February 23, 2014

சென்னை புத்தக திருவிழா-2014

தமிழகத்தின் மிக பெரிய புத்தக கண்காட்சியான சென்னை புத்தக திருவிழா நந்தனம் YMCA மைதானத்தில் கடந்த 10.01.2014 வெள்ளிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. 37 வது ஆண்டான இந்த ஆண்டு கிட்டத்தட்ட 700 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

நான் 11.01.2014 சனிக்கிழமையன்று சென்றிருந்தேன். வழக்கமாக புத்தகம் வாங்க செல்லும்முன் ஒரு பெரிய பட்டியல் தயாரிப்பது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு எதுவும் செய்யாமல் வெற்று மனதுடன் சென்றிருந்தேன். உள்ளே நுழைந்து புத்தகங்களை தேட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 4 மணிநேரம் சுற்றியும் அணைத்து பதிப்பக(தமிழ் ) அரங்குகளுக்கும் செல்ல முடியவில்லை.கூட்டமும் குறைவாகவே தென்பட்டதால் அதிகபட்சமான அரங்குகளை சுற்றி பார்த்தேன்.

ஒவ்வொரு புத்தக விழாவிலும் எப்போதும் முதலிடம் பெரும் நூல் பொன்னியின் செல்வன் மட்டுமே. கல்கியை தொடர்ந்து சாண்டில்யன் அதிக அரங்குகளில் இடம்பெற்றிருந்தார். இதில் எனக்கு ஆச்சர்யம் என்னவெனில் இம்முறை ஜெயகாந்தனின் புத்தகங்களை அதிகமாக காண முடியவில்லை. மாறாக பாலகுமாரன் புத்தகங்களை ஏறக்குறைய எல்லா அரங்கிலும் பார்க்க முடிந்தது.

பூம்புகார் பதிப்பகம் கோவி.மணிசேகரன் நூல்களை நல்ல தரமான முறையில் அச்சிட்டிருந்தார்கள். மேலும் எல்லா அரங்கிலும் பிடெல் காஸ்ட்ரோ ,சேகுவேர,லெனின் முதலானவர்களை பற்றிய புத்தகங்கள் அதிகம் தென்பட்டன. வேளாண்மை சார்ந்த புத்தகங்களுக்கு தனி அரங்கே இருந்தது வரலாற்று நாவல்களில் நா.பார்த்தசாரதி, கோவி.மணிசேகரன் ,சாண்டில்யன் போன்றோரின் நிறைய அரிய புத்தகங்களை பார்க்க முடிந்தது.


விழாவில் விகடன் மற்றும் காலச்சுவடு இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தன. காலச்சுவடு பதிப்பகம் அசோகமித்திரன் ,சுந்தர ராமசாமி போன்றோரின் நாவல்களை அதிகம் வைத்திருந்தது. மேலும் திரு.அசோகமித்திரன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தது . காலச்சுவடில் அதிக நூல்கள் இடம்பெற்றிருந்தன. விகடன் பதிப்பகம் கிட்டத்தட்ட 4 அரங்குகளை வைத்திருந்தது .நிறைய புதிய மற்றும் அரிய படைப்புகள் காணப்பட்டன.உதாரணமாக ராமகிருஷ்ணன் எழுதிய எனது இந்தியா மற்றும் மறைக்கப்பட்ட இந்திய வரலாறு ஆகியவை.

கடைசியாக நூற்றாண்டு விழா கண்ட அல்லயன்ஸ் பதிப்பகம் சென்று விட்டு திரும்பி விட்டேன் .அங்கு நான் பல மாதங்களாக தேடி கொண்டிருந்த துப்பறியும் சாம்பு கிடைத்தது.


சில முக்கிய அரங்குகள்:
1.காலச்சுவடு
2.பாரதி புத்தகாலயம்
3. மணிமேகலை பிரசுரம்
4.நர்மதா பிரசுரம்
5. பூம்புகார் பதிப்பகம்
6.அல்லயன்ஸ்
7. தி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
8. விகடன் பதிப்பகம்
9. குமுதம் பதிப்பகம்
10. புலம் பதிப்பகம்
11. தமிழ் செம்மொழி தமிழாய்வு நிறுவனம்
12. தமிழ் இலக்கிய கழகம்
13. பெரியார் புத்தக நிலையம்
14. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்
15. வானதி பதிப்பகம்
16.கிழக்கு பதிப்பகம்
17. கண்ணதாசன் பதிப்பகம்
18.நக்கீரன்
19.பனுவல்

மற்றும் பல

தொழில்நுட்ப புத்தகங்களுக்கு
1.Chand and Chand Company
2. Techno
3. Prentice Hall of India
4. British library council
5. Cambridge university


மற்றும் பல

ஏற்கனவே வாங்கிய படிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை அதிகம். எனவே இம்முறை குறைவாகவே வாங்கினேன்


நான் வாங்கிய புத்தகங்களின் விபரம்

1.விலை ராணி மற்றும் இந்திரா குமாரி
ஆசிரியர் : சாண்டில்யன்
வகை :வரலாற்று நாவல்கள்
பதிப்பகம் : வானதி

2. காஞ்சி கதிரவன்
ஆசிரியர் : கோவி.மணிசேகரன்
வகை : வரலாற்று நாவல்
பதிப்பகம்: பூம்புகார்

3. அணையா பெரு விளக்கு சே குவேரா
ஆசிரியர் : ஆதனூர் சோழன்
வகை: சே குவேர வரலாறு
பதிப்பகம் : நக்கீரன்

4. இன்னும் பிறக்காத தலைமுறைக்கு
ஆசிரியர் :தியோடார் பாஸ்கரன்
வகை : சுற்றுச்சூழியல் மற்றும் வன உயிரினங்கள் சார்ந்த கட்டுரைகள்
பதிப்பகம் : உயிர்மை

5. கணிதத்தின் கதை
ஆசிரியர்: ஆயிஷா. இரா. நடராசன்
தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்
வகை : கணிதம் தோன்றிய வரலாற்று பதிவு
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

6. பெரியார் கல்வி சிந்தனைகள்
வகை : கல்வி குறித்த பெரியாரின் கருத்துக்களின் தொகுப்பு
தொகுப்பு : மார்க்ஸ்

7. சேகுவேராவிம் கடிதங்கள்
வகை : சேகுவேர எழுதிய கடிதங்களின் தொகுப்பு
தொக்குப்பின் தமிழாக்கம் : உமர்
பதிப்பகம் : புலம்

8. திமிங்கல வேட்டை
ஆங்கில நாவலான இது உலகின் தலை சிறந்த பத்து நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது
ஆசிரியர் : ஹெர்மன் மெல்விஸ்
தமிழாக்கம் : மோகன ரூபன்
பதிப்பகம் : புலம்

துப்பறியும் சாம்பு 1&2
வகை : நகைச்சுவை நாவல்
ஆசிரியர் : தேவன்
பதிப்பகம் : அல்லயன்ஸ்


அவ்வளவு தான்

மேலும் சினிமா மற்றும் நுண்ணுயிரியல் தொடர்பான சில புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.திரு அசோக மித்திரன் ,தியோடார் பாஸ்கரன் மற்றும் பல இளம் எழுத்தாளர்கள் கலந்து

No comments:

Post a Comment