October 06, 2013

நான் நாத்திகனா? பாகம் 1

நான் நாத்திகனா நீங்களாவது சொல்லுங்களேன்


நான் என்னை நாத்திகன் என்றோ ஆத்திகன் என்றோ அடையாள படுத்திக் கொண்டதில்லை .
ஆனால் என் சுற்றத்தாரின் பார்வையில் அவ்வாறு தெரிவதற்கான காரணமும் புலப்படவில்லை

நான் கடவுளை மறுக்கவோ வெறுக்கவோ இல்லை. ஆனால் கோவில்களிலும் ஆலயங்களிலும்
உள்ளவற்றை கடவுள் என்று ஒப்ப மனம் மறுக்கிறது . பரந்து விரிந்த
உலகத்தில் எங்கும் கடவுளை பார்கிறேன் இயற்கையை , வானத்தை , சூரியனை ,
உயிர்களை கடவுளாக கொள்ள நான் தயார். சிரிக்கும் பிஞ்சு குழந்தையில் ,
நனைக்கும் மழையில் , வயது முதிர்ந்த கிழவியின் தீண்டலில் ஏன் ? OMR இல்
நிராதரவாக விடப்பட்ட மாடுகளில் என பல வழிகளில் நான் கடவுளை உணர்கிறேன்
.உயிர்களை வருத்தும் இறை நம்பிக்கையில் எனக்கு உடன்பாடு கிடையாது. நானும்
கோவிலுக்கு செல்கிறேன் .அங்குள்ள சிற்பங்களில் கலை என்னும் கடவுளை
பார்கிறேன் .


இறைவனை அடைய இயற்கை அழிப்பதும் உயிர்களை கொள்வதும் தர்மம் எனில் நான்
நாத்திகனே. கோவில் மனிதனுக்கு மனநிம்மதியையும் அமைதியையும் தருவது என
வரையறை செய்து கொண்டால் இவை இரண்டையும் எனக்கு நல்கும் நூலகமே எனக்கு
கோவில். அங்கு சமய பேதமைகள் இல்லை. என்னை எனக்கே உணர வைக்கும் இடம் அது .

என் சொந்த ஊரில் என் உயிர் தோழனுடன் தோளில் கைவைத்தபடி செல்ல இயலா
இழிநிலைக்கு காரணம் உங்கள் சாதியையும் கடவுளும் தான் . இதையெல்லாம்
பார்க்கும் போது எனக்கு பாரதியின் இந்த வரிகளே நினைவுக்கு வருகின்றன.

தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர் பொருளானது தெய்வம்

என்னை பொறுத்த மட்டில் மனிதன் கண்டு பிடித்த மிக பெரிய விஷயம் கடவுள்.
கடவுள் என்பவர் எவ்வாறு தோன்றி இருக்கலாம் என்ற என் கற்பனை
மனிதன் தோன்றிய காலகட்டத்தில் சிறு சிறு குழுக்களாக வாழ ஆரம்பித்தான்
அந்த சமயம் தன குழுவை கட்டுபடுத்தவும் பிற குழுக்களிடையிருந்து தன்னை
காக்கவும் உருவாகிய வேலியே கடவுளாக இருக்கலாம். ஆக மனிதனால்
உருவாக்கப்பட்டு மனிதனையே மிஞ்சிய பொருள் கடவுள்.

மனிதனால் வரையறை செய்யப்பட்ட சடங்குகள் மற்றும் சம்ப்ரதாயங்கள்
காலத்திற்கேட்ப மாறி வந்துள்ளன. மனிதன் தன விருப்பதுகிணங்க கடவுளையியும்
மாற்றி கொள்கிறான். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க கூடாது என்ற பழமொழி
மனிதன் தன விருப்பம் போல் கடவுளையும் கோவில்களையும் சிருஷ்டிகிறான்
என்பதை பறைசாற்றுகிறது. பாவங்கள் செய்தால் கடவுள் மன்னிப்பார் என்ற
வரையறை மததீவிரவாதத்தை உயிரூட்டுகின்றது.

சாதி மத காரணிகளை கொண்டு நான் மலிவு விளம்பரம் தேடிக்கொள்ள விரும்பவில்லை
. ஆகவே என் உடலில் எந்த மத அடையாளங்களையும் அணிவதில்லை ஒருவேளை மத
அடையாளங்களுக்குள் நான் ஆட்பட்டுகொண்டால் அது என் மக்களை இழக்க வைத்து
விடுமோ என நான் பயப்படுகின்றேன்

தனக்கு துன்பம் வந்தால் மட்டுமே கடவுள் பலர் கண்களுக்கு தெரிகிறார்.
வரும் காலத்தில் மனிதன் மரணத்தை வென்று விட்டால் (விஞ்ஞானம் உதவியால் )
அவன் கடவுளை நம்பமாட்டான் மாறாக அவனே கடவுளாகிவிடுவான்.

நான் கடவுளாக கருதும் புத்தகங்களுடன் என் வாழ்க்கை பொய் கொண்டிருகிறது
அவை நான் விருப்பு எல்லா செல்வங்களையு எனக்கு அள்ளி வழங்குகின்றன.
இவையோடு என் வாழ்க்கை போய்கொண்டிருக்கிறது.

சில சமயங்கள் நான் என் கண்ணுக்கு கடவுளை மறுக்கும் நாத்திகனாக
தெரிகிறேன் சில சமயம் கடவுள் உள்ளார் அது இயற்கை மரம் செடிகள் கொடிகள்
உயிர்கள் என்பதை ஒப்பு கொள்வதால் பக்தி மானாக தெரிகிறேன்.

ஆனால் யாராவது நாத்திகன் என கூறினால் கோபத்துடன் அதை பெருமையாக ஒப்பு கொள்கிறேன்


நீங்களாவது சொல்லுங்கள் நான் யாரென்று
*




No comments:

Post a Comment