December 21, 2013

எங்கே செல்லும் இந்த பாதை -பகுதி 5

குழந்தை வளர்ப்பு

முன் குறிப்பு : குழந்தை வளர்ப்பு பற்றி எழுதுவதற்கு தேவையான வயதோ அனுபவமோ என்னிடம் இல்லை.இருப்பினும் சமூகத்தில் வாழும் ஒரு சராசரி மனிதனாக பார்க்கும் விசயங்களை பகிர்வோம் என்ற நினைப்பில் எழுதப்பட்டது . அறியா சிறுவன் எழுதிய இந்த பதிவு சிறுபிள்ளைதனமாகவோ தவறாகவோ இருக்கலாம்.அப்படி இருந்தால் உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து போனால் போகட்டும் என நினைத்து விட்டுவிடுங்கள்.

குழந்தை வளர்ப்பு பற்றி ஒரு குழந்தை (சத்தியமா நான்தான் ) எழுதிய சிறு பதிவு . (அப்பாடா இனி யாரும் திட்ட மாட்டார்கள் )





குழந்தை வளர்ப்பு என்பதை உடல் ரீதியான மற்றும் மன ரீதியான வளர்ச்சி என்று பிரிக்கலாம். உடல் ரீதியான வளர்ச்சியை தாய்மார்கள் பார்த்து கொள்வார்கள். மனரீதியிலான வளர்ச்சியை மட்டும் பார்ப்போம்


குழந்தைகள் பள்ளி ,நண்பர்கள் சமுதாயம் என பலவற்றில் இருந்து கற்று கொண்டாலும் குழந்தைகளின் முதல் ஆசான் பெற்றோர் தான். பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் அணைத்து விசயங்களையும் கற்று கொள்கிறார்கள் .இதனால் குழந்தைகளிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது முக்கியமானது. பெற்றோரிடம் இருந்து கோபத்தில் பிறக்கும் ஒவ்வொரு சொல்லும் குழந்தைகளிடம் பதிந்து விடுகிறது. தொலைக்காட்சி ,சமூகத்தில் அவர்கள் பார்க்கும் காட்சிகள் அவர்களுக்கு நல்லவற்றை மட்டுமல்லாமல் சில தீயவற்றையும் போதிக்கின்றன.


இன்றைய குழந்தைகளின் Observation மற்றும் Learning Ability மிக அதிகம்.நம் சிறு வயதில் நம்மால் யோசிக்க முடியாத பல விசயங்களை இன்று அவர்கள் நிகழ்த்தி காட்டுகிறார்கள். அவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை பற்றி நாமே யோசிக்க வேண்டி வருகிறது. குழந்தைகளின் இந்த வளர்ச்சி பெற்றோரும் மனரீதியாக வளர அல்லது பக்குவம் மேம்பட வேண்டும் என்பதை புலப்படுத்துகின்றன.குடும்பத்தில் ஆரோக்கியமான சூழல் நிகழ்வது குழந்தைகளின் மன நிலையை பேண உதவும். பெற்றோரிடையே எழும் கருத்து வேறுபாடுகள் குழந்தைகளை நேரடியாக பாதிக்கின்றன .

இன்றைய தலைமுறை குழந்தைகளின் பெரும்பாலான நேரத்தை கேம்ஸ்களும் கார்ட்டூன்களும் கவர்ந்து விடுகின்றன. இன்றைய அறிவியல் முன்னேற்றம் குழந்தைகளுக்கு நிறைய கற்று கொடுப்பதோடு அவர்களை கெடுக்கவும் செய்கிறது. இதனால் உறவுகளோடு உலாவி மகிழும் நேரம் குறைகிறது.இவ்வாறு நிஜ மனிதர்களோடு வாழும் நேரம் குறைந்து நிழல் கதாபாத்திரங்களோடு வாழ வேண்டிய சூழல் நிலவுகிறது.


அறிவு என்பது பள்ளியில் சொல்லி தரப்படும் பாட புத்தகங்களோடு நின்று விடாது. அதை தாண்டி அவர்களுக்கு வாழ்கையை கற்று தரவேண்டிய பெருமை பெற்றோரையே சாரும். ஒரு பெற்றோராக குழந்தையின் சிறு சிறு ஆசைகளையும் பூர்த்தி செய்து விடுகிறோம். இதனால் தோல்வி,ஏமாற்றம் போன்றவற்றை அறியாமல் வளரும் அவர்களால் வாழ்கையின் சுக துக்கங்களை தாங்கி கொள்ள முடியாமல் போகிறது. ஆக வாழ்கையை வாழ்வின் அர்த்தங்களை அதன் சுமைகளை கற்று தரவேண்டும்.

மேலும் குழந்தைகளிடம் சொல்லப்படும் நீதி கதைகளும் வரலாற்று உதாரணங்களும் அவர்களை நல்ல மனிதர்களாக மாற்ற உதவுகின்றன. இவை அவர்களை ஆரோக்கியமான பாதையில் பயணிக்க வைக்கின்றன. துரதிஸ்டவசமான இன்றைய குடும்ப சிதைவுகள் தனி குடும்பங்களாக பிரிந்து விட்டதால் பாட்டி-தாத்தாக்களின் வேலையை இன்று பெற்றோர் தான் செய்ய வேண்டும். மேலும் இன்றைய சூலில் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட முடியாமல் போகிறது.

இதனால் எந்த எதிர்பார்ப்போ நெருக்கடியோ இல்லாத குழந்தைகளின் உலகத்தை நாம் இழக்கிறோம் .குழந்தைகளின் உலகம் வசீகரமானது எப்பொழுதும் இன்பம் மட்டுமே இருக்க கூடியது.அந்த உலகில் நீங்கள் அனைவரும் குழந்தைகளே.

குழந்தைகளின் மீதான வன்முறைகள் அதிகரித்து வரும் சமுதாயத்தில் வாழ்ந்து வரும் நாம் நம் குழந்தைகள் நம்மிடம் எதையும் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் ஒரு நல்ல நண்பர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இதனால் அவர்களுடன் அதிக நேரம் செலவிடுதல் கட்டாயமாகிறது.


இந்த பரந்த உலகில் இருந்து நாள்தோறும் குழந்தைகள் புதுப்புது விசயங்களை கற்கிறார்கள். ஒரு பெற்றோராக அவர்கள் கற்று கொள்வதை அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் நெறியாள்கை செய்து தீயதை விளக்கி அவர்களுக்கு புகட்ட வேண்டும். குழந்தைகள் முன் தீய வார்த்தைகள் பேசுவதையோ செய்கைகள் செய்வதையோ நிறுத்த வேண்டும். அர்த்தம் தெரியாமல் பாடும் ஆங்கில போயம்கள் மட்டும் போதாது. அவர்கள் பேசும் பேச்சுக்களின் பொருளை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.நீதி கதைகள் சொல்வதன் மூலம் அவர்களை சிறந்த மனிதர்களாக்க முடியும் . அன்று நம் வளர்ந்த சூழ்நிலையில் நம் அறிவும் குறைவாக இருந்தது விஞ்ஞான முன்னேற்றமும் குறைவாக இருந்தது.ஆனால் இன்று குழந்தைகள் வாழும் சூழல் வேறு . திரும்ப திரும்ப இதை சொல்ல காரணம் ஒரு பெற்றோராக நாம் இன்னும் பக்குவப்பட வேண்டும் என்பதுதான் .ஏனெனில் பெருபாலான நம்மவர்கள் வாழ்வது பழைய Traditional வாழ்க்கையோ அதி நவீன (modern) வாழ்க்கையோ இல்லை .கிட்டத்தட்ட ரெண்டு கேட்டான் நிலை.


அதி முக்கியமானது உறவுகளின் முக்கியத்துவத்தை புரிய வைக்க வேண்டும். இது பின்னாளில் சமூகத்தோடு அவர்கள் சேர்ந்து இயங்கவும் உதவும் .பெரியோரை மதிக்கும் பண்பு ,நட்பு பாரட்டுதல் போன்றவற்றை சொல்லி தர வேண்டியது பெற்றோரின் கடமையாகும்

இவ்வாறு குழந்தைகளை நாளைய உழைக்கும் எந்திரங்களாக மட்டும் மாற்றாமல் நல்ல மனிதம் கொண்டவர்களாகவும் மாற்ற உதவும்


பி.கு :

அனைத்தையும் கற்று கொடுக்கிறோம் என்ற Spoon Feeding செய்வதாகவும் இத்தனை கற்று கொள்ளும் அவர்கள் இதையும் தானே கற்று கொள்வார்கள் என்பது சிலரின் வாதம். பெற்றோர்கள் குழந்தைகளின் மேல் எதையும் திணிக்காமல் குழந்தைகளாகவே அவர்களை வளர விடவேண்டும் பின் வளர்ந்து தாங்களே கற்று கொள்ளட்டும் என்பது அவர்கள் கருத்து. இதற்க்கு என் பதில் அறிவு என்பது வேறு அனுபவம் என்பது வேறு . தீ சுடும் என்று அறிவுக்கு முதலில் அனுபவமே காரணம். ஆக நல்லது எது கேட்டது எது என சீர்தூக்கி பார்க்கும் அளவுக்கு அவர்களுக்கு அனுபவம் வரும் வரை இது தேவை .


என் பதில் அவர்களுக்கு திருப்திகரமாக இல்லை. என்னதான் இருந்தாலும் அனுபவமற்ற ஒரு அற்ப பதரின் பதிலில் பக்குவம் இல்லாமல் இருக்கலாம்

No comments:

Post a Comment