October 26, 2013

வசந்த காலம்,மாதவியின் மனம்- புத்தகம் பற்றிய பேச்சு

சென்ற வாரம் சாண்டில்யன் அவர்கள் எழுதிய இரு நாவல்கள் படித்தேன்

1. மாதவியின் மனம் :

 தென்னிந்தியாவின் அலெக்ஸான்டார் என்று அழைக்கப்பட்ட சமுத்திரகுப்தர் பல்லவ மன்னன் விஜயக்கோபன் மீது படை எடுத்த போது சோழ இளவரசனான சேந்தன் தனது ராஜதந்திரத்தால் காஞ்சியை அழிவிலிருந்து காப்பாற்றினான். ஒரு மாணவனாக காஞ்சியில் நுழைந்து மாதவி என்ற மங்கையுடன் காதல் வயபபடுகிறான். கடைசியில் எவ்வாறு அவன் காஞ்சியை அழிவிலிருந்து காப்பதோடு  எப்படி மாதவியை கரம் பிடிக்கிறான் என்பதை விறுவிறுப்பான திருப்பங்கள் உடணும் காதல் வர்ணனைகளுடணும் அழகாக சாண்டில்யன் சொல்லி இருந்தார்


2. வசந்த காலம்:

சேரமான் இரும்பொறை பெருந்திரல் சென்னியின் மீது படை எடுக்கிறான். அவனிடம் படை தளபதியாக உள்ள இளந்திரையன் தனது முறை பெண்ணான சென்னியின் மகளை காதலிக்கிறான். சேரமானின் படையெடுப்பில் இருந்து சென்னியின் நாடு தப்பியதா இளந்திரையன் காதல் கைகூடியதா என்பது கதையின் முடிவு.

No comments:

Post a Comment