October 18, 2013

மனிதனும் மர்மங்களும் - புத்தகம் பற்றிய பேச்சு

மனிதனும் மர்மங்களும் - புத்தகம் பற்றிய பேச்சு

அண்மையில் திரு. மதன் அவர்கள் எழுதிய மனிதனும் மர்மங்களும் என்ற புத்தகம் படித்தேன். மனிதனுக்க அப்பாற்பட்ட நிகழ்வுகளையும், மர்மங்களையும் தனக்கே உரித்தான பாணியில் சுவாரஷ்யமாக சொல்லி இருந்தார். இதுவரை ஊடகவியலாளர் , கேலி சித்திரதாரி (கார்டூனிஸ்ட் என்பதன் தமிழாக்கம் !!! தவறாக இருந்தால் மன்னிக்கவும்),விமர்சகர் என பல முகங்கள் கொண்ட அவரின் எழுத்தாளர் என்ற புதிய முகமும் நன்றாகவே உள்ளது.

புத்தகத்தின் முதல் பாதியை ஆவிகள் பற்றி சொல்லி இருக்கிறார். ஆவிகள் பற்றியும் அதனால் பாதிக்கபட்டவர்கள் பற்றியும் சொல்லி ஆரம்பத்திலேயே விறுவிறுப்பை கொண்டு வருகிறார். ஆவிகள் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளையும் வித்தியாசமான சில ஆவிகளின் போக்கையும் சேகரித்து தந்திருப்பது சிறப்பு

ஆனாலும் அந்த லிப்ட் பயங்கரம் அப்பப்பா !!!!



பின் டெலிபதியை பற்றிய ஆச்சர்யங்கள் ஒவ்வொன்றாக விரிகின்றன. அதிலும் அந்த பற்றி மிகவும் அற்புதமாக சொல்லி இருக்கிறார்.

டெலிபதிக்கு பிறகு ,தொலைவில் நடக்கும் நிகழ்ச்சிகளை  பார்க்கும் திறமை (),எதிர் காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை முன் கூட்டியே சொல்லுதல் (),மற்றும் பார்வையாலேயே பொருள்களை நகர்த்துதல் என அடுத்தடுத்த பக்கங்கள் அதிர்சிகளாலும் வியப்பினாலும் நிறைகின்றன


இந்த உலகின் அதிசிய மனிதர்களாக கருதப்படும் சிறப்பு சக்திகள் கொண்ட டேனியல் டங்க்லஸ் ஹியும் ,யூரி கெல்லர் என பலபேரின் சாதனைகளையும் வாழ்க்கையையும் சொல்கிறார்.

பூமியில் ithuvarai பெய்துள்ள அதிசய மழைகள் (மீன்மழை ,தவளைமழை மற்றும் பல மழைகள் ) ,இருந்த இடத்திலேயே தானாக முழுக்க எரிந்து சாம்பலாகும் மனிதர்கள்,வானத்திலிருந்து வந்த சிலந்தி வலை மற்றும் மேகம் செய்த அதிசயம் என அடுத்தடுத்த ஆச்சர்யங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.



கடைசி அத்தியாயங்கள் பறக்கும் தட்டுகள் மற்றும் வேற்றுலக வாசிகள் பற்றிய தகவல்கள் மிக அருமை. வேற்றுலக மனிதர்கள் பார்த்ததாக சொல்லும் மக்களின் அனுபவங்கள் , வித்தியாசமான ஏலியன்ஸ் பற்றியும் சொல்லி விட்டு திரும்ப திரும்ப  ஏலியன்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே தென்படுவதாக கூர்வது வியப்பு எனவும் சொல்கிறார்


கடைசியில் அமெரிக்க, ரஷ்யா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இதை பற்றி ஆராய்ச்சி செய்தாலும் அதன் முடிவுகளை வெளியிடாமல் வைத்திருப்பது ஏன் என்று புரியவில்லை


பி.கு :
 அறிந்து விட்ட அதிசயங்கள் ,அவிழாத மர்ம முடிச்சுகள் என படித்து முடிக்கும் வரை விறுவிறுப்பு முழுவதும் இருந்தது

நானே அனைத்தையும் சொல்லி விட்டால் படிக்கும் ஆர்வம் குறைந்து விடும்

அணைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்

No comments:

Post a Comment