிமானத்தை கொன்று அவனை மனிதத்தன்மை அற்றவனாக மாற்றுகிறது.கடவுள் சார்ந்த பல மூடநம்பிக்கைகள் படித்த பண்புடைய மாந்தர்களால் இன்றும் கடைபிடிக்கப்பட்டு தானே வருகின்றன .இன்னொரு உயிரை வதைத்து காணிக்கை செலுத்துவது,பாவ மன்னிப்பு பெறுவது போன்றவை முற்போக்கான சிந்தனைகளா ???


இனி வரும் காலங்களில் காசு இருந்தால் கடவுளையே வாங்கிவிடலாம் என்ற நிலை வந்துவிடும்.இன்று தெருவுக்கு தெரு கட்டுவதை கோவில்கள்  என்றால் அன்று ராசராசனும் ராஜேந்திரனும் கட்டியவற்றிட்கு பெயரென்னவோ ??

கலையை கொன்று மனிதத்தை சிதைத்து இயற்கையை அழித்து யாருக்காக நீங்கள் கோவில் கட்டுகிறீர்கள் என தெரியவில்லை. கோவிலுனுள் தங்க பேழையில் உறையும் கடவுள் வெளியில் மக்களை பிச்சைகாரர்களாகவும் ஆதர்வற்றவர்கலாகவும் வைத்திருப்பது ஏனோ ??

கடவுள் எனும் பெயர் மனிதனின் வட்டத்தை சுருக்கி சுயநலவாதியாக தன்னை தவிர வேறு எதையும் சிந்திக்க தெரியாதவனாக மாற்றுகின்றது உலகில் வலம்வரும் பிற்போக்கான மூடநம்பிக்கைகளின் அஸ்திவாரம் கடவுள்.இதிகாசங்களிலும் புராணங்களிலும் உள்ள நீதிநெறிகளை மறந்து கடவுளை மட்டும் காணும் மடமைக்கு யார் காரணம் ?

தமிழ் மன்னர்களின் வீரமரபுகளை கூட புராண மரபுகளோடு ஒப்புமைப்படுத்தி நம்ப முடியாமல் செய்தது பக்திமான்கள் என்று பறைசாற்றுவோரின் குற்றம் தானே.மூன்று வேளையும் அர்ச்சனையோடு  வாழும் கடவுளுக்கு ஒரு வேளை உணவின்றி மடியும் குழந்தைகளின் நிலைமை தெரியாமல் போனதா??.தன் உடமைகளை காக்க முடியாத கடவுள் மக்களை காப்பது எங்கனம். சுவரை இடித்து சித்திரம் வரைவது போல் மனிதத்தை கொன்று கடவுள் வளர்கிறோம்.

மதசார்பற்ற நாட்டை காவித்தீவிரவாதம் அரசாலும் நிலை கூட வரலாம்.இன்றைய கல்வி முறை பகுத்தறிவையோ முற்போக்கு சிந்தனைகளையோ போதிக்காமல் பழமைவாதிகளுக்கு தூபம் போடுகின்றது. நாத்திகன் என்று சொன்னாலே கேவலமாய் பார்க்க இதுதான் காரணம்.மேலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சாதிய போதையை ஏற்படுத்துகிறார்கள்.அந்த பிஞ்சு உள்ளத்தில் உயர்வு தாழ்வு என்ற வன்மத்தை ஏற்படுத்துகிறார்கள்.இந்த பிரிவினை பின்னாட்களில் மிக பெரிய விளைவை ஏற்படுத்துகிறது. இவ்வாறு கடவுள் பெயரால் நடக்கும் அணைத்து அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் கடவுள் காரணம் இல்லை என்பது ஒரு சிலரின் வாதம். ஆனால் தன் பெயரில் நடக்கும் குற்றங்களை கலையாமல் அவர் ஏன் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்.கடவுள் உணர்வுபூரவமானவர் எங்கும் உள்ளவர் என வேதாந்தம் பேசுபவர்கள் பிற மதத்தையும் அதன் நம்பிக்கைகளையும் ஏன் ஏற்றுகொள்வதில்லை .

[ திரவ்பதி என்ற ஒரு பெண்ணின் மானத்தை காக்க அவதரித்த கடவுள் சிங்கள தீவில் ஆயிரகணக்கான எம் சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க பட்டபோது எங்கு போனார்
]

ஏழை மீண்டும் ஏழையாவதையும் பணக்காரன் மீண்டும் பணக்காரன் ஆவதையும் கடவுளால் ஒன்றுமே செய்ய முடியாமல் போனது ஏனோ?.ஒரு மனிதனின் உடமையை மற்றவர் திருடுவதை கடவுள் ஏன் கண்டு கொள்ளவில்லை.தன்னால் உருவாக்கப்பட்ட கடவுளின் தன்னையே ஆட்கொள்வதை ஏன் இன்னும் மனிதன் உணரவில்லை என்பது அதிசயம்தான்.


பி.கு :

நான் இதற்க்கு மனிப்பு கோரமாட்டேன். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களின் பேச்சும் செயலும் என்னை புண்படுத்திய போது யாரும் அதைப்பற்றி கவலைபடவில்லையே .நான் மட்டும் ஏன் அவர்களை பற்றி கவலைப்பட வேண்டும் . மேலும் சுதந்திர நாட்டில் வாழும் நான் என் கருத்துக்களை கூற எனக்கு உரிமை உள்ளது . இந்தியாவில் உள்ள அனைவரும் மற்றவர் மனதை புண்படுத்தாமல் பேசுகிறார்களா ?? மனிப்பு கேட்டு என்னை நல்லவனாக காட்டி கொள்ள விரும்பவில்லை 

No comments:

Post a Comment