March 27, 2017

நீங்களும் ஆகலாம் தேசபக்தர்

தற்காலத்தில் தேசபக்தராக உங்களை இந்த உலகம் ஒப்புக்கொள்ள வேண்டுமெனில் கீழ்கண்ட பத்து கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்


1. பாகிஸ்தான் என்ற பெயரை கேட்டவுடன் நாடி, நரம்பு எல்லாம் புடைத்து ரத்தம் சூடேறி தேசபக்தி பொங்கி வர வேண்டும். இலங்கைகாரன் மீனவர்களை சுடுறான் , சீனா ஆக்கிரமிப்பு செய்யிறான் என்பதை பற்றி எல்லாம் கண்டுகொள்ள தேவையில்லை.

2. கோட்ஸே கடவுளாகவும் , ஆர்.எஸ்.எஸ் புனித அமைப்பாகவும் கருதும் பக்குவம் வேண்டும் . அவர்கள் துப்பும் எச்சில் கூட உங்களுக்கு புனிதமாக முற்போக்கு சிந்தனையுள்ளதாக தெரிய வேண்டும். அப்பப்போ காந்தி , அம்பேத்கார் படங்களுக்கு மாலை மட்டும் போட்டால் போதும்

3. பசு என்பதை கடவுளாக கருத வேண்டும். மாட்டு கோமயத்தில் இருந்து தங்கம் தயாரிக்கலாம் போன்ற அறிவியல் உண்மைகளை கண்டறிந்து உலகுக்கு வெளிப்படுத்துதல் மிக்க நலம் .  மாட்டுக்கறி வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கணும்னு கூவ வேண்டும் . நாம மூணு நேரமும் பால் குடிக்கலாம் , மாட்டு தோலால் செய்யப்பட உபகரணங்களை பயன்படுத்தலாம் . மாட்ட கொன்னு அதன் இறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் . அதுல எல்லாம் பிரச்னை இல்லை

4. இந்திய தேசம் என்பது இந்துயா தேசம் என்று உங்கள் காதுகளில் ஒலிக்க வேண்டும் . அயோத்தி புனித பூமி முதல் ராமர் பாலம் வரை முற்றிலும் நம்ப வேண்டும் . அயோத்தியின் சர்ச்சைக்குரிய இடத்தில கோவில் கட்டவேண்டும் என்பதை உங்களின் வாழ்நாள் இலட்சியமாக கொள்ள வேண்டும் . அனைவரும் இந்துக்களாக ஒன்றினைவோம்னு பேசணும் . இந்துக்கள் அப்படிங்கிற வரையறைக்குள்ள எல்லா ஜாதிகளையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை . ஆதாயம் இல்லாத அடித்தட்டு மக்களின் சாதிகளை கண்டு கொள்ள தேவையில்லை

5. நாத்திகம் , மத நல்லிணக்கம் , பகுத்தறிவு மற்றும் மதச்சார்பின்மை போன்ற கெட்ட வார்த்தைகளை புறந்தள்ளி ஆசிரமத்துக்கு போய் தியானம் யோகா போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றின் மூலம் நீங்கள் ஆன்மீக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு முக்தி நிலையை அடையலாம்

6. அப்பப்போ பிரியாணி அண்டா திருடறது, தலைக்கு விலை வெக்கறது , காதல் , பெண்களின் ஆடைகள் போன்ற கலாச்சார சீரழிவுகளை தடுத்து நிறுத்தவேண்டும் . பெண்களை சக மனிதர்களாக பாலின சமத்துவத்தோடு பார்ப்பது இறைவனின் படைப்பை அவமதிப்பது போன்ற பெரிய குற்றமாக கருதவேண்டும் .

7. கீதையில சொன்னதோ போதையில சொன்னதோ புனித நூல் சொன்னதை கரெக்ட்டா கேக்கணும் . அதுல நல்ல விஷயங்களே இருந்தாலும் அதை எல்லாம் ஓத்துக்கிட்டு அன்னம் போல் நமக்கு தேவையான மத போதனைகளை மட்டும் எடுக்க வேண்டும் . கடவுள் முன்னர் மூடர்களே மூடநம்பிக்கை பற்றி  பேசுவார்கள் என்ற கருத்தில் உறுதியாக இருக்கவேண்டும் .நாம் படித்த அறிவியலுக்குள் ஆன்மீகத்தை புகுத்தி அதன் வழி தேடி மோட்சம் அடைய வேண்டும்

8.எல்லாவற்றுக்கும் ராணுவ வீரர்களை போற்ற வேண்டும் . அங்கே அவர்கள் சோறு தண்ணியில்லாம செத்தாலும் கண்டு கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்களின் தியாகங்களை சொல்லி நாட்டுப்பற்றை ஊட்ட வேண்டும்.

9. முக்கியமா வெள்ளையாக இருக்கிறவ பொய் சொல்லமாட்டேன் என்பதுபோல் காவி கட்டியவன் நல்லது மட்டுந்தான் செய்யும் புனிதமானவன்னு நம்பனும். முருகன்னா யார்னு கேக்கணும் விநாயகர் சதுர்த்தினா ஊருபூரா சிலைவச்சு தண்ணியில கறைக்கணும்


10. இதுல உள்ளதைவிட முக்கியமானது எங்கயும் எதிர்த்து ஏன்? எதுக்குன்னு கேள்வி கேக்க கூடாது . நம்பனும் ,அனுபவிக்கனும் ஆராயக்கூடாது . அது கடவுளா இருந்தாலும் கங்கையா இருந்தாலும் காவியா இருந்தாலும் என்ன கருமமா இருந்தாலும்

இதெல்லாம் படிச்சிட்டு,  இல்ல நான் உண்மையான தேசபக்தன் . இந்தியா எனது நாடு . நான் இங்குள்ள மக்கள் அனைவரையும் பெரிதும் நேசிக்கிறேன் . இந்நாட்டின் இறையாண்மையையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பேன்னு டயலாக் பேசினா நீங்க இருக்க வேண்டிய இடம் மனநல மருத்துவமனை மட்டுமே

இந்த திறன்களை வளர்த்து கொண்டால் நீங்களும் ஆகலாம் தேசபக்தர்


-சசிகுமார் முத்துலட்சுமி

2 comments:

  1. microtouch titanium trim reviews - IT NAMES
    Microtouch Titanium titanium flashlight trim reviews · titanium ingot Microtouch T-Shirts microtouch trimmer by Microtouch T-Shirts · Microtouch T-Shirts by Microtouch titanium bikes T-Shirts · Microtouch T-Shirts by Microtouch T-Shirts · Microtouch T-Shirts by Microtouch mens wedding bands titanium T-

    ReplyDelete