October 07, 2013

என் பள்ளி

இரண்டாம் கருவறை என்று அழைக்கப்படும் பள்ளி ஒவ்வொருவர் வாழ்விலும் இனிய நினைவுகளையும் மறக்க முடியாத மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். பள்ளி தனி மனித ஒழுக்கத்தையும் நல்ல பழக்கவழக்கங்களையும் கற்று ஒரு மனிதனை செப்பனிடுகிறது. அந்த நினைவுகளை இப்பொழுது நினைத்தாலும் எண்ணிலடங்காத உவகையும் ஒரு சிலிர்ப்பும் ஏற்படும்.

இதோ என் பள்ளியை பற்றி .................

எனது சொந்த ஊரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் நான் படித்தேன். வண்ணமில்லாத வகுப்பறை சுவர்கள் ,எப்பொழுதும் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் விளையாட்டு மைதானம் எனும் காடு ,மரத்தடியில் இயங்கும் மனித உணவு கூடம், புத்தக பையோடு சுற்றி திரியும் மாணாக்கர் கூட்டம் என ஒரு கிராமப்புற பள்ளிக்குரிய அணைத்து இலக்கணங்களையும் ஒருங்கே அமைய பெற்ற பள்ளி அது. எப்பொழுதே இருப்பது ஆசிரியர் பற்றாக்குறையும் மாணவர்களின் சத்தமும் தான். எந்த எதிர்பார்ப்புகளோ வாழ்கையை பற்றிய அச்சங்களோ இல்லமால் ஓடியாடிய பருவமது.

பத்தாம் வகுப்பு வரை bench கூட கிடையாது. தரையில் அமர்ந்து தான் படிக்க வேண்டும்.கற்களும் முற்களும் நிறைந்த மைதானத்தில் புற்களுக்கு எங்கள் நிழலில் இடம் கொடுத்தோம் விளையாட்டு பாடவேலைகளில். மதிய சத்துணவு இடைவேளை தின்பண்டங்கள் என தின்று தீர்த்தோம்.எட்டாம் வகுப்பு வரை இருந்த அரை டவுசர் ,பேன்ட் ஆக பதவி உயர்வு பெற்றது. ஆனால் பெண்கள் தாவணி அணிய வேண்டும் எனும் விதிமுறை இருந்தது. இதனால் புத்தகம் தூக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தாவணியை சரி செய்து கொள்வதே அவர்களுக்கு வேலையாய் போனது. தமிழ் பாடவேளையில் ஆங்கிலம் கலவாமல் தமிழ் பேச தமிழாசிரியை கட்டாயபடுத்துவார். ஆனால் ஆங்கில பாடவேளையில் அந்த ஆசிரயர் கூட ஆங்கிலம் பேச மாட்டார்.

அறிவியல் practical சமயத்தில் தவளையை ஆபரேஷன் செய்ய தவளை வேட்டை நடத்திய காலங்கள் மறக்க முடியாதவை. பாம்பு கூட அவ்வளவு தவளையை பிடித்திருக்காது. டீச்சர் தலையில் ராக்கெட் விட்டது ,tube light உடைத்து போன்ற சாகசங்களை என் தலைமையில் நடத்தி காட்டினோம் (அப்போ நான் தான் கிளாஸ் லீடர் ஆனால் சம்பவம் நடந்த பிறகு தான் எனக்கே சொல்வார்கள் பிரச்னையை சமாளிக்க).வகுப்பறையில் தூங்கியது ,tiffin box திருடி தின்பது கிரிக்கெட் பார்க்க வெளியை தாண்டுவது போன்ற செயற்கரிய காரியங்களை செய்தோம். கிராமப்புற பள்ளி என்பதால் மாணவிகளிடம் பேச கூடாது எனும் விதியை பெயரளவில் கடைபிடித்தோம்.

சுதந்திர ,குடியரசு தினத்தன்று நிகழும் கலை நிகழ்சிகளை தவிர வேறு எதுவும் இருக்காது. ரெட்டை வரி நான்கு வரி நோட்டுகள் எழுதாமல் சென்று கை விரல்களிலே அடி வாங்குவது வழக்கம்.பள்ளிக்கு அருகில் வீடு என்பதால் சில நன்மைகளும் இருந்தன பல தீமைகளும் இருந்தன. கட் அடித்தால் ஆசிரியர் நேராக வீட்டுக்கு வந்து தூக்கி சென்று விடுவார். வகுப்பை பெருக்குவது , மரம் செடிகளுக்கு தண்ணீர் விடுவது போன்ற வேலைகளை அதற்காக நியமிக்கப்பட்ட குழுக்கள் கால அட்டவணைப்படி செய்து முடிப்பார்கள்.

கிரிக்கெட் பார்க்க வேண்டுமென்பதற்காக வேலியை தாண்டி ஒரு கும்பலே எங்கள் வீட்டில் இருக்கும். ஆனால் கதவு வெளியில் பூட்டியிருக்கும் (எப்புடி ). இந்திய-பாகிஸ்தான் மேட்ச் வந்தால் மற்றும் எனக்கு காய்ச்சல் வந்து விடும்! எனவே பள்ளிக்கு லீவ் போட்டுவிடுவேன்.பள்ளிக்கூட சுவர்களில் எங்கள் காம்பஸ் விளையாட்டு நன்றாக தெரியும். எந்த தவறு செய்தாலும் எவ்வளவு கேவலமாக திட்டு வாங்கினாலும் ஒருவரை ஒருவர் காட்டி கொடுக்காத தன்மை எங்களின் பலம். தலைமைஆசிரியர் வாரத்தில் இருமுறையாவது என்னை "சோத்த தான திங்கற! இல்ல வேற எதையாவது திங்கறையா " என சந்தேகம் கேட்பார். ஆசிரயர்களுக்குள் மூளும் சண்டைகளை வைத்து குளிர் காய்ந்தோம்.

நாங்கள் விளையாட்டாய் பசுமை படை எனும் அமைப்பை ஆரம்பித்தோம். பள்ளி மற்றும் ஒவ்வொரு வீடாக சென்று மரங்கள் நட்டோம். எங்கள் ஊரில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்கும் இடங்களை தேர்ந்தெடுத்து மரங்கள் நட்டோம் அதற்க்கு வேலியும் அமைத்தோம். இது நல்ல அனுபவமாக இருந்தது. ஆனால் .பசுமை படைக்கு எதிர்ப்பு எல்லா பக்கமிருந்தும் வந்ததால் அது ஒரே ஆண்டில் கலைக்கப்பட்டது .


 பதிவின் நீளம் அதிகமாக இருப்பதால் இரண்டாவது பாகமாக என் பள்ளியை தொடர்கிறேன்


தொடரும்

No comments:

Post a Comment