tag:blogger.com,1999:blog-76196112331808368122024-03-14T13:33:41.023+05:30வாசகன் சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-79242138451477975632020-06-12T22:29:00.001+05:302020-06-13T07:54:09.398+05:30தெய்வா - சிறுகதை <div><i>பீப்ப்ப்ப்ப்ப் பீபீ பீப்ப்ப்ப்ப்</i> , காதுக்குள்ள வந்து ஹாரன் அடித்து எழுப்பிவிட்டது அந்த கண்டெயினர் லாரி. கண்களை துடைத்தபடி கண்ணாடிக்கு வெளியே எட்டி பார்த்தேன். பஸ் டோல்கேட்டில் நின்று கொண்டு இருந்தது. பக்கத்து சீட்டில் இருந்தவர் காது கொள்ளாத வார்த்தைகளால் அந்த லாரிக்காரனை திட்டிக் கொண்டிருந்தார். </div><div><br></div><div>நேரம் அதிகாலை 3 மணி என மொபைல் போன் காட்டியது. இரவு 9 மணி வரை அன்றைய தினம் நன்றாகதான் இருந்தது. அப்பா போன் செய்து அந்த விசயத்தை சொல்லாத வரை. விசயத்தை கேட்டவுடன் ,</div><div><br></div><div>"<b>அப்பா... என்ன சொல்றீங்க ?. எப்புடி?. என்ன ஆச்சு ?. "</b> </div><div><br></div><div>கத்தியே விட்டேன். . <br></div><div><br></div><div>என்னால் அவர் சொன்ன வார்த்தைகளை நம்பவோ , ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை. ஆனால் அவர் தழுதழுத்த குரலில் சொன்னது அதிர்ச்சியடைய வைத்து விட்டது. </div><div><br></div><div>அடுத்த சில நிமிடங்களில் சென்னையில் இருந்து ஊருக்கு கிளம்பிவிட்டேன். ஆன்லைன்ல டிக்கெட் புக் செய்ய எல்லாம் நேரமில்லை. நேராக பெருங்களத்தூர் சென்று பஸ் ஏறிவிட்டேன். </div><div><br></div><div>இருக்கையில் அமர்ந்த நொடி முதல் அப்பா உடைந்து போய் சொன்ன வார்த்தைகள் திரும்ப திரும்ப எதிரொலித்தன </div><div><br></div><div><i style="font-weight: bold;">" தெய்வா அத்தை , நம்மள எல்லாம் விட்டு போயிட்டா</i> " .</div><div><br></div><div>தெய்வானை அத்தை. கருத்த தேகம் , எழும்பும் தோலுமா குள்ளமா இருக்குற உடம்பு. உழைச்சி உழைச்சி ஓடா வத்தி போய் கிடக்கிற உடம்பு. நாத்து நடுறதுல இருந்து ஆடு மேய்க்கிறது வரைக்கும் இத்தன வருசமா எல்லாத்தையும் பாத்தவ.</div><div><br></div><div>குடும்பத்துக்கு மூத்த புள்ள, அடுத்து எங்க அப்பா . மூணாவதா ஒரு புள்ள பொறந்து வயசுக்கு வர்ற வயிசு வரை இருந்து செத்துப்போச்சாம்.</div><div><br></div><div><br></div><div>14 வயசுல முருகேசன் மாமாவுக்கு வாக்கப்பட்டு போனப்போ கொஞ்சூண்டு நிலம் மட்டுமே இருந்துச்சாம். இன்னிக்கு இங்க உருவாகி இருக்குற தோப்பு தொறவு ,காடு மேடு எல்லாம் இந்த 50 வருசமா அவ பாடுபட்டு உருவாக்குனது. </div><div><br></div><div> அப்பத்தா அடிக்கடி சொல்லும். எம்மவ எவ்வளவு சாமர்த்தியசாலி தெரியுமானு . ஒரு பைசா விரயமா செலவு பண்ண மாட்டா. யாருக்கும் கெட்டது நினைக்க மாட்டா</div><div><br></div><div>இரண்டு பசங்க, ஒரு பொம்பள புள்ள. இன்னிக்கு தோப்பு, தேங்காய் களம் , பைனான்சினு பல தொழில் பண்ணி சிறப்பா இருக்குறாங்க பசங்க ரெண்டு பேரும். போன வருசந்தான் தோப்புக்குள்ள பெரிய வூடு கட்டி இருந்தாங்க. மருமகளுக, பேரன் பேத்தி வந்த பொறவும் எல்லா கணக்கு வழக்கும் அத்த தான் பாத்துட்டு இருந்தா. </div><div><br></div><div>மனசுக்குள்ள இந்த நினைப்புகள் ஓடிக்கிட்டே இருக்க எப்ப தூங்கி போனேன்னு தெரியல. விடியக்காலை 6 மணிக்கு ஊரு வந்தப்பதான் முழிப்பு தட்டுச்சு. </div><div><br></div><div>எறங்கி அத்தை ஊருக்கு போற டவுன்பஸ்ல ஏறி அப்பாவுக்கு போன் அடிச்சிட்டு ஒக்காந்தேன். பஸ் போற வேகத்த விட என் மனசு அங்க பறந்து கிட்டு இருந்துச்சு. பஸ் ஸ்டாப்புக்கு வண்டியோட வந்து அப்பா ரெடியா நின்னுட்டு இருந்தாரு. மொகத்த பாத்தவுடன் நேத்து கேட்ட அதே கேள்வி " <i>எப்படிப்பா திடீர்னு. நல்லாதானே இருந்தாங்க அத்த. என்ன ஆச்சு? "</i></div><div><br></div><div><i>"மொதல்ல ஒக்காரு வண்டில" </i>என்று கூறிவிட்டு மௌனமாக வண்டியை ஸ்டார்ட் ஆக்கினார். போற வழியில் சொல்ல ஆரம்பிச்சார் <i>"உனக்கு தான் தெரியுமேடா. இந்த தலைவலி அவளுக்கு அடிக்கடி வரும்னு. வந்தா சோறு தண்ணி இல்லாம கிடப்பா. ஆஸ்பத்திரி கூப்பிட்டா வேல கெட்டு போவும்னு வரமாட்டா . இந்த நாய்களும் அவள ஆஸ்பத்திரி கூட்டிட்டு போனா ஆடு மேய்க்கிறது யார்னு கூட்டிட்டு போவல. காசு காசுன்னு பீய திங்கிற நாய்க . " </i></div><div><br></div><div>என பொறிஞ்சு தள்ளிக்கொண்டே வந்தார். அப்பாவுக்கும் மச்சானுகளுக்கும் எப்பவுமே ஒத்து வராது. </div><div><br></div><div>தோட்டத்துக்குள் வண்டி நுழையும் போதே செல்வியின் கதறல் ரோட்டுக்கு கேட்டது</div><div><br></div><div><i> " அம்மா , பாடு பட்டு பாடு பட்டு, இன்னுக்கு என்னைய இப்புடி பாட வச்சிட்டு போயிட்டியே </i></div><div><i><br></i></div><div><i>இனி எனக்குனு கவலைப்பட யாரு இருக்கா ? " </i></div><div><br></div><div>செல்வியில் ஒப்பாரி என் மன தைரியத்தை வீட்டுக்குள் நுழையும் முன்னரே அசைத்து விட்டது. </div><div><br></div><div><i>"மெட்ராஸ்ல இருந்து மருமவன் வந்துட்டானப்பா "</i> ஊர் பிரசிடண்ட் சத்தமா சொன்னார். </div><div><br></div><div>வீட்டுக்குள் கிழக்கு மூலையில் கிடத்தப்பட்டிருந்தாள் தெய்வா அத்தை. வா தங்கம் , வா சாமி என இந்த வீட்டு வாசலுக்கு வரும் போது எல்லாம் கூப்பிட இனி யாரும் இருக்க போவதில்லை. தலையில் இருந்து காலு வரை வாஞ்சையா நீவியுட்டு எளைச்சு போயிடுச்சு புள்ள, அங்க சோறு ஒத்து வரலையோனு கேக்க அந்த வீட்டில் இனி எனக்கு யாருமில்லை</div><div><br></div><div>என்னை பார்த்தவுடன் ஓய்ஞ்சு போயிருந்த செல்வி , <i>" பாரு தியாகு... அத்தைய பாரு சாமி .நம்மள எல்லாரையும் விட்டு போயிட்டாளே</i> " என்று கட்டி புடிச்சிட்டு கதற ஆரம்பித்தாள். விடிய விடிய அழுது தொண்டை தண்ணி வத்தி போயி அவ குரல் வாயிலிருந்து வெளில கூட வரலை. ஆனா என் தோளில் அவ குலுங்கி குலுங்கி விட்ட கண்ணீர் என்னை முழுதும் அசைத்தது. ஆம்பள அழக்கூடாதுன்னு இருந்த இறுமாப்பு ஒடைஞ்சி அழ ஆரம்பிச்சேன். அம்மா வந்து என்னைய செல்விகிட்ட இருந்து பிரிச்சு அத்தை கிட்ட கூட்டிட்டு போனாள்..மூஞ்சி மட்டும்தான் தெரிஞ்சுது. வாயி ஆன்னு தொறந்த மேனிக்கு இருக்க கண்ணு மூடி இருந்துது. செத்த பொறகு இன்னும் ஒல்லியாக தெரிந்தாள் தெய்வா அத்தை. அப்பா கொண்டு வந்த மாலையை வாங்கி போட்டுவிட்டு கால் மட்டில் ஒக்காந்து அழ ஆரம்பிச்சேன். உடனே அம்மா வெளில் கூட்டிட்டு போய் மத்த ஆம்பிளைக கூட சேர்ல ஒக்கார வச்சாள்..</div><div><br></div><div>ஊட்டுக்கு வெளில மரத்துல அத்தை எனக்காக கட்டுன ஊஞ்சல் அனாதையா கிடந்துச்சு. எல்லா வருசமும் முழு பரீட்சை லீவு விட்டா போதும். ஒடனே அத்தை வீட்டுக்கு ஓடி வந்துடுவேன். மச்சானுக ரெண்டு பேரும் இருப்பாங்க. என்னை தங்கம்னு தான் எப்பவுமே கூப்பிடுவாள் அத்தை. எத்தனை பவுனுங்க அண்ணினு அம்மா கேலி செய்யும். நான் வந்துட்டாலே ஒரு கோழியின் ஆயிசு முடிஞ்சுடும். சாயங்கால காப்பிக்கு பொரி வறுத்து தருவாள். உளுந்து வடை , போண்டா சுட்டு தருவாள். இளநி , தெலுவு, பனங்கிழங்கு , நொங்கு என தினமும் திங்கறதுக்கு கிடைச்சுக்கிட்டே இருக்கும். ஊருக்கு போகும் போது முறுக்கோ, கச்சாயமோ சுட்டு குடுப்பாள். </div><div><br></div><div>அதுவும் எங்க மணி நாயி அந்த போண்டாவ தூக்கி போட்டா என்னமா கேட்ச் புடிக்கும் தெரியுமா.. தாண்டி ரோட்ஸ்னு செல்ல பேர் வச்சு இருந்தேன் </div><div><br></div><div>அப்பதான் எங்க நாயி, பூனை எல்லாம் காணாமேனு தொண்டுபட்டி பக்கம் கண்ணு போச்சு. ஆனா அங்க கோழி மட்டும்தான் நின்னுட்டு இருந்துச்சு. </div><div><br></div><div>எங்க அத்தையினால மட்டும்தான் நாய், பூனை , கோழி, ஆடு எல்லாத்தையும் ஒத்துமையா வளர்க்க குடியும். பூனைய கண்டு நாய் பயந்துக்கும்.கோழிக்குஞ்சு நாய், பூனை மேல ஏறி விளையாடும். ஆட்டுக்குட்டிக வூட்டுக்குள்ள வரை போயி வரும். ஆனாலும் வெள்ளை பூனை மாரிய தான் அத்தைக்கு ரொம்ப புடிக்கும். வாடி, போடி என கொஞ்சிக்கிட்டே இருப்பாள். கிளீஸ் கிளீஸ்னு சத்தம் போட்டால் போதும் , அடுத்த நிமிசம் அவ முன்னே வந்து நிக்கும் மாரி. </div><div><br></div><div>அதிகாலை எழுத்ததில் இருந்து அவள் செய்யும் வேலைகள் மூன்று ஆளுக பளுவுடையது. பால் கறக்கிறது, ஆடு மேய்க்க ஓட்டிபோடுறது , காட்டு வேலைகன்னு ராத்திரி வரைக்கும் கால்ல சக்கரத்தை கட்டாத கொறையா ஓடிக்கிட்டே இருப்பா. </div><div><br></div><div>எங்கத்தை வெயில்ல ஆடு மேய்ச்சுதான் கறுத்து போயிடுச்சுன்னு நினைவு தெரிஞ்ச நாள் வரை நான் சொல்லிக் கொண்டு இருந்ததுண்டு. </div><div><br></div><div>இன்னிக்கு உருவாகி இருக்குற எல்லாமே அவ சாமர்த்தியம்தான். மாமன் வாயில்லா பூச்சி. சத்தமா அதிர்ந்து பேசிக்கூட நான் பாத்ததில்லை. கடுமையான உழைப்பும் , சேமிப்புமேதான் இத்தனைய உருவாக்கி வச்சு இருக்கு. </div><div><br></div><div>செல்வியில் தேம்பல் இன்னும் நிக்க வில்லை.இரவு முழுக்க அழுது கண்ணீர் தீர்ந்து போயிருந்தாலும் கேவிக் கொண்டு இருந்தாள். </div><div><br></div><div>செல்விய பிளஸ் டூ முடித்தவுடன் கட்டிக் கொடுத்துட்டாங்க. புகுந்த வீட்டுலயும் விவசாயந்தான். ஆனா அந்த மனுசன் மொட குடிகாரன். பையன் பொறந்து மூணு வருசம் ஆகுறதுக்குள்ளே சாரயாம் குடிச்சுட்டு வண்டி ஓட்டிட்டு போயி ஆக்சிடெண்ட்ல செத்து போனான். செல்விதான் எல்லா வேலையும் பாத்துட்டு இருக்கா. அவங்க மாமனார் , மாமியார் ரொம்ப நல்ல டைப். </div><div><br></div><div>ஆயிரம் வசதிகள் இருந்தாலும் அத்தை ஆதங்கப்படுறது செல்விய நினைச்சுத்தான். இவ வாழ்க்கை இப்புடி ஒண்ணுமில்லாம ஆகிப்போச்சே.இன்னிக்கு எல்லாரும் நல்லா இருக்கும் போது எம் மவ மட்டும் இப்டி கஷ்டப்படுறாளேங்கிற பொலம்பல் இருந்துக்கிட்டே இருக்கும். செல்வி மவன் இப்போ டிப்ளமோ படிச்சுட்டு இருக்கான். </div><div><br></div><div>செல்வி, அத்தையோட ஜெராக்ஸ் காப்பி. அதே கருப்பு ஆனா மாமா மாதிரி கொஞ்சம் வளர்த்தி. உளுந்து மாவு தோசை கலர் நானு , ராகி மாவு தோசை கலர் நீயின்னு நான் அவள கிண்டல் செய்றதுண்டு . </div><div><br></div><div>சொல்லப்போனா இன்னிக்கு தாயப்போல தான் புள்ளயும் இருந்தா. காஞ்சு காஞ்சு கருவாடா போயி. அவ கைய புடிக்கும் போது கருப்பா காப்பு காச்சு இறுகி கிடக்கும்... இரும்பு மனுஷி அவ. அத்தைய போல எம்மேல பிரியமா இருக்குற ஆள். </div><div><br></div><div><i>"நேராயிட்டு இருக்கு செந்திலு, எடுத்தரலாம். நல்லா வாழ்ந்தவ , கடைசி பயணத்தையும்.நல்லபடியா செஞ்சு வைக்கனும்ல " </i></div><div><br></div><div>வாய் திறந்தார் பிரசிடெண்ட்..</div><div><br></div><div>பெரிய மச்சான் தலையசைக்க, தேர்கட்டி தெருவெல்லாம் பூப்போட ஆரம்பித்தது அவளது இறுதி யாத்திரை. அந்த மீளா நித்திரை </div><div><br></div><div>சுடுகாட்டுல இருந்து திரும்பி வந்த பொறகும் எல்லாரையும் போல என்னால சகஜமா பேச முடில. மாமன் மேல விட்டத்தை பாத்துக்கிட்டே ஒக்காந்துட்டார். இடிஞ்சு போயிட்டார் மனுசன் .</div><div>ஐம்பது வருச வாழ்க்கைல தலைப்பிரசவத்துக்கு தான் எங்க வீட்டுக்கு வந்து கொஞ்ச மாசம் இருந்து இருக்கா. சின்ன மச்சானும் செல்வியும் பொறந்தப்ப் , பொறந்த வூட்டுக்கு கூட வரலையாம்..</div><div><br></div><div>மாரியாத்தா கோயில் திருவிழால இருந்து எப்போ எங்க வூட்டுக்கு வந்தாலும் ரவைக்கு தங்குறதுல்ல. அய்யோ நான் இல்லாட்டி என்னாகுறது ? யார் பால் கறக்கறது ? ஆட்டுக்குட்டிக்கு யார் பால் கொடுக்கறது ? கோழிகள யார் புடிச்சு அடைக்கிறது ? . நான் போயே ஆகனும்னு போயிடுவா. </div><div><br></div><div>வேற எந்த ஊருக்கோ , ஒறம்பறைக்கோ எங்கும் போனது இல்ல. வீடு, வீட்ட வுட்டா காடு ,தோட்டம், இப்போ நிரந்தரமா காடு.</div><div>இதுதான் அவ வாழ்க்கை. </div><div><br></div><div>அழுகை சத்தம் கொறைஞ்சு சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பிச்சது வூடு. மத்தியானம் ஆன போதும் பல்லுல பச்சத்தண்ணிகூட படாம செல்வி அனத்திக்கிட்டே கிடந்தா. </div><div><br></div><div>அப்பா முகத்தில் ஆத்திரம் வெளிப்பட்டது. மச்சானுகள் அத்தைய கூட்டிட்டு போய் அந்த தலைவலிக்கு சரியான வைத்தியம் பாக்கலன்னு அவருக்கு அந்த கோபம். இப்ப சம்பாதிச்சு எல்லாத்தையும் ஆக்கி வச்சுட்டு இப்டி இல்லாம போயிட்டாளேன்னு ஆதங்கப்பட்டுக்கிட்டே இருந்தாரு..</div><div><br></div><div>மூணாம் நாள் காரியம் , காடு ஆத்துறது , கூரை மேல சோறு போடுறதுன்னு எல்லா சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு </div><div><br></div><div><div>கிளம்பினேன். மூன்று நாள் லீவுக்கு பிறகு அலுவலகம் வருவதால் அதிக வேலை இருந்தது. வேலைப்பளுவில் அத்தை குறித்த நியாபகங்கள் கரைந்து போயின. </div><div><br></div><div>அப்பா பதினாறாம் நாளுக்கு வர அழைத்து போது திரும்பவும் போயிருந்தேன். பொலிவிழந்து காணப்பட்டது புது வீடு. வாப்பா என்பதை தாண்டி மாமன் எதுவும் பேசவில்லை. அத்தை இருந்த போதே அவர் வார்த்தைகளை எண்ணி எண்ணி தான் பேசுவார். இனி அதுவும் இருக்க போவதில்லை. </div><div><br></div><div>செல்வி என்னை பார்த்தவுடன் கேவ ஆரம்பித்தாள். அண்ணிமார்களின் அதட்டலால் அமைதியானாள். எல்லாமே இங்க மாறிடுச்சுங்கிறது தெளிவா தெரிஞ்சுது. </div><div><br></div><div>ஆடு ,மாடு மேய்க்க ஆள் போட்டு இருப்பதாக பெரிய மச்சான் அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தார். மச்சானின் பசங்க ஓடி விளையாடிக்கிட்டு இருந்தாங்க. </div><div><br></div><div>அமைதியா வெளில வந்து வாசல்ல போட்டு இருந்த சேர்ல ஒக்காந்துட்டு இருந்தேன். மணி மெல்லமா வந்து என் பக்கத்துல நின்னு ஊட்டுக்குள்ள பாத்துக்கிட்டே இருந்துச்சு. </div><div><br></div><div>பசிக்கும் போலன்னு நினைச்சு பெரியக்கா கிட்ட சோறு போட சொன்னேன். அக்கா வந்து அதனோட தட்டுல சோறு வச்சாங்க. அக்கா மூஞ்சிய பாத்துட்டு அப்டியே படுத்துடுச்சு .</div><div><i><br></i></div><div><i> " சனியன் . அவிய வந்து போட்டாதான் திம்பீகளோ. தின்னா தின்னு. இல்லாட்டி சாவு. நான் என்ன செய்யறது" </i>திட்டிவிட்டு உள்ளே போய் விட்டாள் </div><div><br></div><div>அதனோட மொகத்த பாக்க பாவமா இருந்துச்சு. பதினைஞ்சு நாளா , தெய்வானை வந்து சோறுபோடுவாள்னு காத்து கிடக்கு அந்த நாயி. </div><div><br></div><div><i>"தினமும் வந்து ஊட்டுக்குள்ள பாத்துக்கிட்டே நிக்குது. நாங்கெல்லாம் போட்டா திங்க மாட்டேங்குது"</i> மழை வரும் அதிசயமாய் வாய் திறந்தார் மாமா. </div><div><br></div><div>ஏய் நாயே... செத்து பொயிட்டா தெய்வா. அவ வரமாட்டா. வரவே மாட்டா. இந்நேரம் அவள மண்ணு தின்னு இருக்கும். இத உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது. இப்டியே திங்காம கிடந்தா நீ செத்துடுவே. </div><div><br></div><div>ஆனா பாரேன். ஆடுகளுக்கு காவல் காக்கிற வேலை பார்க்கிறதுனால தான் உன்னைய நினைக்குறாங்க. சோறு போடுறாங்க . உன்னைய பத்தி பேசுறாங்க. அந்த மாரி என்ன ஆச்சுன்னு யோசிக்க கூட யாரும் இல்ல.</div><div><br></div><div>நினைத்துக்கொண்டு சிரித்து கொண்டு இருந்தேன். தன் வாலால் தடவிக்கொண்டே படுத்துக் கொண்டது மணி </div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div></div>சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-69715358499202624352018-08-27T22:23:00.000+05:302018-08-27T22:36:41.281+05:30ஒரு வீடும் சில ஞாபகங்களும்<br />
<br />
வெகு காலத்துக்கு பிறகு போன வாரம் என்னோட அப்பிச்சி (அம்மாவின் தகப்பனார் ) வீட்டுக்கு போயிருந்தேன். அவரும் பெரியப்பாவும் இறந்த பிறகு, நான் எங்க வீட்டு செல்லும் போதெல்லாம் பெரியம்மா அங்கு வந்துவிடுவதால் அந்த ஊருக்கு செல்வதற்கான அவசியம் இல்லாமல் போனது<br />
<br />
ஓலப்பாளையம் என்ற ஊரில் இருந்து ஒரு காத தூரம் நடந்து செல்ல வேண்டும் அந்த ஊருக்கு . கண்ணபுரம் எனப்படும் அந்த கிராமத்தின் மாரியம்மன் கோவில் பாடல் பெற்ற ஸ்தலமாகும் , எப்பொழும் என்னை வரவேற்கும் ஈசுவரன் கோவில் தேரை இன்று காணவில்லை . ஆனால் கோவில் புதுப்பொலிவுடன் கும்பாபிஷேகம் முடித்து வரவேற்றது .<br />
வீட்டுக்கு போனபிறகுதான், தேர் பாதுகாப்பாக இருக்க பெரிய ஷெட்டில் வைத்து பூட்டி வைத்து விடுவார்கள் இப்போதெல்லாம் என்பது தெரிந்தது . ஒருவேளை கோவில் சிலைகளை போல் அதையும் யாரேனும் திருடிவிடுவார்கள் என்ற பயமாக கூட இருக்கலாம் . ஆமா சத்தியுள்ள சாமி தேர் அல்லவா<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://4.bp.blogspot.com/-_O-57AnrbPw/W4QpFR0nT-I/AAAAAAAACBI/vQzhRD_LOQ0Tf9xlG5AJtAzpK4YrlNO7gCLcBGAs/s1600/IMG_20180804_121845.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="225" src="https://4.bp.blogspot.com/-_O-57AnrbPw/W4QpFR0nT-I/AAAAAAAACBI/vQzhRD_LOQ0Tf9xlG5AJtAzpK4YrlNO7gCLcBGAs/s400/IMG_20180804_121845.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">வீட்டின் முன் வாசலில் இருந்து </td></tr>
</tbody></table>
<br />
<br />
தேரோட்டம் பற்றிய இனிய நிகழ்வுகள் எண்ண அலைகளில் வந்து மிதக்க ஆரம்பித்தன . அலங்கரிப்பட்ட தேர், இரவில் கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் . அதை வடம் பிடித்து நிலை சேர்க்க ஒரு பெரிய கும்பலே படாதபாடு பட்டு இழுக்கும் . ஓரிருவர் தேரின் ஓட்டத்தை கட்டுப்படுத்த மரக்கட்டையை தேர் சக்கரத்தின் அடியில் அவ்வப்போது வைத்து அதை கட்டுப்படுத்தி கொண்டே இருப்பார்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-hBA2CQveoYs/W4QpTpygO5I/AAAAAAAACBM/RkcrlEPhjUYNc6bNQRMuOovGAVuDruBLQCLcBGAs/s1600/IMG_20180804_114657.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="225" src="https://4.bp.blogspot.com/-hBA2CQveoYs/W4QpTpygO5I/AAAAAAAACBM/RkcrlEPhjUYNc6bNQRMuOovGAVuDruBLQCLcBGAs/s400/IMG_20180804_114657.jpg" width="400" /></a></div>
<br />
<br />
தேர்திருவிழா கடைகள் , மாவிளக்கு கொண்டு போறது , மாரியம்மன் கோயில் சாட்டு பொங்கல் , மாட்டு சந்தை எல்லாமே விரிந்தது . ஆனா எல்லாமே அங்கே சிறு சிறு மாற்றங்களோடு இன்னும் இருந்துகிட்டு தான் இருக்கு . நாம தான போறதில்லை. இதுல என்ன பீலிங்கு என மனசாட்சி மானாவாரியாக திட்ட மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்<br />
<br />
அடுத்து காளை மாட்டு சாமி கோவில் . இறந்த கோவில் காளையின் நினைவாக அமைக்கப்பட்ட சிலை மட்டும்தான் இருக்கும் வேறு கோயிலோ கோபுரமோ இல்லை . ஆனா நாங்க சொல்லுறது காளை மாட்டு சாமி கோவில் என்றே . தீவிர முருக பக்தரான எங்க அப்பிச்சி சொல்லிப்போன கதைகள் எல்லாம் நினைவுகளில் வந்துமோத பொடி நடை நடந்து ஊரு வந்து சேர்ந்தேன்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-OXtfGbGSafg/W4QpcrmCZTI/AAAAAAAACBQ/jKLiyOg8Cs42SKldIyfAFw0vme9cJwQ1QCLcBGAs/s1600/IMG_20180804_114801.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="225" src="https://2.bp.blogspot.com/-OXtfGbGSafg/W4QpcrmCZTI/AAAAAAAACBQ/jKLiyOg8Cs42SKldIyfAFw0vme9cJwQ1QCLcBGAs/s400/IMG_20180804_114801.jpg" width="400" /></a></div>
<br />
ஊரில் என்னை எப்போதுமே வரவேற்பது எங்க செல்வி பெரியம்மா வூடு . செல்வி பெரியம்மா இறந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன் . அந்த கலையான மோகம் , அம்பு இப்பதான் வாரீங்களா (அன்பரசு என்பது எனது இன்னொரு பெயர் )<br />
என எங்களை அந்த ஊரில் எப்பொழுதும் வரவேற்கும் குரல் செல்வி பெரியம்மாவுடையது .அவர் தவறிய பிறகு வெகு காலம் நான் அந்த வழியை தவிர்த்து வந்தேன் . இன்று வந்த போது அங்கு ஒரு கணம் தெருவில் நின்று வீட்டை உத்து பார்த்தேன் . அந்த வீடும் பலப்பல மாற்றங்களையம் மனிதர்களையும் கண்டு விட்டது . இருந்தும் எனக்கு அது அதே செல்வி பெரியம்மா வீடுதான்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-8h-HrtRGi7c/W4QpmBQGQ2I/AAAAAAAACBU/HV3jSFX2uokdfQxX3JdmAOyW0Q7KP-89gCLcBGAs/s1600/IMG_20180804_121717.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="225" src="https://1.bp.blogspot.com/-8h-HrtRGi7c/W4QpmBQGQ2I/AAAAAAAACBU/HV3jSFX2uokdfQxX3JdmAOyW0Q7KP-89gCLcBGAs/s400/IMG_20180804_121717.jpg" width="400" /></a></div>
<br />
<br />
எங்க அப்பிச்சி வீட்டை அடைவதற்குள்ளே ஊரில் பல மாற்றங்கள் . சிதைந்து போய் கிடந்த ஊரின் பெரிய மனிதர் அரண்மனை (அப்படிசொல்றதுதான் வழக்கம்) , இல்லாம போன பெரிய மதில் சுவர் என நினைவுகளின் பிம்பங்கள் எல்லாம் வெறும் எச்சங்களாக மட்டுமே விரவி கிடந்தன . அதுசரி இப்பெல்லாம் ஒரு சராசரி கிராமத்தின் அடையாளம் என்பதே குட்டிசுவர்கள்தான்னு ஆகிப்போச்சு . இது மட்டும் என்ன விதிவிலக்காவா இருக்கப்போவுதுன்னு நானே எனக்கு பதில் சொல்லிக்கிட்டேன்<br />
<br />
அப்பிச்சி வீடு .முழு பரீட்சை லீவில் எங்கள் கோடைவாசஸ்தலம் . ஊருக்கு ஆறழகுனு சொல்லுவாங்க அது மாதிரி ஊட்டுக்கு முக்கியம் அதன் அம்சமாம் . அம்சம் அமைப்புங்கிறது இங்கே அதன் கட்டிடக்கலைய குறிக்கிறதுதான் நினைக்கேன் . எங்க பகுதிகளில் அந்த அமைப்புள்ள வீடுகளில் முக்கியமானது தொட்டி கட்டு வீடுன்னு சொல்லப்படற எங்க வூட்டை போன்ற வூடுகள். இரு அறைகள் இணையாக அதற்கு எதிராக இரு இணை அறைகள் நடுவில் பொது வாசல் . இரு வாயிற்கதவுகள் என இருக்கும் . நான்கு வூட்டு சனமும் ஒண்ணா உக்காந்து பேசி பழகிக்க வசதியா இந்த நாடு வாசல் இருக்கும் .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://3.bp.blogspot.com/-nvgutFILkM0/W4Qpx3T29AI/AAAAAAAACBY/d8ERVBRqAGIC5PoC_jUt3UU41UywmJ83gCLcBGAs/s1600/IMG_20180804_122215.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="900" height="400" src="https://3.bp.blogspot.com/-nvgutFILkM0/W4Qpx3T29AI/AAAAAAAACBY/d8ERVBRqAGIC5PoC_jUt3UU41UywmJ83gCLcBGAs/s400/IMG_20180804_122215.jpg" width="225" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">வீட்டின் பின்புறம் இருக்கும் வாழை மரம் </td></tr>
</tbody></table>
<br />
<br />
எங்க வீட்ல மூன்று குடும்பங்கள் இருந்தாங்க .<br />
<br />
ஒண்ணு எங்க அப்பிச்சி வீடு . அப்பிச்சி , பெரியப்பா , பெரியம்மா அங்க இருந்தாங்க . தாய் மாமா என்னோட சிறுவயதிலேயே தவறிடடார் . அதில்லாம ஒரு எருமை ரொம்ப காலம் எங்களோட இருந்துச்சு. வூட்டுக்கு அப்பாலே காடு . காடுன்னா சும்மா தரிசு நிலந்தான் மழையை நம்பி பயிர் மட்டுமே போடுவோம் . வேற எதுவும் பெருசா விளைவிக்க முடியாது. அதுவும் சொந்த நிலம் அல்ல . கந்தாயத்துக்கு தான் ஓட்டிக்கிட்டு இருந்தோம் .<br />
சொந்த நிலம் மொதல்ல இருந்துச்சு . இடையில் ஏற்பட்ட கடனுக்காக அதை வித்துட்டோம் . வாய்க்கா பாசனமுள்ள காடு அது ஓரு பெரிய எலுமிச்சை மரம் இருக்கும் . அவ்ளோதான் நினைப்புல இருக்கு . ரொம்ப வருஷம் ஆகிப்போச்சு<br />
<br />
அடுத்து வீட்டில் தவில் தாத்தா குடும்பம் ரொம்ப காலமாக அங்க வாடகைக்கு இருந்தாங்க . அவர் தவில் வாசிக்கும் அந்த அழகும் லாவகமும் தனி . தேரோட்டத்தில் தேரின் மேல் அமர்ந்து அவர் தவில் வாசித்து கொண்டு பவனி வருவதை பாக்க ஆச்சர்யமா இருக்கும்<br />
<br />
அடுத்த வீட்டில் டாக்டர் ஆத்தா வாடகைக்கு இருந்தார் . பேறுகால உதவியாளராக (அப்டித்தான் இந்த அறையின் பெயர் பலகையில் இருக்கும் ) அந்த கிராமத்தில் சேவையாற்றி ஓய்வுக்கு பிறகும் அந்த ஊரிலேயே பலகாலம் இருந்தாங்க . இப்போ கொஞ்ச வருஷம் முன்னாடித்தான் உடம்பு முடியாம அவங்க மக வூட்டுக்கு போய்ட்டாங்க<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://2.bp.blogspot.com/-x5P04pMsZhA/W4Qp5LvRAlI/AAAAAAAACBc/uAjsuHi2Gu8ApWPDRrwnV85Zm3uiLOUZACLcBGAs/s1600/IMG_20180804_121636.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="225" src="https://2.bp.blogspot.com/-x5P04pMsZhA/W4Qp5LvRAlI/AAAAAAAACBc/uAjsuHi2Gu8ApWPDRrwnV85Zm3uiLOUZACLcBGAs/s400/IMG_20180804_121636.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">வீட்டின் பின்புறம் </td></tr>
</tbody></table>
<br />
<br />
மூன்று குடும்பங்களையும் சேர்த்து கிட்ட்த்தட்ட 6 பேர் எப்பொழுதுமே அங்க இருந்துக்கிட்டே இருப்பாங்க<br />
<br />
கோடை விடுமுறையில் அந்த வீடே விழாக்கோலம் பூண்டதுபோல் இருக்கும் . ஒரு மாதம் முழுக்க விளையாட்டுகளும் பேச்சுக்குரல்களும் தான் . நான் , தவில் தாத்தா - நாச்சம்மாள் ஆத்தா வீட்டு பெயரன் பெயர்த்திகள் , டாக்டர் பாட்டியின் மகள் , பெயர்த்தி மற்றும் கொள்ளு பேரக்குழந்தைகள் என அந்த வூடே முழுக்க முழுக்க எங்களாலும் எங்கள் சந்தோஷங்களாலும் நிறைந்திருக்கும்<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://2.bp.blogspot.com/-AcUbObkrOGI/W4QrXN7Wf8I/AAAAAAAACBw/uH5B72bnH9k3qZ_jdcYPJhpRAXfTBkoKQCLcBGAs/s1600/IMG_20180804_121921.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="180" src="https://2.bp.blogspot.com/-AcUbObkrOGI/W4QrXN7Wf8I/AAAAAAAACBw/uH5B72bnH9k3qZ_jdcYPJhpRAXfTBkoKQCLcBGAs/s320/IMG_20180804_121921.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">பெரிய அப்பிச்சி </td></tr>
</tbody></table>
<br />
<br />
அந்த சமயங்களில் வரும் பொங்கல் தேரோட்டம் , அனைவரும் ஒன்றாக சேர்ந்து சென்ற துள்ளாத மனமும் துள்ளும் , பூவே உனக்காக போன்ற மறக்க முடியாத திரைப்படங்கள் , எந்நேரமும் விளையாடி மகிழ்ந்த தாயக்கரம் , சிறு சிறு சண்டைகள் , கோபங்கள் , ஏமாற்றங்கள் , அழுகைகள் என எல்லாமே எவ்வளவு இனிமையான வசந்த காலங்கள் . அதுவும் பக்கத்துக்கு ஊர்களில் உள்ள பெரியம்மா , சித்திகள் , மாமன்கள் என அனைவரும் வந்துவிட்டால் போதும். கேட்கவே வேண்டாம்<br />
<br />
ஒரு மாதம் முடிந்து அனைவரும் அவரவர் ஊருக்கு போனபிறகு ஒருவாரம் ஊடே வெறிச்சோடி கெடக்கும் என என் பெரியம்மா அடிக்கடி அங்கலாய்த்து கொள்வதுண்டு<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://3.bp.blogspot.com/-PQqhOjdsN1M/W4QreSj-1GI/AAAAAAAACB0/XcA2QZsHYawalFDAwFprTms4AXSH2TzNwCLcBGAs/s1600/IMG_20180804_122248.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="225" src="https://3.bp.blogspot.com/-PQqhOjdsN1M/W4QreSj-1GI/AAAAAAAACB0/XcA2QZsHYawalFDAwFprTms4AXSH2TzNwCLcBGAs/s400/IMG_20180804_122248.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தூறி ஆடி மகிழும் புளியமரத்தின் அடியில் தற்போது இருப்பது பக்கத்துக்கு வீட்டு மாடு </td></tr>
</tbody></table>
<br />
<br />
இன்று நான் போனபோது நான்கில் இரண்டு வூடுகள் பாதி விழுந்து விட்டிருந்தன . தவில்தாத்தா இறந்த பிறகு நாச்சம்மை பாட்டி பக்கத்தில் வேறு வாடகை வீட்டுக்கு மாறிவிட்டார் . ஒரே ஒரு அறையில் இப்பொழுது என் பெரியம்மா மட்டுமே தனியாக வசித்து வந்தார் . அப்பிச்சியியும் பெரியப்பாவும் தவறி சில ஆண்டுகளாகிவிட்டது<br />
<br />
எப்பொழுதுமே அஞ்சாறு பேர் இருந்துக்கிட்டே இருந்த வீடு . எங்க பெரியம்மா முதல்கொண்டு எல்லோருமே அதிகமா பேசிக்கிட்டே இருக்க கூடிய ஜனங்க . அதுலயும் இவிங்களுக்கு எல்லாம் மைக் செட் தேவையே இல்ல . வீட்டுக்குள்ளே பேசினா தெருமுனைக்கே கேக்கும். ஆனா அந்த மக்கள் நடமாட்டம் இப்போ சுத்தமா இல்லை . அங்க இடைவிடாம கேட்டுகிட்டே இருந்த பேச்சுக்கள் இப்போ எதுவுமே இல்ல . திண்ணை ஓரத்துல எப்பவுமே சத்தம் போட்டுக்கிட்டே இருக்குற ராட்டை இல்லை . அந்த வூட்ல தனியா இருக்கறது நிச்சயமா ரொம்ப பெரிய நரகம்னு எனக்கு தோணுச்சு .<br />
<br />
பெரியம்மா எப்படித்தான் இருக்காங்களோனு யோசிக்க ஆரம்பிச்சபோது தான் பக்கத்துக்கு வீட்டுல இருந்து அம்மணி ஆத்தா பெரியா எல்லாம் என்னை பாக்க வர ஆரம்பிச்சாங்க. அப்போதான் விளங்குச்சு சுற்றத்தாரோட அருமை . இதுல சுத்தி இருக்கிறவங்க எல்லாமே ஒரே சாதி கெடையாது . ஆனா அந்த நேசம் எப்படியோ அவங்களுக்குள்ள ரொம்ப இறுக்கமா பிணைக்கப்பட்டிருந்துச்சு. வந்தவுடனே எம்மொகத்த நீவி ரெண்டு சொட்டு கண்ணீர் வடிக்கமா அம்மணி ஆத்தா எங்கிட்ட பேசுனதில்லை<br />
<br />
ரொம்ப காலம் கழிச்சு போனதுல நிறைய மாற்றங்கள் இருந்துச்சு . இங்க இருந்த பாம்பு புத்தை எங்க ? . அந்த வேலி என்னாச்சு ? . இங்க இருந்த வேப்பமரத்தை எப்போ வெட்டுனீங்க ? பெரிய வூட்டு கிணறு என்ன ஆச்சு என என் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்வதே என் அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கு வேலையாகிப்போனது<br />
ஆடி மாசம் தூறி ஆடுற புளிய மரத்தடிக்கு போய் கொஞ்ச நேரம் உக்காந்து இதை எல்லாம் அசைபோட ஆரம்பிச்சேன் .<br />
<br />
அந்த ஊரு கொஞ்சம் சூடான நிலப்பரப்பு அதுலயும் ஆறு இல்லாத ஊரு . சிறுவயதிலே எனக்கு அங்கே வந்தாலே சூடு புடிச்சுக்கும் . மூத்திரம் பெய்யும் போது ரொம்ப எரியும் . சிரமப்பட்டிருக்கேன் . இப்போ என்னோட உடம்புக்கு தாங்குற சக்தி வந்துருச்சு போல . அதுசரி சென்னை சூட்டையே பார்த்துட்டோம் . மத்ததெல்லாம் இனி ஜுஜுபி தானே<br />
<br />
<br />
குட்டிமா கோவில் , ஆஞ்சநேயர் கோயில்னு ஊரோட இப்போதைய மக்கள் தொகையைவிட கோயில்கள் அதிகமா இருக்கோமோ தோன ஆரம்பிச்சுது .<br />
<br />
கொஞ்ச நேரம் கழிச்சு புதுசா அரசாங்க திட்டத்துல கட்டிக்கிட்டு இருக்குற வூட்டை பாக்க போனோம் . மத்தியான சாப்பிடும்போது கூட எப்பவும் உக்காந்து சாப்புடும் இந்த வாசப்படி ஓர திண்ணையில் உக்காந்த போதும் அதே பழைய நினைவுகள் தான்<br />
<br />
<br />
<br />
நினைவுகளினூடே நீந்தி நீந்தி மகிழ்ந்து முடிந்தது அந்த இனிய பயணம்<br />
<br />சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-40360891639017339622018-05-07T21:06:00.000+05:302018-05-07T22:53:41.306+05:30அந்தமான் காதலி<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
அது ஒரு அதிகாலை நேரத்தின் இன்பமயமான வேளை. ஆயிரமாயிரம் எதிர்ப்பார்ப்புகளுடனும் ஆனந்(தத்)துடனும் ஆரம்பமானதொரு குதூகலப் பயணம்.<br />
<br />
சென்னை வானூர்தி நிலையத்தின் மேற்கூரை நம்மை மேவிவிடுமோ என்ற அச்சத்துடன் கடந்து சென்று பயணிக்க தயாரானோம். காற்று வெளியினில் எங்களை கைப்பிடித்து முகில்களினூடே மூழ்கி சென்றது கோ-ஏர் பறவை<br />
<br />
செங்கதிரோன் முகமன் கூற ஆரத்தழுவி வரவேற்றது சாவர்கர் விமான நிலையம்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://4.bp.blogspot.com/-rQOSNXmS-nc/WvCCp4esGiI/AAAAAAAAB8A/G6AHbBMiAHE_p3qx8L9L2kE-Fj7LPYe2QCLcBGAs/s1600/29595500_10213395715702154_232508843710829179_n.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="621" data-original-width="960" height="206" src="https://4.bp.blogspot.com/-rQOSNXmS-nc/WvCCp4esGiI/AAAAAAAAB8A/G6AHbBMiAHE_p3qx8L9L2kE-Fj7LPYe2QCLcBGAs/s320/29595500_10213395715702154_232508843710829179_n.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">அந்தமான் செல்லுலார் ஜெயில் </td></tr>
</tbody></table>
<br />
<br />
சுதந்திர பறவைகளான நாங்கள் பார்க்க வேண்டிய முதல் இடமாக அமைந்து போனது அந்தமான் செல்லுலார் சிறை. ஒவ்வொரு செல்லும் பேசிய ஓராயிரம் வரலாறுகளையும் கதைகளையும் கேட்டுக் கொண்டே நடந்தோம் புரிந்தும் புரியாமலும்<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://3.bp.blogspot.com/-odHdKxQpXso/WvCDEpZWz5I/AAAAAAAAB8I/oWP6PqYjAygVkVOPDT5_j81SXChXo1m-QCLcBGAs/s1600/30264560_10213422211724538_37373482559864832_n.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="430" data-original-width="960" height="142" src="https://3.bp.blogspot.com/-odHdKxQpXso/WvCDEpZWz5I/AAAAAAAAB8I/oWP6PqYjAygVkVOPDT5_j81SXChXo1m-QCLcBGAs/s320/30264560_10213422211724538_37373482559864832_n.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">மரினா பூங்காவில் உள்ள ராஜீவ் காந்தி சிலை </td></tr>
</tbody></table>
<br />
<br />
சாவார்கர் துதியையும் புகழையும் கேட்டுக்கொண்டே இருந்த காதுகளுக்கு கொஞ்சம் விடுதலை அளித்தது மரினா அரங்கம்<br />
<br />
ஆம் அந்த மாலை வேளையில் அன்ன நடை போட்டோம் மரினா பூங்காவிற்கு . பரந்து விரிந்த சமுத்திரத்தை பின்புலமாக கொண்டு கண்டு களித்தோம் சாயும் அந்தியை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-UiBIvMI9Ny4/WvCDXHrRfnI/AAAAAAAAB8Q/OQGKmKOTOu4wgB223hhAy9-ZbqhS-vyEACLcBGAs/s1600/30222398_10213424167253425_5490647751249100800_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="635" data-original-width="960" height="210" src="https://1.bp.blogspot.com/-UiBIvMI9Ny4/WvCDXHrRfnI/AAAAAAAAB8Q/OQGKmKOTOu4wgB223hhAy9-ZbqhS-vyEACLcBGAs/s320/30222398_10213424167253425_5490647751249100800_n.jpg" width="320" /></a></div>
<br />
<br />
மீண்டும் சிறைப் பறவையாய் மாறி செல்லுக்குள் சென்று சிறை வரலாற்றை ஒளியும் ஒலியும் சேர்ந்ததொரு கலவையில் கண்டோம்<br />
<br />
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக நிறைவடைந்தது முதல் நாள். .<br />
<br />
இரண்டாம் நாளின் காலை வேளை மரினா அரங்கில் சுவையான இட்லியுடன் தொடங்கியது.<br />
<br />
பிரிட்டிஷ் தலைமையகமாக விளங்கிய ரோஸ் தீவு எங்களை புள்ளினங்களோடு வரவேற்றது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://4.bp.blogspot.com/-ZUEdQivnJV8/WvCDjdf3I8I/AAAAAAAAB8U/59rXtt8c9TUdk8ITWC7nRe_dRbTmWNVKACLcBGAs/s1600/30412412_10213422319967244_3900305860726882304_n.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="635" data-original-width="960" height="211" src="https://4.bp.blogspot.com/-ZUEdQivnJV8/WvCDjdf3I8I/AAAAAAAAB8U/59rXtt8c9TUdk8ITWC7nRe_dRbTmWNVKACLcBGAs/s320/30412412_10213422319967244_3900305860726882304_n.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ரோஸ் தீவின் சின்னங்களை பதிவு செய்கிறார் எங்கள் ஒளிஓவியர் மணி </td></tr>
</tbody></table>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://3.bp.blogspot.com/-RuqHSqvlFyM/WvCEOgJamkI/AAAAAAAAB8o/AYfo73_9LKUn1hSnECI1dJss6EJGv5mlgCLcBGAs/s1600/30227161_10213422323207325_8509940147507167232_n.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="635" data-original-width="960" height="211" src="https://3.bp.blogspot.com/-RuqHSqvlFyM/WvCEOgJamkI/AAAAAAAAB8o/AYfo73_9LKUn1hSnECI1dJss6EJGv5mlgCLcBGAs/s320/30227161_10213422323207325_8509940147507167232_n.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ரோஸ் தீவு </td></tr>
</tbody></table>
<br />
மருண்டு ஓடும் மானும்<br />
மயங்கி ஆடும் மயிலும்<br />
அழைத்து ஆர்ப்பரிக்கும் அலையும்<br />
துதிபாடி வரவேற்றன.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://3.bp.blogspot.com/-PVeTstfHyPU/WvCD4Zows2I/AAAAAAAAB8g/pZW434hAwn421TrkLa6HhalcTD5mZuO4QCLcBGAs/s1600/IMG_1104.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://3.bp.blogspot.com/-PVeTstfHyPU/WvCD4Zows2I/AAAAAAAAB8g/pZW434hAwn421TrkLa6HhalcTD5mZuO4QCLcBGAs/s320/IMG_1104.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ரோஸ் தீவின் நான்கு முக்கியமான சிலைகள் </td></tr>
</tbody></table>
<br />
<br />
ஆங்கில /சப்பானிய கால நினைவுச் சின்னங்களோடு பாழடைந்த கட்டிடங்களுமாக காட்சி அளித்த தீவின் எழில்மிகு கடற்கரைகளில் எங்கள் கால் தடங்கள் பரவின.<br />
<br />
<br />
<br />
அடுத்ததாக நார்த் பே தீவுக்கு எங்களை கொண்டு சென்றது அந்த சிறு கடலூர்தி.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://2.bp.blogspot.com/-P7Oq1UUme8M/WvCEifk_PRI/AAAAAAAAB8w/UVd4gofESqk2PhxpEptEYRCzGW_brvYEQCLcBGAs/s1600/30221507_10213422380288752_4064030941763338240_n.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="635" data-original-width="960" height="211" src="https://2.bp.blogspot.com/-P7Oq1UUme8M/WvCEifk_PRI/AAAAAAAAB8w/UVd4gofESqk2PhxpEptEYRCzGW_brvYEQCLcBGAs/s320/30221507_10213422380288752_4064030941763338240_n.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">அழகிய நார்த் பே தீவு </td></tr>
</tbody></table>
<br />
<br />
விளையாடி மகிழ அழகிய கடற்கரையும் கண்டு களிப்பெய்த கலங்கரை விளக்கமும் காட்சி அளிக்க ஆழ்கடல் நடையை நோக்கி மீண்டும் கடலுக்கே சென்றோம்.<br />
<br />
தலைக்கவசம் அணிந்து ஆழ் கடலின் தரையில் அழகிய நடை பயின்றோம். அந்த மானை தேடி வந்து இங்கு மீன்களோடு நாங்களும் நீரினுள் விளையாட ஆரம்வித்தோம்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://3.bp.blogspot.com/-n9GsHLaota4/WvCE_c6Av1I/AAAAAAAAB84/z9dWqy1-Fcg57JGUmtGPUTIfPW5YOvCFQCLcBGAs/s1600/30226757_10213427358733210_4411524401946689536_n.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="635" data-original-width="960" height="211" src="https://3.bp.blogspot.com/-n9GsHLaota4/WvCE_c6Av1I/AAAAAAAAB84/z9dWqy1-Fcg57JGUmtGPUTIfPW5YOvCFQCLcBGAs/s320/30226757_10213427358733210_4411524401946689536_n.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ஒரு அந்திமாலை பொழுதில் </td></tr>
</tbody></table>
<br />
<br />
எங்களை சுற்றிய மீன் கூட்டங்களினூடே தொட்டு விளையாடிக் கொண்டிருக்க ஆக்ஸிஜன் நிரம்பிய தலைக்கவசம் உதவியது. மீன்களை சாப்பாட்டு தட்டிலேயே பார்த்து பழக்கப்பட்ட நமக்கு தண்ணீரின் உள்ளேயே சென்று பார்ப்பது புதிய அனுபவமாக இருந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-3f3DF_gSNrM/WvCFTXD3gUI/AAAAAAAAB9E/7U6eyDTO8pYAMJ1nHnanyHqTehNj43_cgCLcBGAs/s1600/30441303_10213422236845166_1195000682185228288_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="635" data-original-width="960" height="211" src="https://4.bp.blogspot.com/-3f3DF_gSNrM/WvCFTXD3gUI/AAAAAAAAB9E/7U6eyDTO8pYAMJ1nHnanyHqTehNj43_cgCLcBGAs/s320/30441303_10213422236845166_1195000682185228288_n.jpg" width="320" /></a></div>
<br />
மாலை வேளை மாலையிட்டு வரவேற்க போட் பிளேரின் கார்பின் கவ் கடற்கரை கைநீட்டி அரவணைத்தது.<br />
<br />
காய்ந்த சருகு போல சகாக்கள் கடலினில் தூக்கி எறிய கரையை எட்டாத இலையாய் அலையில் மிதக்க ஆரம்பித்தேன்.<br />
<br />
உற்சாகமான குளியலுடன் அந்த தினத்துக்கான முடிவுரை அமைந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-_rJPZmIEXmo/WvCFlaGaoII/AAAAAAAAB9M/E4SmwQVf7wgS8XFK2BCpIRS5XfCIbVTVgCLcBGAs/s1600/30411937_10213423872886066_3284343263409995776_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="635" data-original-width="960" height="211" src="https://1.bp.blogspot.com/-_rJPZmIEXmo/WvCFlaGaoII/AAAAAAAAB9M/E4SmwQVf7wgS8XFK2BCpIRS5XfCIbVTVgCLcBGAs/s320/30411937_10213423872886066_3284343263409995776_n.jpg" width="320" /></a></div>
<br />
<br />
அடுத்த நாளின் அதிகாலை துரித கதியில் விடிந்தது. அந்த நவீன கப்பலின் சொகுசு அறையில் அமர்ந்து அறுவர் பயணமானோம் ஹேவ்லாக் தீவுக்கு. அந்த அற்புத தீவில் மூங்கில் கம்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த விடுதியில் பயண களைப்பை கலைந்தோம் .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://4.bp.blogspot.com/-_-8BtSMBbwU/WvCFzwVzEyI/AAAAAAAAB9Q/cnzjtrzeCu4BCNzRmU8F3vkkRMSIOjcMACLcBGAs/s1600/31562825_1659803714097527_4142723354035486720_n.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="959" data-original-width="960" height="319" src="https://4.bp.blogspot.com/-_-8BtSMBbwU/WvCFzwVzEyI/AAAAAAAAB9Q/cnzjtrzeCu4BCNzRmU8F3vkkRMSIOjcMACLcBGAs/s320/31562825_1659803714097527_4142723354035486720_n.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">எழில் கொஞ்சும் ராதாநகர் பீச் </td></tr>
</tbody></table>
<br />
<br />
பிற்பகலில் எழில்மிகு ராதாநகர் கடற்கரையில் மையம் கொண்டோம் . சுண்ணாம்புக்கட்டிகளை பொடிசெய்து கொட்டியது போல் இருந்தது அந்த கடற்கரையின் பால் வெண்மணல் . பச்சை மையை சிந்தியது போன்ற வனப்பரப்புக்கும் நீலப்போர்வை போத்தியிருந்த நீர்பரப்புக்கும் இடையிலான இந்த பெருமணல்வெளி கண்ணுக்கெட்டிய துயரம் வரை நீண்டு காட்சியளித்தது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://3.bp.blogspot.com/-E3gvkyKmkpk/WvCGJy2tsDI/AAAAAAAAB9Y/wVp64d9h0C4I0Gh3tneFYJdZRMBvVw5DACLcBGAs/s1600/30226054_10213423768043445_1192784242837291008_n.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="635" data-original-width="960" height="211" src="https://3.bp.blogspot.com/-E3gvkyKmkpk/WvCGJy2tsDI/AAAAAAAAB9Y/wVp64d9h0C4I0Gh3tneFYJdZRMBvVw5DACLcBGAs/s320/30226054_10213423768043445_1192784242837291008_n.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ராதாநகர் பீச் </td></tr>
</tbody></table>
<br />
<br />
அந்த நீரின் தெளிவை எப்படி விவரிப்பது ? இப்படி சொல்லலாம் . மார்பளவு நீரில் நின்று ஒரு ரூபாய் நாணயத்தை தண்ணீரில் போட்டால் அது தெளிவாக உங்களின் கண்களுக்கு புலப்படும் . அப்படி ஒரு தெளிந்த கடற்பரப்பு<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-l9RpSzNYpE8/WvCGgYEx01I/AAAAAAAAB9g/FhDwB7asIjkdSqrMCs7OMQszCludzPXsACLcBGAs/s1600/30261692_10213423808364453_3097819856016244736_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="635" data-original-width="960" height="211" src="https://2.bp.blogspot.com/-l9RpSzNYpE8/WvCGgYEx01I/AAAAAAAAB9g/FhDwB7asIjkdSqrMCs7OMQszCludzPXsACLcBGAs/s320/30261692_10213423808364453_3097819856016244736_n.jpg" width="320" /></a></div>
<br />
<br />
அந்தி சாய்ந்துவிட பிரியா மனமின்றி விடைபெற்றோம் அந்த பூலோக சொர்க்கத்தில் இருந்து<br />
<br />
அடுத்த தினம் சில தோழர்கள் ஆழ்கடல் நீச்சல் (ஸ்கூபா டைவிங்கிற்கு இதைவிட பொருத்தமான கலைச்சொல் உருவாக்கி இருக்கலாம் ) சென்று அகமகிழ்ந்து வந்தனர்<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-EiLh8cAek_4/WvCGqqblIMI/AAAAAAAAB9k/-QYpifMofWgCg0X_XmzAbNTnJqBqYt5CgCLcBGAs/s1600/30261817_10213424143252825_8530648856310841344_n.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="635" data-original-width="960" height="211" src="https://1.bp.blogspot.com/-EiLh8cAek_4/WvCGqqblIMI/AAAAAAAAB9k/-QYpifMofWgCg0X_XmzAbNTnJqBqYt5CgCLcBGAs/s320/30261817_10213424143252825_8530648856310841344_n.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">நீல் தீவு </td></tr>
</tbody></table>
<br />
<br />
மதிய நேரம் அந்த தீவில் இருந்து பயணமானோம் நீல் கடற்கரை நோக்கி . அந்தமானின் மற்றுமொரு அழகிய சொர்க்கம் நீல். சிறு கடல் விளையாட்டுகள் , சூரிய அஸ்தமனம் பார்க்க சென்று மேகங்களிடம் ஏமாந்தது என அழகாக ஆரம்பித்தது . நாங்கள் தங்கியிருந்த அந்த விடுதி கடற்கரைக்கு மிக அருகில் அமைந்திருந்தது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://3.bp.blogspot.com/-ALf3_diZSEg/WvCG8keYw5I/AAAAAAAAB9s/m4HbWuXSEjo6Sg2-wcT-DLE8Qmo0ZNvdQCLcBGAs/s1600/IMG20180328065310.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://3.bp.blogspot.com/-ALf3_diZSEg/WvCG8keYw5I/AAAAAAAAB9s/m4HbWuXSEjo6Sg2-wcT-DLE8Qmo0ZNvdQCLcBGAs/s320/IMG20180328065310.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">நீல் தீவின் லக்ஷ்மான்பூர் கடற்கரை</td></tr>
</tbody></table>
<br />
<br />
இரவு உணவு முடித்துவிட்டு கடற்கரை மணலில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம். அழகிய நிலவொளியும் மென்மையாக தீண்டி செல்லும் கடற்காற்றும் எங்களை மெய் மறக்க செய்ய, கொஞ்ச நேரம் அந்த உன்னத நிலையில் இருந்து மீளும் போது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது கடல் . சில மீட்டர் தூரம் கடல் உள்வாங்கி இருந்தது கடல் . திட்டு திட்டாய் பாறைகள் தெரிய எண்ணிலடங்கா சிறு உயிரினங்களை அந்த பரப்பில் காணமுடிந்தது . கடல் உள்வாங்குவது அந்த கடலில் வழக்கமாக நடக்க கூடியது என்பதை பிறகுதான் தெரிந்து கொண்டோம்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-VQ0-btc0_gY/WvCHuQM9oyI/AAAAAAAAB90/sYbKWukMSps0u9wy6d6gLal0OXMOEDPAwCLcBGAs/s1600/31671457_1659803780764187_3787946071699750912_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="960" height="320" src="https://4.bp.blogspot.com/-VQ0-btc0_gY/WvCHuQM9oyI/AAAAAAAAB90/sYbKWukMSps0u9wy6d6gLal0OXMOEDPAwCLcBGAs/s320/31671457_1659803780764187_3787946071699750912_n.jpg" width="320" /></a></div>
<br />
<br />
அடுத்தநாள் அதிகாலை பரத்பூர் கடற்கரையில் சூர்யோதயத்துடன் இனிதாக ஆரம்பித்தது. சுவையான காலை சிற்றுண்டிக்கு பிறகு நீல் தீவின் பல்லுயிர் கழகமான நேச்சர் பிரிட்ஜ்க்கு சென்றோம் .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://3.bp.blogspot.com/-VY3CDgJoDXY/WvCH8MV4XJI/AAAAAAAAB94/YduOuP5N2xcP5LnmElle0dw_JPLgI5-CACLcBGAs/s1600/29571278_1895903390419789_2046102519268287309_n.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="720" data-original-width="960" height="240" src="https://3.bp.blogspot.com/-VY3CDgJoDXY/WvCH8MV4XJI/AAAAAAAAB94/YduOuP5N2xcP5LnmElle0dw_JPLgI5-CACLcBGAs/s320/29571278_1895903390419789_2046102519268287309_n.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">நேச்சர் பிரிட்ஜ் </td></tr>
</tbody></table>
<br />
<br />
மடிந்த மற்றும் உயிருள்ள பல வகையான பவளப்பாறைகளை காண்பித்து எங்களுக்கு எடுத்துரைத்து கொண்டிருந்தார் எங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட அந்த சகோதரர் . எலக்ட்ரிக் ஈல் , ஆக்டொபஸ் , நட்சத்திர மீன் , வெள்ளரி மீன் என பலவகை கடல் ஜீவராசிகளை அவர் எங்களுக்கு காண்பித்தார் .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-Gymfdn4-mzA/WvCIfrCTgyI/AAAAAAAAB-E/XAIL6CkAxeIDc4D9GybH4VYo87gZa6fEgCLcBGAs/s1600/30411516_10213422326367404_7176121114383351808_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="492" data-original-width="960" height="164" src="https://3.bp.blogspot.com/-Gymfdn4-mzA/WvCIfrCTgyI/AAAAAAAAB-E/XAIL6CkAxeIDc4D9GybH4VYo87gZa6fEgCLcBGAs/s320/30411516_10213422326367404_7176121114383351808_n.jpg" width="320" /></a></div>
<br />
<br />
<br />
நீல் தந்த இந்த அற்புத அனுபவத்துடன் போர்ட் பிளேர் கிளம்பினோம்<br />
<br />
அடுத்த நாள் எங்களுக்கு நள்ளிரவிலேயே விடிந்து விட்டது . சுண்ணாம்புக்கல் குகையை நோக்கி பயணமானோம். ரோட்டோர கடையின் காலை சிற்றுண்டியுடன் வனப்பகுதிக்குள் பயணமானோம் . ஜராவா பழங்குடிமக்கள் குறித்தும் வனப்பகுதியில் நமது வாகனம் பயணிக்கும் போது செய்ய கூடாதவை குறித்தும் நண்பர் நிறைய சொல்லி இருந்தார். பாராட்டங் சென்று அங்கிருந்து மூன்று குழுக்களாக பிரிந்து பயணமானோம் அந்த அழகிய சதுப்பு நில காடுகளினூடே. ஒரு 20 மணித்துளி பயணம் ஆனாலும் அது அவ்வளவு ரம்மியமானதாக இருந்தது .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-ndMOySkmH-8/WvCItA1PBqI/AAAAAAAAB-I/EdT0vid5CsUyrAXRVuF4ZcXTC7j1XCzMACLcBGAs/s1600/30411949_10213427879746235_5614942081865744384_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="635" data-original-width="960" height="211" src="https://2.bp.blogspot.com/-ndMOySkmH-8/WvCItA1PBqI/AAAAAAAAB-I/EdT0vid5CsUyrAXRVuF4ZcXTC7j1XCzMACLcBGAs/s320/30411949_10213427879746235_5614942081865744384_n.jpg" width="320" /></a></div>
<br />
<br />
அங்கிருந்து சிறிது நடைக்கு பிறகு சுண்ணாம்புக்கல் குகையை அடைந்தோம். அதன் சிறப்பு மற்றும் உருவான விதம் குறித்து எங்களுடன் வந்திருந்த வழிகாட்டி எங்களுக்கு எடுத்துரைத்தார் . நிச்சயமாக இந்த சுற்றுலாவின் மிக முக்கியமான இடமாக எனக்கு இந்த வளரும் குகை தோன்றியது. மேய்ச்சல் நிலம் மற்றும் நிறைய கால்நடைகளை காண முடிந்தது . அங்கு இருந்த மக்களின் கூரை வீடுகள் மிக நேர்த்தியாக இருந்தன<br />
<br />
மீண்டும் பாராட்டங் சென்று அங்கிருந்து ஜீப் மூலம் மட் வல்கனோக்கள் பார்க்க சென்றோம். மணல் குழம்புகளை தரையில் இருந்து பீறிட்டு வருவது போல இருந்தது .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-e_bgL1PCGv4/WvCI6FxOuUI/AAAAAAAAB-Q/o0Ohhzj_3GE7ksEfmp-8J9QJ1MNVAOzqACLcBGAs/s1600/30412437_10213427394654108_3355676266400317440_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="635" data-original-width="960" height="211" src="https://4.bp.blogspot.com/-e_bgL1PCGv4/WvCI6FxOuUI/AAAAAAAAB-Q/o0Ohhzj_3GE7ksEfmp-8J9QJ1MNVAOzqACLcBGAs/s320/30412437_10213427394654108_3355676266400317440_n.jpg" width="320" /></a></div>
<br />
<br />
மத்திய உணவை முடித்துவிட்டு போர்ட் பிளேர் திரும்பும் போது வனப்பகுதியில் சில ஜராவா பழங்குடிமக்களை பார்க்க முடிந்தது.<br />
<br />
அடுத்தினம் சித்தியா தோப்பு பூங்கா சென்றோம். முதலைகளின் வருகை இருப்பதால் அந்த பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருருந்தது. சில புகைப்படங்களுடன் திருப்திப்பட்டு கொண்டு அங்கிருந்து கிளம்பி சூரிய அஸ்தமனம் பார்த்துவிட்டு அறைக்கு திரும்பினோம்<br />
<br />
அடுத்தினம் பல நண்பர்கள் சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பிவிட , விமானத்தில் இடம் கிடைக்காததால் நாங்கள் ஐவர்மட்டும் தனித்து விடப்பட்டோம் .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://2.bp.blogspot.com/-JVjMaMR0-uI/WvCJAiWzgNI/AAAAAAAAB-Y/6wKjHaqCE1ADJXIM8b4V2s7MBardnRabACLcBGAs/s1600/IMG20180401131117.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://2.bp.blogspot.com/-JVjMaMR0-uI/WvCJAiWzgNI/AAAAAAAAB-Y/6wKjHaqCE1ADJXIM8b4V2s7MBardnRabACLcBGAs/s320/IMG20180401131117.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">20 ரூபாய் தாளில் தெரியும் நோர்த் பே தீவின் கலங்கரை விளக்க புகைப்படம் , மவுண்ட் ஹெரியாத் தீவில் இருந்து </td></tr>
</tbody></table>
<br />
<br />
அடுத்தினம் எங்களுக்கு மிக சிறப்பாகவே விடிந்தது . காலையில் அந்தமானில் மானுடவியல் அருங்காட்சியகம் (Zonal Anthropological Museum ) சென்றோம் . அந்தமானின் முக முக்கியமான பொக்கிஷம் இந்த மியூசியம். இங்குதான் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டங்கள் , அதன் புவியியல் கூறுகள் , மக்கள் தொகை மற்றும் அதன் பல்வேறு பழங்குடிமக்கள் குறித்தும் அவர்களின் வாழ்வியல் குறித்தும் அறிய முடிந்தது<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-4uh-oYw9Nic/WvCJkQLiT3I/AAAAAAAAB-k/Z3rGSdiaNrojyFn2PlFY4MAW_MK-HAQyQCLcBGAs/s1600/31720660_1659803804097518_1388712275694583808_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="958" data-original-width="960" height="319" src="https://3.bp.blogspot.com/-4uh-oYw9Nic/WvCJkQLiT3I/AAAAAAAAB-k/Z3rGSdiaNrojyFn2PlFY4MAW_MK-HAQyQCLcBGAs/s320/31720660_1659803804097518_1388712275694583808_n.jpg" width="320" /></a></div>
<br />
<br />
அதை முடித்துவிட்டு அங்கிருந்து அக்குவேரியம் சென்றோம் . பலதரப்பட்ட கடல்வாழ் உயிரிகளின் மாதிரிகள் அங்கு பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன . மேலும் பல்வேறு வகையான மீன்கள் தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன . எனக்கு அங்கிருந்த லாப்ஸ்ட்டர் என்ற உயிரினம் மிக பிடித்துப்போனது . அதன் கொடூர உருவ அமைப்பையே காரணமாக சொல்லலாம்<br />
<br />
பின் சத்தம் பகுதிக்கு சென்று அங்கிருந்து மவுண்ட் ஹெரியட் சென்றோம் .அந்த பகுதியில் சில வியூ பாயிண்ட்களில் புகைப்படங்கள் எடுத்துவிட்டு ஒரு சிறு நடையையும் முடித்தோம் . பழங்குடி மக்களின் குடிசைகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டிருந்தன அந்த பூங்காவில்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-VY3CDgJoDXY/WvCH8MV4XJI/AAAAAAAAB-A/6SG2ZQT0GdwLbwE-hyKaV2TtJuxt272fQCEwYBhgL/s1600/29571278_1895903390419789_2046102519268287309_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="960" height="240" src="https://2.bp.blogspot.com/-VY3CDgJoDXY/WvCH8MV4XJI/AAAAAAAAB-A/6SG2ZQT0GdwLbwE-hyKaV2TtJuxt272fQCEwYBhgL/s320/29571278_1895903390419789_2046102519268287309_n.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<br />
பின் அங்கிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு சிறு மிருகக்காட்சி சாலைக்கு சென்றோம் . ஒரு ராட்சத முதலை , மலைப்பாம்பு , சிறு ஆமைகள் மற்றும் ராஜநாகம் எல்லாம் கண்டு களித்துவிட்டு அறைக்கு திருப்பிமினோம்<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://4.bp.blogspot.com/-hpd57CW0MgA/WvCJvF51sTI/AAAAAAAAB-w/Zm0t2Ju_lwsEoOwjmZ12W2dsHHoFGsKEgCEwYBhgL/s1600/IMG20180401141030.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="180" src="https://4.bp.blogspot.com/-hpd57CW0MgA/WvCJvF51sTI/AAAAAAAAB-w/Zm0t2Ju_lwsEoOwjmZ12W2dsHHoFGsKEgCEwYBhgL/s320/IMG20180401141030.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">மவுண்ட் ஹெரியத் டிரெக்கிங்</td></tr>
</tbody></table>
<br />
<br />
<br />
அடுத்தநாள் காலை அந்தமானில் இருந்து விடைபெற்றுக்கொண்டு திரும்பிவிட்டோம் . ஆரம்பிக்கும்போது எட்டு தினங்களா என விளித்து யோசித்தது போய் அதற்கும் பயணம் முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்துடன் பயணம் முடிந்துவிட்டது<br />
<br />
<br />
பிகு<br />
<br />
சில துளிகள் :<br />
<br />
கடைசிதின நள்ளிரவில் ஒரு தெலுங்கு படம் பார்க்க தியேட்டர் சென்று நம்முடைய இனிமையான தருணங்களில் சினிமாவின் பங்களிப்பை உறுதி செய்தோம் . அரைமணி நேரம் மட்டுமே படம் பார்த்துவிட்டு நான் மீதி நேரம் தூங்கி விழுந்தது வேறு கதை<br />
<br />
முருகப்பெருமான் கோவிலின் கும்மியாட்டம் , சத்தம் , முத்துமாரியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா என தமிழ் மக்களின் வாழ்வியல் துளிகூட மாறாமல் அதே கலை , கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளில் பிரதிபலித்தது<br />
<br />
அநேக தமிழ் மக்கள் மற்றும் தமிழ் உணவகங்கள் எல்லா இடங்களிலும் இருந்தன . நம் முகத்தையும் தப்பு தப்பா நாங்க பேசுனா ஹிந்தியையம் பார்த்தவுடன் எங்களை கண்டு கொண்டு தமிழில் கதைக்க ஆரம்பித்துவிட்டனர் மக்கள்<br />
<br />
பெர்ரியின் கேப்டன் அறைக்கு சென்று அந்த கப்பல் இயங்கும் விதம் மற்றும் அதன் தொழிநுட்பம் குறித்து தெரிந்து கொண்டோம் மற்ற நண்பர்களுக்கு தெரியாமல்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-UyhUeyCQfp4/WvCKcgNGfuI/AAAAAAAAB-4/GghpCqWTx98w2wC8FN3cyzODax4l5qlDwCLcBGAs/s1600/IMG20180401144911.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="320" src="https://2.bp.blogspot.com/-UyhUeyCQfp4/WvCKcgNGfuI/AAAAAAAAB-4/GghpCqWTx98w2wC8FN3cyzODax4l5qlDwCLcBGAs/s320/IMG20180401144911.jpg" width="240" /></a></div>
<br />
<br />
போர்ட் பிளேயரில் ஒரு தமிழ் அக்கா கடையில் மீன் குழப்பு சாப்பிட்டோம். அதன் ருசி இப்பொழுது நினைத்தாலும் தொண்டைக்குழிக்குள் ருசிக்கிறது<br />
<br />
பால் பவுடர் டீ குடித்து வெறுத்துப்போன மனங்களுக்கு ஆறுதல் அளித்தது பாராட்டங் பகுதியில் கிடைத்த பால் டீ.<br />
<br />
ராதா நகர் , நீல் தீவுக்கடற்கரைகளில் போட்ட உற்சாக குவியல்கள் , மணல்வீடு கட்டி விளையாடிய விளையாட்டுகள் , சுண்ணாம்புக்கல் குகை அருகில் குடித்த லெமன் சோடா போர்ட் பிளேர் மற்றும் இதர பகுதிகளில் சாப்பிடட பலவகை உணவுகள் என நினைவுகள் ஏராளம்<br />
<br />
இன்னும் இன்னும் ஏராளாமான நினைவுகள் .<br />
<br />
அனைத்தையும் எழுத்தில் வடிக்கும் அளவுக்கு கைதேர்ந்த சிற்பி அல்லவே நான்<br />
<br />சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-30103224005114696882018-04-29T19:47:00.001+05:302018-04-29T19:47:12.206+05:30இன்னிசை மட்டும் இல்லையென்றால் - ஸ்வர்ணலதா பிறந்தநாள் பதிவு <span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">முகப்புத்தகத்தை மேய்ந்து கொண்டிருக்கையில் அந்த பதிவு கண்ணில் பட்டது . ஸ்வர்ணலதாவின் பிறந்த நாள் சிறப்பு பதிவாக ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார் . </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">ஸ்வர்ணலதா குரலின் ஒரு அசுர ரசிகனாக கல்லூரி காலத்திலிருந்து இருந்து வந்த நமக்கு இது கூட தெரியவில்லையே என நினைத்துக்கொண்டு நினைவலைகளில் மூழ்கிய போது உதயமான பதிவு இது தனிமையான வேளைகளில் </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">ஸ்வர்ணலதா - அது ஒரு மாயாஜால குரல் . </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">காதில் ஹெட்போன் அணிந்துகொண்டு கண்களை மூடி இந்த பாடலை கேட்க ஆரம்பித்தவுடன் அப்படியே மனம் லேசாகி காற்று வெளியில் மிதக்க ஆரம்பித்து விடும் . </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">அந்த இசையும் இசையை மேவும் குரலும் உங்களை உருகி உருகி ரசித்து கேட்க வைக்கிற ஆற்றல் கொண்டது. </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<blockquote class="tr_bq">
<span style="font-family: Verdana, sans-serif;">அந்தக் குழலைப் போல் அழுவதற்கு<br />அத்தனை கண்கள் எனக்கில்லையே</span></blockquote>
<span style="font-family: Verdana, sans-serif;">என்று முடியும் அந்த பாடல் அலைபாயுதே திரைப்படத்தில் வரும் எவனோ ஒருவன் வாசிக்கிறான் . </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">மெல்லிய இழையோடு வரும் அந்த இசையைவிட அந்த பாடலின் உயிரோட்டம் ஸ்வர்ணலதாவின் குரல் .</span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடகர்களின் மத்தியில் முழுக்க முழுக்க தனித்தன்மை வாய்ந்த குரல் அது . நெடுந்தூரத்தில் ஒலிக்கும் பாடலில் அவரின் குரல் இருந்தால் காதில் விழுந்த அடுத்த கணமே மனம் கண்டறிந்து குதூகலிக்க தொடங்கிவிடும் </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">மகிழ்ச்சி , காதல் , காமம் , ஆசை ,ஏக்கம் , சோகம் , பிரிவு , வலி என அனைத்து உணர்வுகளையும் அவரின் குரலில் கேட்டு ரசிப்பது அலாதியானது </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<blockquote class="tr_bq">
<span style="font-family: Verdana, sans-serif;">வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை<br />ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை </span></blockquote>
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">இந்த வரிகளுக்கு சொந்தமான பாடல் மாலையில் யாரோ மனதோடு பேச . இன்றும் பல பண்பலைகளில் மாலைப் பொழுதுகளில் நீங்கள் இந்த பாடலை கேட்கலாம் </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல் போறாளே பொன்னுத்தாயி. </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<blockquote class="tr_bq">
<span style="font-family: Verdana, sans-serif;">தெக்கத்தி காத்து திசை மாறி வீச<br />ஒன்னோட மேகம் ஓடுதடி ஓடுதடி<br />உசுருள்ள நாக்கு ஒன்னு வாடுதடி வாடுதடி</span></blockquote>
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<blockquote class="tr_bq">
<span style="font-family: Verdana, sans-serif;">சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா<br />சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா<br />பொறு பொறு<br />ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா</span></blockquote>
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">ரகுமான் அந்த பாடலின் ஜீவன் இசை அல்ல வைரமுத்துவின் பாடல்வரிகளும் ஸ்வர்ணலதாவின் குரல்தான் என்பதை நன்கு உணர்ந்து மெல்லிசையாக அமைத்திருப்பார் </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<blockquote class="tr_bq">
<span style="font-family: Verdana, sans-serif;">ஊண் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்<br />ஆழ்நிலையில் அறங்கேற<br />காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு<br />இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு</span></blockquote>
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">என்னுள்ளே என்னுள்ளே என மருகும் இந்த பாடலில் இளையராஜாவின் இசையோடு அவரின் தேமதுர குரல் போட்டி போடுவதை நீங்கள் உணரலாம் </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">தேம்பி நிற்கும் சோகத்தை கானத்தில் வடித்திருக்கும் மற்றுமொரு பாடல் நீ எங்கே என் அன்பே </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<blockquote class="tr_bq">
<span style="font-family: Verdana, sans-serif;">விடிகிற வரையினில் கதைகளைப் படித்தது<br />நினைத்ததே நினைத்ததே<br />முடிகிற கதையினை தொடர்ந்திட மனம்<br />இங்கு துடிக்குதே துடிக்குதே<br /> </span></blockquote>
<span style="font-family: Verdana, sans-serif;">அனைத்திற்கும் முத்தாய்ப்பாக </span><br />
<blockquote class="tr_bq">
<span style="font-family: Verdana, sans-serif;"><br />கண்ணில் ஒரு வலி இருந்தால்<br />கனவுகள் வருவதில்லை </span></blockquote>
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">என பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடலில் வரும் இரு வரிகளை அவர் குரலில் கேட்பது அந்த பாடலின் சுவையை முழுமையாக உணர வைக்க உதவும் </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">சோகம் மட்டுமா ஏன் காதல் பாடல்கள் இல்லையா ?</span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">இருக்கின்றதே ஏராளம் </span><br />
<br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<blockquote class="tr_bq">
<span style="font-family: Verdana, sans-serif;">வெக்கப் படத்தில் கவளிக் கத்த<br />வளைவுப் பக்கம் கருடன் சுத்த<br />தெருவோரம் நிறைக்குடம் பார்க்கவும்<br />மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே</span></blockquote>
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">உளுந்து விதைக்கியிலே என ஆரமிக்கும் பாடலும்</span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<blockquote class="tr_bq">
<span style="font-family: Verdana, sans-serif;"> இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா<br />இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா<br />சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது<br />மெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ </span></blockquote>
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">என நாநெகிழி போல் வரும் காதலென்னும் தேர்வெழுதி பாடலாகட்டும் </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">அந்தியில வானம் என ஆரம்பிக்கும் அந்த பாடலும் </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<blockquote class="tr_bq">
<span style="font-family: Verdana, sans-serif;">கடலோரம் காத்து.. ஒரு கவிபாடும் பார்த்து<br />காணாம நூலானேன் ஆளான நாந்தான்<br />தோளோடு நான் சேர ஊராதோ தேன்தான்</span></blockquote>
<br />
<blockquote class="tr_bq">
<span style="font-family: Verdana, sans-serif;"> கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும்<br />அடடடா அதிசயம்<br />ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது<br />நடந்திடும் நதியிலே</span></blockquote>
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">எனும் போவோமா ஊர்கோலமா பாடலாகட்டும் </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">பா.விஜய் வரிகளில் வரும் துளி துளியாய் பாடல் </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<blockquote class="tr_bq">
<span style="font-family: Verdana, sans-serif;">மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே<br />நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன்<br />ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி<br />ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட</span></blockquote>
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">என பல பாடல்களை சொல்லலாம் </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">மேலும் சில பாடல்கள் </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<blockquote class="tr_bq">
<span style="font-family: Verdana, sans-serif;">சொல்லாயோ சோலைக்கிளி<br />குளிருது குளிருது - தாஜ்மஹால்<br />என்னை தொட்டு அள்ளிக்கொண்டு<br />நான் ஏரிக்கரை மேல இருந்து </span></blockquote>
<span style="font-family: Verdana, sans-serif;">காதலை தாண்டி காமத்தை தூண்டும் பாடல்களில் முக்கியயமானது இரு பாடல்கள் </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">மாசி மாசம் ஆளான பொண்ணு </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<blockquote class="tr_bq">
<span style="font-family: Verdana, sans-serif;">ஆசை நூறாச்சு போங்க<br />நிலவு வந்தாச்சு வாங்க<br />நெருங்க நெருங்க பொறுங்க பொறுங்க</span></blockquote>
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">மற்றும் ராக்கோழி ரெண்டு முழிச்சிருக்கு பாடல் </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">இவைதான் நினைவுக்கு உடனே வந்த பாடல்கள் . </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">நெடுந்தூர பேருந்து பயணங்கள், உறக்கமில்லா நள்ளிரவுகள் , தனித்திருக்கும் பொழுதுகள் ,வெறுமையை உணரும் தருணங்கள் என பல சமயங்களில் உறுதுணையாக இருந்திருக்கிறது அவரது குரல் </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">புற உலக சுக துக்கங்கள் அனைத்தையும் மறந்து யாருமில்லா ஒரு தனி வெளியில் நெடுநேரம் சஞ்சரிக்க வைப்பவை ஸ்வர்ணலதாவின் பாடல்கள். </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">மிக சில காலமே வாழ்ந்து இருந்தாலும் அவருடைய பங்களிப்பு இசைக்கும் தமிழ் சினிமாவுக்கும் முக்கியமானது . </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">அவரின் தமிழார்வமும் உச்சரிப்பும் மிகவும் சிறப்பானது . சில பேட்டிகளில் அவரின் எளிமையான தமிழ் நடை என்னை சிலாகிக்க வைத்துள்ளது </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;">இறுதியில் இந்த பதிவை இந்த வரிகளை கொண்டு நிறைவு செய்வது சால பொருந்தும் என நினைக்கிறேன் </span><br />
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;"><b><br /></b></span>
<blockquote class="tr_bq">
<span style="color: #073763; font-family: Verdana, sans-serif;"><b>கண்களை வருடும் தேனிசையில்<br />என் காலம் கவலை மறந்திருப்பேன்<br />இன்னிசை மட்டும் இல்லையென்றால்<br />நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்</b></span></blockquote>
<span style="font-family: Verdana, sans-serif;"><br /></span>
<br />
<b><br /></b>
<br />சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-376563360393606862017-07-02T20:58:00.000+05:302017-07-02T20:58:01.406+05:30வயநாடு - மழையோடு விளையாடிய ஒரு பயணம் மலையாள தேசத்தின் மலையழகை காணும் ஆவலில்<br />
ஆரம்பித்ததொரு இனிய பயணம்.<br />
<br />
வயநாடு என்னும் வாழ்வளிக்கும்<br />
பூமியின் வளங்கலே எங்களின் மனதில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-9lMhUjMlnGs/WVkJh77OYdI/AAAAAAAAAtE/tEXBOt7PhpQIiunnVUoKujIxGeoNOBQWACLcBGAs/s1600/IMG_7002.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="300" src="https://1.bp.blogspot.com/-9lMhUjMlnGs/WVkJh77OYdI/AAAAAAAAAtE/tEXBOt7PhpQIiunnVUoKujIxGeoNOBQWACLcBGAs/s400/IMG_7002.JPG" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">லிகிடி வியூ</td></tr>
</tbody></table>
<br /><br />
<br />
ஐராவத பேருந்தில் அம்பாரி செய்து<br />
இந்தியாவின் மென்பொருள் நகரினை கடந்தோம் அந்த அதிகாலையில்.<br />
<br />
குளு குளு பேருந்து நத்தையாய் நகர்ந்து சுல்தானின் கோட்டையாம் மைசூர் நகரினை தொட்டது.<br />
<br />
<br />
<br />
எல்லைகள் கடந்தாலும் எம் தேசிய உணவான இட்லியை தந்து இன்பத்தில் உலாவ விட்டது அடையாறு ஆனந்த பவன் .<br />
<br />
சாலையின் இரு மருங்கிலும் பச்சை கம்பளம் விரித்து எங்களை வரவேற்றது வயநாடு.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://2.bp.blogspot.com/-1d_RN45avgE/WVkKMzTIV0I/AAAAAAAAAtI/wKILi4vyT6UdS5fJ1AFCUZ_8UGVcmQgywCLcBGAs/s1600/IMG_20170624_172850_HDR.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://2.bp.blogspot.com/-1d_RN45avgE/WVkKMzTIV0I/AAAAAAAAAtI/wKILi4vyT6UdS5fJ1AFCUZ_8UGVcmQgywCLcBGAs/s320/IMG_20170624_172850_HDR.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">மேக கூட்டங்களின் எழில்மிகு காட்சி </td></tr>
</tbody></table>
<br />
<br />
மலையக மண்ணை எங்கள் பாதங்கள் முத்தமிடுமுன் எங்களின் மேல் முத்துக்கள் தூவி ஒரு வரவேற்பு மாலையை இயற்றிச் சென்றது வானம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-F_7dyLuf1H4/WVVDbGArwyI/AAAAAAAAAsg/-k-vPXuNnJUIL7NPVqjk6e5J1JYwdGT4wCLcBGAs/s1600/IMG_20170624_173946.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://1.bp.blogspot.com/-F_7dyLuf1H4/WVVDbGArwyI/AAAAAAAAAsg/-k-vPXuNnJUIL7NPVqjk6e5J1JYwdGT4wCLcBGAs/s320/IMG_20170624_173946.jpg" width="320" /></a></div>
<br />
மலைகளின் மத்தியில் தென்பட்ட மேகங்களின் கூடல் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.<br />
<br />
இந்த காட்சியை கண்டு நாணிக்கண் புதைத்திருந்தான் கதிதவன்.<br />
<br />
(நாணுதல் எப்படி கதிரவனுக்கு பொருந்தும் என கேள்வி எழுப்பினால் , இந்த காட்சியை கண்டு மனமகிழ்ந்து தண்மை முகத்துடன் தன்னிலை மறந்திருந்தான் கதிரவன் எனக் கொள்க)<br />
<br />
சரிவாக ஆதம்பித்து உள்ளே செல்ல செல்ல செங்குத்தாய் நீண்டிருந்தது எடக்கல் குகை.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://4.bp.blogspot.com/-0CSNly46Kyw/WVkK-ddGDaI/AAAAAAAAAtM/XtPj2xg6pLAOaqx_WsLrEos7HvaOO6yQACLcBGAs/s1600/IMG_7125.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://4.bp.blogspot.com/-0CSNly46Kyw/WVkK-ddGDaI/AAAAAAAAAtM/XtPj2xg6pLAOaqx_WsLrEos7HvaOO6yQACLcBGAs/s320/IMG_7125.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">எடக்கல் குகையை நோக்கி சென்ற பயணத்தில் </td></tr>
</tbody></table>
<br />
<br />
பிரம்மாண்ட பாறைகள் கைசேர்த்து நிற்பது போன்றதொரு தோற்றத்தை வழங்கியது.<br />
<br />
பணடைய மக்களின் சித்திரங்களை காட்டி அந்த இடத்தை காலச்சக்கரத்தில் பின்னோக்கி கொண்டு செல்ல பெருமுயற்சி செய்து கொண்டிருந்தது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://3.bp.blogspot.com/-ob0V9MBuM34/WVkLZcDDcOI/AAAAAAAAAtQ/gOw1vG_nyv8xfDfdc7eeyXei2qrlq8iPgCLcBGAs/s1600/DSC_0219.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="1060" height="320" src="https://3.bp.blogspot.com/-ob0V9MBuM34/WVkLZcDDcOI/AAAAAAAAAtQ/gOw1vG_nyv8xfDfdc7eeyXei2qrlq8iPgCLcBGAs/s320/DSC_0219.JPG" width="211" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">எடக்கல் குகையின் பிரம்மாண்டத்தில் சொக்கி நின்ற தருணங்கள் </td></tr>
</tbody></table>
<br />
<br />
பிரம்மாண்டத்தையும் பிரமிப்பில் ஆழ்த்திவிடும் அளவுக்கு கண்முன் நின்றது பாணாஸுரா நீர்தேக்கம்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://4.bp.blogspot.com/-I_XhZ1pWMQA/WVkL7K9BtWI/AAAAAAAAAtU/xRz7pQ9xLSomZ-fMCSiExDh9kGfcp3MsQCLcBGAs/s1600/DSC_0191.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1060" data-original-width="1600" height="211" src="https://4.bp.blogspot.com/-I_XhZ1pWMQA/WVkL7K9BtWI/AAAAAAAAAtU/xRz7pQ9xLSomZ-fMCSiExDh9kGfcp3MsQCLcBGAs/s320/DSC_0191.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">பிரம்மாண்டத்திற்கு பிந்தைய அழகியல் </td></tr>
</tbody></table>
<br />
<br />
அதன் படிகளை எங்கள் பாதங்கள் எண்ணிய போது என்ன எண்ணியதோ ஆகாயம், எண்ணிலடங்கா துளிகளை தந்தது.<br />
<br />
மழைய கண்டவுடன் மழலையாய் மாறி இல்லை இல்லை மழயாகவே மாறி ஆட்டம் போட்டோம்..<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-tDY31RSWOh4/WVkMS3Nid2I/AAAAAAAAAtY/Z0wQakt6Rr06EfpgQDBfHQcHjPtP32FHQCLcBGAs/s1600/DSC_0372.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1060" data-original-width="1600" height="211" src="https://1.bp.blogspot.com/-tDY31RSWOh4/WVkMS3Nid2I/AAAAAAAAAtY/Z0wQakt6Rr06EfpgQDBfHQcHjPtP32FHQCLcBGAs/s320/DSC_0372.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">மழையோடு விளையாடும் பறவைகள் </td></tr>
</tbody></table>
<br />
மனதின் இருக்கங்களை மடை திறந்த நீர் போல ஓட விட்டு தன்னுடைய பெயர்க்காரணத்தை மறுநிர்ணயம் செய்தது<br />
<br />
அருவியில் குளிக்கும் ஆவலில் சென்றவர்களுக்கு<br />
<br />
அடிக்கொருதரம் அமுதாய் பொழிந்து கொண்டிருந்தது மழை<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://2.bp.blogspot.com/-pbJiGFju-Vo/WVkMuGmJKDI/AAAAAAAAAtc/Y5Yywd4rQ80sPhZ9PCEOEvhV6-YKCGcgQCLcBGAs/s1600/IMG_20170625_150249.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://2.bp.blogspot.com/-pbJiGFju-Vo/WVkMuGmJKDI/AAAAAAAAAtc/Y5Yywd4rQ80sPhZ9PCEOEvhV6-YKCGcgQCLcBGAs/s320/IMG_20170625_150249.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">பானாசுரா அணை-</td></tr>
</tbody></table>
<br /><br />
களைத்திருந்த இரவு பொழுதுகளில் கதைகளாய் பேசி களித்திருந்த்தோம்<br />
ஈகைப் பெருநாளாயினும் எம் பசிக்கு ஏதெனுமொரு ருசியை புசிக்க கொடுத்து கொண்டே இருந்தது அந்த பூமி.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-Nn7IejBUFCw/WVkNWx3BKjI/AAAAAAAAAtg/Y9bUMjeFSdQCH4T3RWvpsBGRaYwPayP1ACLcBGAs/s1600/IMG_20170626_073700.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="320" src="https://1.bp.blogspot.com/-Nn7IejBUFCw/WVkNWx3BKjI/AAAAAAAAAtg/Y9bUMjeFSdQCH4T3RWvpsBGRaYwPayP1ACLcBGAs/s320/IMG_20170626_073700.jpg" width="240" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">முத்தங்கா வனப்பகுதியின் சபாரி பயணம் </td></tr>
</tbody></table>
<br />
<br />
வனவிலங்குகளின் வசிப்பிடமான முத்தங்கா சரணாலயம் சென்றோம் மறுநாள். அந்த காலை வேளையில் தூறலுடன் காட்டுக்குள் ஒரு பயணம். பாதையை தவிர எல்லா பக்கமும் பச்சை நிறம்.<br />
<br />
வேழத்தின் கம்பீர வரவேற்பும்.<br />
<br />
தாமரைகளின் பொது கூட்டமும் (தாமரை - தாவுகின்ற மரை - தாவுகின்ற மான் என பொருள் )<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-RMoNPpwM6U0/WVkNxovcxsI/AAAAAAAAAtk/PHnXfz5P1y0XSp5psmNEMXLOKZ-b8NDrgCLcBGAs/s1600/DSC_0411.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1060" data-original-width="1600" height="211" src="https://3.bp.blogspot.com/-RMoNPpwM6U0/WVkNxovcxsI/AAAAAAAAAtk/PHnXfz5P1y0XSp5psmNEMXLOKZ-b8NDrgCLcBGAs/s320/DSC_0411.JPG" width="320" /></a></div>
<br />
<br />
தோகை விரித்தாடும் மயில்களின் விளையாட்டும்<br />
<br />
இந்த சபாரி என்னும் சவாரியை இன்பமாக்கின.<br />
<br />
மூன்று தினங்களும் எங்களை நனைத்து உலர்த்தி நனைத்து மகிழ்ந்தது மழை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-Iifz6YRulak/WVkOP4E5DyI/AAAAAAAAAto/jOMmIDCjT6UC_B0neVPRMKMMtAMEr8MJwCLcBGAs/s1600/IMG_20170625_144251.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://4.bp.blogspot.com/-Iifz6YRulak/WVkOP4E5DyI/AAAAAAAAAto/jOMmIDCjT6UC_B0neVPRMKMMtAMEr8MJwCLcBGAs/s320/IMG_20170625_144251.jpg" width="320" /></a></div>
<br />
<br />
இந்த பயணத்தை மறக்க முடியாததாக மழையே மாற்றிப்போனது.<br />
<br />
பறப்பன , நடப்பன , நீந்துவன என புசித்த ஒவ்வொன்றும் நீங்காமல் நினைவுகளாய் இடம் பெறுகின்றன.<br />
<br />
<br />
ஒவ்வொரு பயணங்களும் பல வித அனுபவங்களை தந்து கொண்டே இருக்கின்றன . இயற்கை காட்சிகளை ,வனப்புகளை தாண்டி சந்திக்கும் மனிதர்கள் , ருசிக்கும் உணவுகள் , மக்களின் வாழ்வியல் முறைகள் மற்றும் சந்திக்கும் அனுபவங்கள் என அனைத்தும் மனசில் அழியா படிவமாக பாதிக்கின்றன<br />
<br />
<br />
மேலும் சில படங்கள்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-vIRsnoSXjJQ/WVkPVsEM3vI/AAAAAAAAAts/ZsMimtP2bOYVW3CH473ksnX_aZv60muJwCLcBGAs/s1600/P_20170625_051243.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="900" height="320" src="https://2.bp.blogspot.com/-vIRsnoSXjJQ/WVkPVsEM3vI/AAAAAAAAAts/ZsMimtP2bOYVW3CH473ksnX_aZv60muJwCLcBGAs/s320/P_20170625_051243.jpg" width="180" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-HBPU2d_wQY0/WVkPa6PJawI/AAAAAAAAAtw/7pARXl0Nk84m9pAhxhFDB1aqlcQIsdQRQCLcBGAs/s1600/IMG_20170625_101050.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://1.bp.blogspot.com/-HBPU2d_wQY0/WVkPa6PJawI/AAAAAAAAAtw/7pARXl0Nk84m9pAhxhFDB1aqlcQIsdQRQCLcBGAs/s320/IMG_20170625_101050.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-I7Ob4J_hu20/WVkPeRaVgZI/AAAAAAAAAt0/ATL6HX_AP4YghXmO2YnxkupjOH6LFAwawCEwYBhgL/s1600/IMG_20170625_165603.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="320" src="https://2.bp.blogspot.com/-I7Ob4J_hu20/WVkPeRaVgZI/AAAAAAAAAt0/ATL6HX_AP4YghXmO2YnxkupjOH6LFAwawCEwYBhgL/s320/IMG_20170625_165603.jpg" width="240" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-XJQNV0JINbI/WVkPy-ggR7I/AAAAAAAAAt4/TiBO607ifsIFQRGGLaejnCiG67838QVgACLcBGAs/s1600/IMG_20170625_105046.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://3.bp.blogspot.com/-XJQNV0JINbI/WVkPy-ggR7I/AAAAAAAAAt4/TiBO607ifsIFQRGGLaejnCiG67838QVgACLcBGAs/s320/IMG_20170625_105046.jpg" width="320" /></a></div>
<br />
<br />சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0Wayanad, Kerala, India11.6853575 76.13199529999997111.1878285 75.486548299999967 12.1828865 76.777442299999976tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-8786607767029123362017-04-19T10:27:00.001+05:302017-04-19T10:27:19.814+05:30வாழை - கற்றதும் பெற்றதும் <p dir="ltr">ஒரு தன்னார்வலனாக வாழையில் இணைந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன . இந்த காலகட்டங்களில் வாழை என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களையும் அனுபவங்களையும் அசை போட ஆரம்பித்ததன் விளைவே இந்த பதிவு .</p>
<p dir="ltr">கிராமப்புற முதல் தலைமுறை மாணவர்களுக்கு வழிகாட்டும் அமைப்பில் இணைத்து, அந்த குழந்தைகளுக்கு கற்பிக்க போகிறோம் என்ற எண்ணத்துடன் எனது முதல் பயிலரங்கிற்கு சென்று இருந்தேன் . அந்த இரு தினங்களும் சிறார்களிடம் கண்ட அன்புதான் இந்த இனிய பயணத்திற்கு வித்திட்டு இன்று இந்த பதிவை எழுத வைத்து இருக்கிறது .அன்றிலிருந்து இன்றுவரை கற்பித்ததை விட கற்றுக் கொண்டவைகள்தான் அதிகம். புத்தகங்களில் உள்ள அச்சிடப்பட்ட எழுத்துக்களை மட்டுமே வெவ்வேறு வழிமுறைகளில் நம்மால் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க முடியும் . அவர்களிடம் இருந்து கற்று கொண்ட விளையாட்டுகளும் வாழ்வியல் பாடங்களும் அநேகம் . மிக சாதாரணமாக விளையாட்டுகளினூடே அவர்கள் சொல்லிவிட்டு சென்று விடும் வார்த்தைகளில் பொதிந்துள்ள கருத்துக்கள் ஆழமானவை </p>
<p dir="ltr">கற்போம் கற்பிப்போம் என்று சொல்வதில் உள்ள உண்மைகள் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தன . ஒருமுறை விளையாட்டாக ஒரு சிறுமி என்னை பார்த்து "உங்களது வீட்டில் உள்ள மிக முக்கியமான சொத்து எது?", என வினவினாள் . நான் உடனே அதிமேதாவிதனமாக, "நான் சேமித்து வைத்திருக்கும் புத்தகங்களே மிகவும் அரிய சொத்து " என கூறினேன் . அதற்கு அந்த சிறுமி , " இல்லை அண்ணா , நம் வீட்டின் மிக பெரிய சொத்து நாம்தானே !!! " என்று கேட்டுவிட்டு போய்விட்டாள் . இதைவிடவா பெரிய கற்றல் இருந்துவிட போகிறது ?.<br></p>
<p dir="ltr">உடன்பிறந்தவர்கள் யாருமில்லையே என்ற வருத்தம் சிறுவயதில் இருந்தே எனக்கு இருந்தது. ஒருமுறை எதேச்சையாக சிறார்களிடம் சொன்னபோது நாங்கதான் இருக்கிறோமே என்று அவர்கள் மொழிந்த வார்த்தைகள் இப்பொழுது நினைத்தாலும் இனிக்கின்றன. . அவர்களுடன் விளையாடிய விடுகதை புதிர்களும் அதை விடுவிக்க முடியாமல் திண்டாடிய தருணங்களும் சுவாரசியமானவை . ஒவ்வொரு சிறாரிடமும் உரையாடும்போதும் விளையாட்டுபோதும் ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாமே பாடங்கள்தான் . அவற்றை பற்றி சொல்லி கொண்டே இருக்கலாம் .</p>
<p dir="ltr">பொதுவாக ஒவ்வொரு குழந்தைகளும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் . எண்ணங்களில் , செயல்களில் ,முகபாவங்களில் ,சிரிப்புகளில் என ஒவ்வொன்றிலும் தனித்தன்மை மிக்கவர்கள் சிறார்கள் . கவிதை ,கதை , ஓவியம் , நடனம் , நடிப்பு , விளையாட்டுகள் என ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமைகள் அபிரிவிதமானவை. அவற்றை கண்டறிந்து மெருகு ஏற்றுவதுடன் அவற்றை பறை சாற்றும் விதமான வாய்ப்புகளை ஏற்படுத்தியும் கண்டறிந்தும் தர வேண்டியது அவசியம் என நம்புகிறோம் . <br></p>
<p dir="ltr">ஒவ்வொரு பயிலரங்கிலும் புதுப்புது அனுபவங்கள் கிடைத்து கொண்டே இருக்கின்றன . ஐந்து நாள் அலுவலக வேலையை முடித்து களைத்து ஓய்ந்து போன முகத்துடன் வெள்ளிகிழைமை இரவு எங்கள் பயணங்கள் ஆரம்பிக்கின்றன . சனிக்கிழமை காலை குழந்தைகளின் வருகையின் போது கிடைக்கும் அந்த புத்துணர்வும் /ஆற்றலும் இரு தினங்களும் சிறார்களுடன் சிறார்களாக மாற்றி நம்மை விளையாட வைத்துவிடும் . திரும்ப திங்கள் அலுவலகம் செல்லும் போது மனதளவில் ஒரு சிறப்பான மலர்ச்சியும் புத்துணர்வும் இருக்கும் .<br></p>
<p dir="ltr">ஒரு வழிகாட்டியாக எனது அனுபவங்களை பதிவுசெய்வதும் முக்கியமானது . ஆரம்ப காலகட்டத்தில் அலைபேசி வாயிலாக எனது தம்பியுடன் பேசுவது மிகவும் கடினமானதாக இருந்தது . பயிலரங்கில் நன்றாக உரையாடும் அவன் போனில் அந்த அளவுக்கு பேசுவதில்லை . நான் கேட்கும் சில கேள்விகளுக்கு ஆம் , இல்லை என்ற ஓரிரு வார்த்தை பதில்களையே தருவான் . பிறகுதான் என்னால் உணர முடிந்தது அலைபேசியில் நான் எப்பொழுதும் கேள்விகளையே கேட்கிறேன், அவனுடன் உரையாட முனைவதில்லை என்று . அதன் பிறகு என் அலுவலகத்தில் நட்பு வட்டாரத்தில் நிகழ்ந்தவற்றை நான் பகிர அவனும் பள்ளியிலும் விளையாடும் பொழுதும் நடந்தவற்றை பகிர்வான் . இப்படியாக எங்களது உரையாடல்கள் நீண்டு கொண்டே இருக்கும் . <br></p>
<p dir="ltr">பள்ளி பருவத்தில் இருக்கும் போது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நிறைய கடிதங்கள் எழுதி உள்ளேன் . பிறகு நவீன தொலைத்தொடர்பு வசதிகள் வந்த பிறகு கடிதப் போக்குவரத்துக்கு என்பதே அற்றுப் போய்விட்டது . இந்நிலையில் வாழை தம்பிகளிடம் இருந்து வரும் கடிதங்கள் மகிழ்ச்சியை தருவதோடு பால்ய கால நினைவலைகளையும் மீட்டுகின்றன .<br></p>
<p dir="ltr">இந்த மூன்று ஆண்டுகளில் வாழை எனக்குள் ஏற்படுத்திய மாற்றமும் , ஒரு பண்பட்ட முதிர்வும் சிறப்பானவை . என் குணங்கள் ,பொறுப்புணர்வு மற்றும் நடத்தையில் ஏற்பட்டுள்ள இந்த நல்ல மாற்றங்கள் என் குடும்பத்தாரையும் சுற்றத்தாரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. <br>
நமது கற்றல் செயல்பாடு குழந்தைகளுடன் நின்றுவிடுவது இல்லை. அதை தாண்டி சக தன்னார்வலர் நண்பர்களிடம் இருந்து கற்றுக்கொள்பவை அதிகம் . அவை அனுபவ பாடங்களாகவும் வாழ்க்கை பாடங்களாகவும் விரிகின்றன . ஒவ்வொரு அமர்விலும் சக தன்னார்வலர்களுடன் உரையாடும் போதும் கற்று கொள்ளும் செய்திகளும் விஷயங்களும் பல புத்தகங்களை வாசிப்பதற்கும் பலதரப்பட்ட மக்களை சந்தித்து பேசுவதற்கும் ஒப்பானவை . ஒரே மாதிரியான/ வேறு மாதிரியான எண்ணங்கள் , ஆர்வம் மற்றும் விருப்பமுள்ள நண்பர்களை வாழை உருவாக்கி கொடுத்து இருக்கிறது .இதன் மூலம் பலதரப்பட்ட தளங்களில் பயணப்படவும் அனுபவப்படவும் முடிகிறது . இன்னும் நிறைய புதிய நண்பர்களை சந்திக்கும் ஆர்வம் இருந்து கொண்டே இருக்கிறது . <br>
ஒவ்வொரு பயிலரங்கிற்கு செல்லும் போதும் பேருந்து வரும்வரை காத்திருக்கும் நேரங்கள் அழகானவை . நமது நண்பர்களை சந்திக்க போகிறோம் என்ற அந்த ஆர்வமே அதற்கு காரணம் . பயிலரங்கிற்கு முன்னர் நடக்கும் தயாரிப்பு பணிகளில் இருந்து கற்று கொள்வது நிறைய . பலதரப்பட்ட எண்ணங்கள் கொண்ட மக்களிடம் அலைபேசியின் வாயிலாக பேசி கருத்து ஒற்றுமையுடன் சிறார்களுக்கு என்ன சொல்லி தர போகிறோம் என்ற முடிவு எடுக்கப்படுகிறது . அதற்கு ஒவ்வொரு தன்னார்வலரும் தரும் பங்களிப்புகள் மிக சிறப்பானவை . </p>
<p dir="ltr">பொதுவாக வாழை என்பதை எனது சமூக கடமையை நிறைவேற்றும் ஒரு களமாகவே நான் கருதுகிறேன் . இந்த சமுதாயம் எனக்கு கற்று கொடுத்த அறிவையும் , ஒழுக்கத்தையும் மற்ற நல்ல விஷயங்களையும் திரும்ப இந்த சமூகத்துக்கு தருவது எனது கடமைதானே ! அதை செய்யும் ஒரு வாய்ப்பை வாழை எனக்கு நல்கி இருக்கிறது <br>
வாழைக்கு ஒரு தன்னார்வலனாக கொடுத்த பங்களிப்புகளை விட அங்கிருந்து கற்றுக்கொண்டதும் பெற்றுக்கொண்டதும் மிக அதிகம் . <br></p>
<p dir="ltr">இந்த நெடிய பயணத்தில் ஒரு பயணியாக தொடர்ந்து பயணிப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது <br>
</p>
சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-17398302744125618422017-03-27T21:58:00.000+05:302017-03-27T22:06:32.329+05:30நீங்களும் ஆகலாம் தேசபக்தர்தற்காலத்தில் தேசபக்தராக உங்களை இந்த உலகம் ஒப்புக்கொள்ள வேண்டுமெனில் கீழ்கண்ட பத்து கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்<br />
<br />
<br />
1. பாகிஸ்தான் என்ற பெயரை கேட்டவுடன் நாடி, நரம்பு எல்லாம் புடைத்து ரத்தம் சூடேறி தேசபக்தி பொங்கி வர வேண்டும். இலங்கைகாரன் மீனவர்களை சுடுறான் , சீனா ஆக்கிரமிப்பு செய்யிறான் என்பதை பற்றி எல்லாம் கண்டுகொள்ள தேவையில்லை. <br />
<br />
2. கோட்ஸே கடவுளாகவும் , ஆர்.எஸ்.எஸ் புனித அமைப்பாகவும் கருதும் பக்குவம் வேண்டும் . அவர்கள் துப்பும் எச்சில் கூட உங்களுக்கு புனிதமாக முற்போக்கு சிந்தனையுள்ளதாக தெரிய வேண்டும். அப்பப்போ காந்தி , அம்பேத்கார் படங்களுக்கு மாலை மட்டும் போட்டால் போதும்<br />
<br />
3. பசு என்பதை கடவுளாக கருத வேண்டும். மாட்டு கோமயத்தில் இருந்து தங்கம் தயாரிக்கலாம் போன்ற அறிவியல் உண்மைகளை கண்டறிந்து உலகுக்கு வெளிப்படுத்துதல் மிக்க நலம் . மாட்டுக்கறி வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கணும்னு கூவ வேண்டும் . நாம மூணு நேரமும் பால் குடிக்கலாம் , மாட்டு தோலால் செய்யப்பட உபகரணங்களை பயன்படுத்தலாம் . மாட்ட கொன்னு அதன் இறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் . அதுல எல்லாம் பிரச்னை இல்லை<br />
<br />
4. இந்திய தேசம் என்பது இந்துயா தேசம் என்று உங்கள் காதுகளில் ஒலிக்க வேண்டும் . அயோத்தி புனித பூமி முதல் ராமர் பாலம் வரை முற்றிலும் நம்ப வேண்டும் . அயோத்தியின் சர்ச்சைக்குரிய இடத்தில கோவில் கட்டவேண்டும் என்பதை உங்களின் வாழ்நாள் இலட்சியமாக கொள்ள வேண்டும் . அனைவரும் இந்துக்களாக ஒன்றினைவோம்னு பேசணும் . இந்துக்கள் அப்படிங்கிற வரையறைக்குள்ள எல்லா ஜாதிகளையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை . ஆதாயம் இல்லாத அடித்தட்டு மக்களின் சாதிகளை கண்டு கொள்ள தேவையில்லை<br />
<br />
5. நாத்திகம் , மத நல்லிணக்கம் , பகுத்தறிவு மற்றும் மதச்சார்பின்மை போன்ற கெட்ட வார்த்தைகளை புறந்தள்ளி ஆசிரமத்துக்கு போய் தியானம் யோகா போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றின் மூலம் நீங்கள் ஆன்மீக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு முக்தி நிலையை அடையலாம்<br />
<br />
6. அப்பப்போ பிரியாணி அண்டா திருடறது, தலைக்கு விலை வெக்கறது , காதல் , பெண்களின் ஆடைகள் போன்ற கலாச்சார சீரழிவுகளை தடுத்து நிறுத்தவேண்டும் . பெண்களை சக மனிதர்களாக பாலின சமத்துவத்தோடு பார்ப்பது இறைவனின் படைப்பை அவமதிப்பது போன்ற பெரிய குற்றமாக கருதவேண்டும் .<br />
<br />
7. கீதையில சொன்னதோ போதையில சொன்னதோ புனித நூல் சொன்னதை கரெக்ட்டா கேக்கணும் . அதுல நல்ல விஷயங்களே இருந்தாலும் அதை எல்லாம் ஓத்துக்கிட்டு அன்னம் போல் நமக்கு தேவையான மத போதனைகளை மட்டும் எடுக்க வேண்டும் . கடவுள் முன்னர் மூடர்களே மூடநம்பிக்கை பற்றி பேசுவார்கள் என்ற கருத்தில் உறுதியாக இருக்கவேண்டும் .நாம் படித்த அறிவியலுக்குள் ஆன்மீகத்தை புகுத்தி அதன் வழி தேடி மோட்சம் அடைய வேண்டும்<br />
<br />
8.எல்லாவற்றுக்கும் ராணுவ வீரர்களை போற்ற வேண்டும் . அங்கே அவர்கள் சோறு தண்ணியில்லாம செத்தாலும் கண்டு கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்களின் தியாகங்களை சொல்லி நாட்டுப்பற்றை ஊட்ட வேண்டும்.<br />
<br />
9. முக்கியமா வெள்ளையாக இருக்கிறவ பொய் சொல்லமாட்டேன் என்பதுபோல் காவி கட்டியவன் நல்லது மட்டுந்தான் செய்யும் புனிதமானவன்னு நம்பனும். முருகன்னா யார்னு கேக்கணும் விநாயகர் சதுர்த்தினா ஊருபூரா சிலைவச்சு தண்ணியில கறைக்கணும்<br />
<br />
<br />
10. இதுல உள்ளதைவிட முக்கியமானது எங்கயும் எதிர்த்து ஏன்? எதுக்குன்னு கேள்வி கேக்க கூடாது . நம்பனும் ,அனுபவிக்கனும் ஆராயக்கூடாது . அது கடவுளா இருந்தாலும் கங்கையா இருந்தாலும் காவியா இருந்தாலும் என்ன கருமமா இருந்தாலும்<br />
<br />
இதெல்லாம் படிச்சிட்டு, இல்ல நான் உண்மையான தேசபக்தன் . இந்தியா எனது நாடு . நான் இங்குள்ள மக்கள் அனைவரையும் பெரிதும் நேசிக்கிறேன் . இந்நாட்டின் இறையாண்மையையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பேன்னு டயலாக் பேசினா நீங்க இருக்க வேண்டிய இடம் மனநல மருத்துவமனை மட்டுமே<br />
<br />
இந்த திறன்களை வளர்த்து கொண்டால் நீங்களும் ஆகலாம் தேசபக்தர்<br />
<br />
<br />
-சசிகுமார் முத்துலட்சுமிசசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-14537570631792914702017-03-24T22:56:00.000+05:302017-03-24T23:01:23.705+05:30காஞ்சி பயணமும் காணாமல் போன கட்டப்பாவும்<br />
<br />
தலைப்புக்கும் பதிவுக்கும் எப்பவுமே ஏதாவதொரு சம்மந்தம் இருக்க வேண்டுமா என்ன என்ற அரிய சிந்தனையின் அவுட்புட்டே இந்த பதிவு . இந்த பதிவை என்னன்னு டேக் செய்யறதுன்னு சாத்தியமா தெரியல . பயணம்னு போட்டா அந்த மீன் முள்ளுகூட மன்னிக்காது . சரி ,வழக்கம்போல எப்படியாவது ஆரம்பிப்போம் .<br />
<br />
நண்பர்களுடன் ஒவ்வொரு நண்பரின் வீட்டுக்கும் சென்று வரவேண்டும் என்ற ஆசை நெடுநாட்களாகவே எங்களுக்கு இருந்து வந்தது. அதன் இனிய துவக்கமாக சென்னைக்கு மிக அருகில் உள்ள கோவில்களின் நகரமான காஞ்சிக்கு செல்லலாம், அப்படியே நண்பர்கள் மூவர் வீட்டுக்கும் சென்று தங்கி விழாவை சிறப்பிக்கலாம் என்ற யோசனையில் ஆரம்பமானது இந்த இனிய பயணம்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-QtQxbka_X6A/WNVViEUKdNI/AAAAAAAAAm4/SZMK5dGTzycUz3aXiV96g4FUpY27oxXzgCLcB/s1600/17352262_10206208005158457_1218713394623047153_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://2.bp.blogspot.com/-QtQxbka_X6A/WNVViEUKdNI/AAAAAAAAAm4/SZMK5dGTzycUz3aXiV96g4FUpY27oxXzgCLcB/s320/17352262_10206208005158457_1218713394623047153_n.jpg" width="320" /></a></div>
<br />
<br />
ஒரு அதிகாலை நேரத்தின் அமைதியான மின்தொடர்வண்டி பயணமது . காலையில் சாப்பிட்ட உளுந்து வடையின் ருசி நாக்குலேயே நின்னாலும் காஞ்சியில் இறங்கியவுடன் பசி மெல்லமாக வெளியில் எட்டி பார்த்தது . தோழி ஒருவரின் வீட்டுக்கு சென்று சிறப்பாக சிற்றுண்டியை முடித்தோம் . பயண திட்டப்படி மாமண்டூர் குகைக்கோயில் செல்வதாக இருந்தது .ஆனால் சமயலறையில் இருந்து வந்த பறப்பது , ஓடுறது மற்றும் நீந்தறது என பலதரப்பட்ட ஜீவராசிகளின் மணமும் , வெளியில் நிலவிய வெய்யிலின் ரணமும் எங்கள் மனதை மாற்றிவிட்டது .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-V3rJZfhV1i8/WNVVwCrNcOI/AAAAAAAAAm8/NEzelLU_MDUoUTs7h6iS_CAz-Je1ZYTxwCLcB/s1600/17424643_10206208001758372_8665479096890160715_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="https://3.bp.blogspot.com/-V3rJZfhV1i8/WNVVwCrNcOI/AAAAAAAAAm8/NEzelLU_MDUoUTs7h6iS_CAz-Je1ZYTxwCLcB/s400/17424643_10206208001758372_8665479096890160715_n.jpg" width="400" /></a></div>
<br />
<br />
மதியம் சாப்பிட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு சிறு நடைபயணம் செய்து அதிலும் பனிக்கூழ் (ஐஸ் என்பதை இப்படித்தான் சொல்லணுமாம்) , நீர்பூசணி என நிரப்பிவிட்டு வந்தோம்<br />
<br />
மதிய உணவை பற்றி சொல்ல எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை . அதிலும் குறிப்பாக இந்த பிரானை சின்ன சின்னதாக நறுக்கி வெள்ளை பூண்டு எல்லாம் சேர்த்து செய்திருந்தது ரொம்ப சிறப்பாக இருந்தது . சாப்பிடவே தெரியாவிட்டாலும் உணவு போராளி என்ற பெயரை காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் சாப்பிட்ட நண்டும் அருமையாக இருந்தது . பொதுவாக ஒரு நகைச்சுவை கதை உண்டு . அதிகம் சாப்பிட்டுவிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்த ஒருத்தன்கிட்ட ஒருத்தர் சொன்னாராம் . கைய தொண்டைக்குள்ள விட்டு வாந்தியை எடுத்துடு கொஞ்சம் ப்ரியா இருக்கும்னு . அதுக்கு அவன் சொன்னானாம் அந்த அளவுக்கு எடமிருந்தா இன்னொரு ரவுண்ட் சாப்பிட்டு இருப்பேனே என்று . கிட்டத்தட்ட அந்த நிலை<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-9b0iqEn3gS4/WNVV7wfwUhI/AAAAAAAAAnA/Vk2oDMt7pOM0gUnHBy5t-S2ghw9q0uNgwCLcB/s1600/17361929_10206208008358537_6796372921741192991_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://1.bp.blogspot.com/-9b0iqEn3gS4/WNVV7wfwUhI/AAAAAAAAAnA/Vk2oDMt7pOM0gUnHBy5t-S2ghw9q0uNgwCLcB/s400/17361929_10206208008358537_6796372921741192991_n.jpg" width="400" /></a></div>
<br />
<br />
ஊரை சுத்தி பாக்கவந்துட்டு இப்படி கொட்டிக்கிட்டே இருக்கிறோமே என்று யாரும் சொல்லிட கூடாதுன்னு அன்னிக்கு சாயந்தரம் கைலாசநாதர் நாதர் கோவிலுக்கு போனோம் . சென்ற முறை வந்தப்போ நிறைய வரலாற்று கருத்துக்களை தோழி ஒருவர் சொல்லி இருந்தார் . ஆனால் எனக்கு நினைவில் இருந்தது அந்த கோவில் ராஜசிம்மனால் கட்டப்பட்டது என்பது மட்டுமே . அங்க தாயின் கருவறை போன்ற ஒரு அமைப்பு இருப்பதாகவும் அதில் நுழைந்து வெளிவருவது நல்லது என்றும் சொல்லப்படுவதுண்டு<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-6x485PKLPng/WNVWFVSB6YI/AAAAAAAAAnE/QBNJmIIk9f8jkh7HJPJ2hDtgO-gz943dQCLcB/s1600/17425109_10206208007678520_1198917669042991483_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://1.bp.blogspot.com/-6x485PKLPng/WNVWFVSB6YI/AAAAAAAAAnE/QBNJmIIk9f8jkh7HJPJ2hDtgO-gz943dQCLcB/s400/17425109_10206208007678520_1198917669042991483_n.jpg" width="400" /></a></div>
<br />
<br />
சென்ற முறை நுழைந்து வரும் போது எழ முடியாமல் சிரமப்பட்ட நியாபகங்கள் கண்முன் வர நான் வரவில்லையென தனியே புல்தரைக்கு சென்றுவிட்டேன். சில நண்பர்கள் சென்றபோது அங்கிருந்த அர்ச்சகர் திருநீறு வைக்காமல் உள்ளே போககூடாதுன்னு சொல்லி திருப்பி அனுப்பி எங்களின் கோபத்தை மூட்டிவிட்டார் . இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் ஒரு கோவிலில் இவ்வாறு சொல்லி இருந்தால் பேசாமல் சென்று இருப்போம். கைலாசநாதர் கோவில் இந்திய தொல்லியல் துறையின்கீழ் வரும் ஒரு கோவில் . அது கோவில் என்பதை தாண்டி ஒரு வரலாற்று சுவடு . அங்கு வருபவர்கள் எல்லாம் கடவுளை மட்டுமே நாடி வரும் பக்தர்களாக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை . தங்களின் வரலாற்று தடங்களை பற்றி அறியும் ஆர்வம் கொண்ட யாவரும் வருவார்கள் . இத கூட தெரியாம இருக்குது இந்திய தொல்லையியல் துறை . இனிமேலாவது அபிஷேகம் மட்டும் பண்ணுங்கய்யா அட்வைஸ் பண்ணாதீங்க<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-nebiIvvFmAQ/WNVWNBhPblI/AAAAAAAAAnI/wB_hQ-KQo5MGK-b6FPEwPk-QMCQWqQgswCLcB/s1600/17425035_10206208011078605_3682721481062480800_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://1.bp.blogspot.com/-nebiIvvFmAQ/WNVWNBhPblI/AAAAAAAAAnI/wB_hQ-KQo5MGK-b6FPEwPk-QMCQWqQgswCLcB/s400/17425035_10206208011078605_3682721481062480800_n.jpg" width="400" /></a></div>
<br />
<br />
இன்னொரு நண்பரின் வீட்டு சுவையான காஞ்சிபுரம் இட்லியுடன் அந்த நாள் முடிந்தது . காலை ஆரம்பித்ததில் இருந்தே புத்தகங்களையும் திரைப்படங்களையுமே அதிகம் பேசி இருந்தோம் . இரவு சிறிது உரையாடலுடன் இனிதே நிறைவடைந்தது<br />
<br />
இரண்டாம் நாள் காலை அருகில் இருந்த மற்றொரு கோவிலுக்கு சென்றுவிட்டு அங்குமொரு வெறுப்பேற்றும் அனுபவத்துடன் திரும்பினோம். மற்றொரு நண்பரின் இல்லத்தில் சிற்றுண்டியை முடித்துவிட்டு மாமண்டூர் குகை கோவில் நோக்கி கிளம்பும் போது மணி பதினொன்றை தொட்டுவிட்டது. வெயிலின் உக்கிரத்தில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் சில மறக்க முடியாத நிழற்படங்களை எடுத்துவிட்டு கிளம்பினோம் . அதற்க்கு முன்னர் வழியில் ஒரு சமண கோவில் சென்று இருந்தோம் . புகைப்படம் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளவே அங்கிருந்த சிலைகள் மற்றும் அவர்களின் வழிபாட்டு முறைகளை கொஞ்சம் கவனித்துவிட்டு திரும்பினோம் .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/--Ghh6XjvfwM/WNVWZEQeh4I/AAAAAAAAAnM/UmFZZElWrvkmQutt7Joph2iODAEQiPnMACLcB/s1600/17362639_10206208005438464_3678200702949946771_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="https://1.bp.blogspot.com/--Ghh6XjvfwM/WNVWZEQeh4I/AAAAAAAAAnM/UmFZZElWrvkmQutt7Joph2iODAEQiPnMACLcB/s400/17362639_10206208005438464_3678200702949946771_n.jpg" width="400" /></a></div>
<br />
<br />
மாமண்டூர் முடித்துவிட்டு வந்தவுடன் முந்தைய மதியம் உண்டது போலவே ஈவு இரக்கமில்லாமல் அணைத்து ஜீவன்களையும் புசி புசியென புசித்துவிட்டு கொஞ்சம் ஒய்வு எடுத்தோம் .<br />
<br />
முந்தைய நாள் பேசி தீர்மானித்திருந்தது போல் மாநகரம் திரைப்படம் செல்ல ஆயத்தமானோம் . ஆனால் ஷோ டைம் நாங்கள் சென்ற நேரத்துக்கு இல்லாமல் போனது . உடனே திரும்பி இருக்கலாம் அல்லது வேறு ஆங்கில படத்திற்கு சென்று இருக்கலாம் ஆனால் விதி யாரை விட்டது . மீன் , வித்தியாசமான பெயர் இதை எல்லாம் நம்பி கட்டப்பாவை காணோம் என்ற திரை காவியத்துக்கு போனோம் .<br />
<br />
இதுவரை சிறப்பாக சென்ற பயணத்தின் (அல்லது விருந்தின் ) ஒரு திருஷ்டி போட்டு போல அமைந்து விட்டது . டைரக்ட்டர் பெயர் சேயோன் , அதனாலயோ என்னவோ எங்களை வச்சி செஞ்சுட்டார்<br />
<br />
<br />
இந்த பயணம் நண்பர்களின் வீட்டுக்கு செல்வதுடன் அவர்களை பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் அவர்களின் குடும்பத்தினருடன் பேசி மகிழவும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது . நண்பர்களின் சின்ன வயது புகைப்படங்கள் , செல்ல பெயர்கள் , சின்ன சின்ன குறும்புகள் எல்லாவற்றையும் பெற்றோர் மூலம் கேட்பது மிகவும் சிறப்பான அனுபவம் . ஆனா இந்த பதிவுல அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லாம முழுக்க முழுக்க சாப்பாடு மட்டும் வந்ததுன்னா அதுக்கு காரணம் அம்மாக்களோட கைப்பக்குவம் .<br />
<br />
இப்படியே எல்லா வீட்டு கைப்பக்குவதையும் ரசிச்சு ருசிக்க இன்னும் நிறைய பயணப்படவேண்டியுள்ளது .<br />
<br />
ஒரு நெடிய பயணத்தின் ஆரம்பமாக இதை சொல்லலாம்<br />
<br />
ஒரு வழிய ட்ரிப் முடிஞ்சு போச்சு<br />
<br />
பி.கு :<br />
<br />
ரொம்ப நாளாச்சு ஒரு பதிவு எழுதி , அதுவும் புது லேப்டப் வாங்கின நேரம் ஒரு போஸ்ட் கூட எழுத முடியல . அடுத்த பதிவா பயணங்களில் சந்திச்ச சில மறக்க முடியாத மனிதர்களை பற்றிய ஒரு பதிவு "சில பயணங்களில் சில மனிதர்கள் "<br />
<br />சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-80955499142031917222017-01-29T15:14:00.002+05:302017-01-30T00:12:04.817+05:30ஜல்லிக்கட்டு <div class="ksoContent print-kso" style="color: #333333; font-family: "Open Sans", "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 17px; line-height: 27px; margin-bottom: 15px;">
<div class="iconed big-iconed" style="position: relative;">
<div class="iconedBody js_like_icon_body" style="min-height: 45px; padding-left: 55px;">
<div class="kdescription" ng-non-bindable="true">
ஜல்லிக்கட்டு பற்றிய எனது புரிதல்களை விரிவான ஒரு பதிவாக எழுத வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக இருந்து வந்தது . அதற்கான காலம் இப்பொழுதுதான் வாய்த்திருக்கிறது .<br>
<br>
ஜல்லிக்கட்டு வேண்டும் என மெரினா ,அலங்காநல்லூர் மற்றும் அனைத்து தமிழக பகுதிகளிலும் நடந்த போராட்டங்கள் மிக பெரிய வெற்றியையே தந்துள்ளன . கடைசி நாளில் சில வேண்டத்தகாத சம்பவங்கள் நடந்தாலும் இந்த போராட்டம் நிச்சயமாக வரலாற்று சிறப்புமிக்கது . எந்த ஒரு தலைமையும் இல்லாமல் , ஒத்த கருத்துக்களோ சித்தாந்தங்களோ இல்லாத பல தரப்பட்ட மக்கள் ஒரே போராட்டக்களத்தில் இணைவதே சரித்திரம் தான் . அதை தாண்டி அரசுக்கோ பாமர மக்களுக்கோ அல்லது சுற்றுசூழலுக்கோ எந்தவித சேதமும் சிதைவும் இன்றி இளைஞர் கூட்டம் போராடியது ஒட்டு மொத்த தேசத்துக்கும் ஒரு உதாரணம் என்றே சொல்லலாம்.<br>
<br>
<br>
இதுவரை போராட்டம் என்பதை கேலிக்கூத்தாக பார்த்த பலதரப்பட்ட மக்கள் தெருவில் இறங்கி போராடியது நிச்சயம் வரவேற்கத்தக்கது . இவ்வளவு பெரிய கூட்டம் கூடிவிட்டது என்ற ஒரே காரணத்துக்காக நோக்கத்தை (ஜல்லிக்கட்டு ) விடுத்தது பலதரப்பட்ட கோரிக்கைகளை எழுப்பியதில் எனக்கு உடன்பாடு இல்லை . அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புரிதல்களை அல்லது விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஈழம் தொடங்கி விவசாயிகளின் தற்கொலை வரை பலதரப்பட்ட கருத்துக்களை பேசியதில் தவறில்லை என்றே கருதுகிறேன் . ஆனால் அவை இந்த இனிய தொடக்கத்தில் நாம் எதை நோக்கி போகிறோம் என்ற கண்ணோட்டத்தை மாற்றிவிட கூடாது<br>
<br>
முதலில் ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடக்க வேண்டும் என்பதில் நாம் யாருக்கும் மாற்று கருத்து இல்லை . ஆனால் ஜல்லிக்கட்டு ஏன் வேண்டும் என்ற கேள்விக்கான பதில் ஒவ்வொருவரிடமும் வேறுபடுகிறது .<br>
<br>
ஜல்லிக்கட்டு எனது கலாச்சாரம் என்ற முழக்கங்களை கேட்கும் போது எனக்கு தோன்றுவது இதுதான் . கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியென பெருமைப்படும் எமது மண்ணின் கலாச்சாரம் ஜல்லிக்கட்டு மட்டும்தானா ?. ஏர் உழுதல் என்ற நிலையை டிராக்டர்கள் வந்து நீக்கிவிட்டு பிறகு ஏறு தழுவுதல் நிச்சயம் வேண்டும் என்று சொல்வது எனக்கு முரண்பாடாகவே தெரிகிறது .என்னுடைய கலாச்சாரத்தையும் பண்பட்ட பழக்கவழக்கங்களையும் கால ஓட்டத்துக்கு தகுந்தவாறு நான் மாற்றிக்கொண்டு வந்துள்ள போது ஜல்லிக்கட்டு மட்டும் எதனால் விதிவிலக்கு என்ற கேள்வி எழுகிறது .<br>
<br>
ஆக எனது கலாச்சாரமோ பழக்கவழக்கமோ அதை மாற்றி கொள்வதும் தொடர்ந்து கடைப்பிடிப்பதும் எனது விருப்பம் . அதை நானே விடுப்பது சரி ஆனால் யாரோ ஒருவர் அதை சிதைப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலைப்பாடே கோபமாக பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைத்திருப்பதாக கருதுகிறேன்<br>
<br>
<br>
அடுத்து ஜல்லிக்கட்டு இருப்பதால் விவசாயிகள் பயன்பெறுவர் என்ற கருத்துக்களில் எனக்கு எள்ளளவும் உடன்பாடு இல்லை . பொதுவாக ஜல்லிக்கட்டுக்கென தயார் செய்யப்படும் காளைகளை மற்ற பயன்பாடுகளுக்கு உபயோகிப்பதில்லை . மேலும் அவற்றை வளர்த்து பராமரிக்க ஆகும் செலவை ஈடு கட்டுவது கடினம் . மண்ணையும் மழையையும் நம்பி மட்டுமே பிழைப்பு நடத்தும் விவசாயிகள் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் அளவுக்கு செல்வந்தர்கள் இல்லை .<br>
<br>
விவசாயிகள் என்ற போது பெயரில் உள்ள பலதரப்பட்ட வர்க்கங்களை அடையாளம் காணுவது முக்கியம் . பல நூறு ஏக்கர்களை (நில உச்ச வரம்பு சட்டம் ?!?) கொண்ட பெரு மற்றும் சிறு ஜமீன்தார்கள் அல்லது நிலக்கிழார்கள் , சொந்த நன்செய் நிலத்தில் விவசாயம் செய்ப்பவர்கள், புஞ்செய் நிலங்களில் மழையையும் பருவ காலங்களை நம்பி பயிரிடுவார்கள் , தன் சொந்த நிலம் இல்லாவிட்டாலும் குத்தகைக்கு நிலம் வாங்கி விவசாயம் செய்பவர்கள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் என பலதரப்பட்ட வர்க்கங்களை உள்ளடக்கியது விவசாயம் என்னும் சொல் .<br>
<br>
எனது கிராமம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டது . அதன் சுற்று வட்டார கிராமங்களுடன் சேர்த்து காளைகள் வளர்க்கும் விவசாயிகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் . பொதுவாக ஜமீன்தார்கள் , பெரு நில முதலாளிகளே தங்களின் சமூக அல்லது வர்க்க கௌரவமாக காளைகளை அதிக அளவில் வளர்க்கிறார்கள் . சதவிகித அடிப்படையில் அன்றாடம் நிலத்தில் இறங்கி பாடுபடும் விவசாயிகள் வளர்க்கும் காளைகள் குறைந்த அளவிலானவையே . அப்படி இருக்க ஜல்லிக்கட்டினால் விவசாயிகள் மேன்மை அடைவார்கள் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது<br>
<br>
இதையெல்லாம் தாண்டி நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்க காரணம் . காளைகள் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டு வீட்டு விலங்குகள் ஆகிவிட்டன (சட்டம் வனவிலங்குன்னு சொல்லும் விலங்கே இல்லைன்னு கூட சொல்லும் ). பொதுவாக வீட்டு விலங்குகளை வளர்க்க காரணம் அவற்றின் பயன்பாடுகள் மனிதனுக்கு தேவைப்பட்ட காரணம் தான் . எந்த விவசாயியும் நாயை காவலுக்காக வளர்க்காமல் அழகுக்காக மட்டும் வளர்ப்பதில்லை .<br>
தற்காலத்தில் நாட்டு பசுவினங்களுக்கு பதிலாக அதிகம் பால் தர கூடிய ஜெர்சி போன்ற மேலை நாட்டு அல்லது கலப்பு இனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன . மேலும் காளைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் சினை பிடிப்பது என்பது இயற்கையான சேர்ப்பாக அல்லாமல் சினை ஊசி என்ற நிலை வெகுவாக அனைத்து இடங்களிலும் நிலவுகிறது . இவ்வாறாக காளைகளின் பயன்பாடு என்பது குறைந்து ஒரு கட்டத்தில் முழுக்க அற்று போய்விடுகிறது . இப்பொழுது சொல்லுங்கள் நான் எனக்கு எந்த வகையிலும் பயன் தராத வீட்டு விலங்கை ஏன் வளர்க்க வேண்டும் ?. இந்த நிலைப்பாடே அதிக அளவில் மாட்டினங்கள் அழிந்து போக காரணமாகின்றன . இந்த ஒரே காரணத்தால் தான் ஜல்லிக்கட்டு ,கம்பாலா மற்றும் ரேக்ளா பந்தயம் போன்ற பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டிய தேவைப்படுகிறது .<br>
<br>
ஊடகங்களிலும் சரி சமூக வலைத்தளங்களிலும் சரி ஒரு சாரார் முன் வைத்த கேள்வி மாட்டை கொன்று தின்பார்களாம் ஆனால் ஜல்லிக்கட்டு மட்டும் அனுமதிக்க மாட்டார்களாம் என்ன நியாயம் இது எனபது .<br>
இந்த தேசம் பலதரப்பட்ட சமூக , இன , மத பழக்கவழக்கங்களை உடைய மக்களை கொண்ட துணைக்கண்டம் . தொன்று தொட்டே மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் சில சமுதாய மக்களிடம் இருந்து வந்துள்ளது . அப்படி இருக்க சில மதவாத அமைப்புகள் மாட்டுக்கறிக்கு எதிராக அரசியல் செய்து வருவது துரதிஷ்டவசமானது . அதுவும் ஜல்லிக்கட்டில் இதை கலப்பது மிகவும் தவாறானது .<br>
<br>
இவர்களிடம் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்க விரும்புகிறேன் . மாட்டுக்கறிக்கு எதிரான கொள்கைகள் கொண்ட பசுவை புனிதமாக வணங்கும் ஒரு தேசம் எப்படி மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் முதலிடம் வகிக்க முடியும் . ஆக மாட்டினங்களை காக்க நீங்கள் உண்மையிலேயே விரும்பினால் மாட்டுக்கறி உண்பவர்களை விடுத்து அதை ஏற்றுமதி செய்வதை எதிர்த்து நில்லுங்கள்<br>
<br>
<br>
<br>
<br>
ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்பவர்களான பூர்வா ஜோஷிபுரா தொடங்கி ராதா ராஜன் அம்மையார் வரை அனைவரும் ஆர்.எஸ் .எஸ் மற்றும் பா.ஜ,க பிரமுகர்களாக இருப்பது விந்தையிலும் விந்தை (ஆர்.எஸ் .எஸ் அமைப்பு ஜல்லிக்கட்டை எதிர்க்கிறதுன்னு சொன்னா நாம தேச துரோகி ஆயிடுவோம் மக்களே )<br>
<br>
அடுத்ததாக இப்பொழுது ஜல்லிக்கட்டுக்கு எதிராக கியுபா (திட்ட கூட முடியாத ஒரு பேர வச்சி தொலைச்சிட்டானுவளே ) என்ற அமைப்பு தடை கேட்டுள்ளது . போராட்ட காலத்தில் நமது பார்வை முழுக்க முழுக்க பீட்டாவின் மேல் மட்டுமே இருந்தது . ஜல்லிக்கட்டு முதன் முதலில் தடை வாங்கிய AWBI (Animal Welfare Board Of India)தொடங்கி புளு கிராஸ் வரை பல அமைப்புகள் இருந்தாலும் தற்போதைக்கு சிக்கியிருந்த பீட்டாவின் மேல் மட்டும் நமது எதிர்ப்பு சென்றது ஒரு வகையில் அவர்களுக்கு நன்றாக போய்விட்டது.<br>
<br>
ஜல்லிக்கட்டு என்பது ஆதிக்க சாதியினரின் விளையாட்டு என்ற கருத்து நிலவுகிறது . இதை பல ஆய்வாளர்கள் மறுத்த போதிலும் எனக்கு ஒரு கேள்வி மட்டும் எழவே செய்கிறது . ஐவகை நிலவகைகள் தோன்றிய காலங்கள் தொட்டு ஒரு மனிதன் சாதி போன்ற சமுதாய /சமய அடையாளங்கள் அவன் செய்யும் தொழிலை சார்ந்தே தோன்றியுள்ளன . வேளாண்மையும் ஆநிரை மேய்த்தலும் நிச்சயம் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே செய்து வந்திருக்க முடியும் . எனக்கு தெரிந்த மட்டில் விவசாயம் சில குறிப்பிட்ட ஆதிக்க சாதி மக்களால் அதிகம் செய்யப்படுகிறது (அல்லது அநேக நில உடைமையாளர்கள் ஆதிக்க சாதியினராக மட்டுமே இருந்திருக்கிறார்கள் ) . அப்படி இருக்க ஜல்லிக்கட்டு என்பது ஒரு சாதி சார்ந்த நிகழ்வு இல்லையென்று என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை . கார்த்திகேய சிவசேனாபதியம் ஆதியும் இதற்கு சிறந்த உதாரணங்கள் .<br>
<br>
ஆனால் அதற்காக ஜல்லிக்கட்டை என்னால் புறக்கணிக்க முடியவில்லை . முன்பே சொன்னது போல் இங்கு கலாச்சாரம் என்பது கூட மக்களை பொறுத்து மாறுபடுகிறது . அப்படி இருக்க எந்த தரப்பு மக்களாக இருந்தாலும் சரி அவர்களின் வாழ்வியல் சார்ந்த காரணிகள் காப்பாற்ற பட வேண்டியவையே .<br>
அடித்தட்டு மக்களின் நலனும் பழக்கவழக்கங்களும் காப்பாற்ற படவேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை . ஆனால் அதற்காக ஆதிக்க சாதியினரின் பழக்கவழக்கங்களை புறந்தள்ளுவதையோ மிதிப்பதையோ என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை .<br>
<br>
பின்குறிப்பு :<br>
முன்னரே எழுதி இருக்க வேண்டிய பதிவு . எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தது போல ஆகிவிடக்கூடாது என்பதால் கொஞ்சம் தாமதமாக எழுதுகிறேன் . இதில் உள்ள கருத்துக்கள் முழுக்க முழுக்க எனது புரிதல்கள் மட்டுமே . இது தவறு என நீங்கள் தகுந்த ஆதாரங்களுடன் சுட்டி காட்டும் பட்சத்தில் அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் .</div>
</div>
</div>
</div>
சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-58861757471599599972016-12-01T11:44:00.000+05:302016-12-01T11:44:36.480+05:30வானொலி<br />
<br />
"வானொலி கேட்கும் நேரம்<br />
நம் வாழ்வின் உன்னத நேரம் "<br />
<br />
அண்மையில் ஹலோ எப்.எம்ல டைரினு ஒரு நிகழ்ச்சி கேட்டேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் ரேடியோ கேட்டதுல அந்த நிகழ்ச்சி ரொம்ப புடிச்சு இருந்துச்சு . மேலும் பால்ய காலத்தில் வானொலி கேட்ட அனுபவங்களை அசை போட தூண்டிவிட்டது. அதன் விளைவே இந்த பதிவு<br />
<br />
துல்லியமாக எந்த வயதில் இருந்து வானொலி கேட்க ஆரம்பித்தேன் என்று நினைவில்லை. அப்பொழுது அதிகம் கேட்கும் அலைவரிசைகள் சென்னை , திருச்சிராப்பள்ளி மற்றும் சிலோன் போன்றவை தான். செய்திகள் , திரை இசைப் பாடல்கள் , சிறார் பல்சுவை நிகழ்ச்சிகள் , நாடகங்கள் மற்றும் ஒலிச்சித்திரங்கள் என பல நிகழ்ச்சிகள் கேட்டு மகிழ்ந்த நினைவு.<br />
<br />
மதிய உணவு வீட்டில் 1.45 மணி செய்திகளுடன் முடிய இரவு உணவு 7.15 மணி செய்திகளுடன் ஆரம்பிக்கும். ஆல் இந்தியா ரேடியோ , ஆகாஸவாணி என இரு வேறு செய்திப் பிரிவுகள் இருந்தன.<br />
<br />
வாரயிறுதி நாட்களில் ஒலிபரப்பாகும் ஒலிச் சித்திரங்கள் ( திரைப்படம்) மிகவும் பிடித்தமானவை. சிவகாமியின் சபதம் முழு நாவலை வாராவாரம் ஒலிச் சித்திரமாக கேட்டு முடித்தேன்.<br />
<br />
பிறகு பண்பலை வானொலிகள் வர ஆரம்பித்தவுடன் வானொலி என்பது எல்லா நேரத்திலும் கேட்க கூடிய ஒன்றானது. நெசவு உள்ளிட்ட தொழில் செய்பவர்களுடன் பன்பலைகள் முழு நேர அங்கமாகின.<br />
<br />
எங்க ஊர் சைடுல கொடைக்கானல் எப்.எம் மட்டும்தான் தெளிவா எடுக்கும் . சூரியன் எப்.எம்க்கு அவ்வளவு தெளிவா சமிக்ஞைகள் கிடைக்காது.<br />
<br />
இன்னிக்கு வரை எத்தனையோ பண்பலைகள் கேட்டாலும் எனக்கு எப்பவுமே கோடை எப்.எம் மட்டும்தான் பேவரெட். அப்போ காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒலிபரப்பை கொடுத்து வந்தது.<br />
<br />
வானவில் , சந்தோஷ சாரல் , சிந்தனை கட்டங்கள் , Knock out damaka , செப்புக செந்தமிழ், குறிஞ்சித் தென்றல், தொட்டு தொட்டு என நிகழ்ச்சிகள் ஏராளம். நேயர்கள் கடிதங்களுக்காகவே இரண்டு மணி நேரம் ஒதுக்கும் அளவுக்கு 22 மாவட்டங்களில் தன் இன்னிசை ஆதிக்கத்தை பரவி இருந்தது .<br />
<br />
நேயர்களின் எண்ணங்களுடன் வண்ணம் பெறும் வானவில் நிகழ்ச்சி முக்கியமானது. அப்போது நிலைய இயக்குனராக இருந்த மகாசோமாஸ் கந்தமூர்த்தி ஐயா அவர்கள் ஒருங்கிணைக்கும் வானவில் மிகவும் ரம்மியமானது.<br />
<br />
சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் வழங்கிய மீனாட்சி விலாசம் குடுப்பத் தொடரை விடாமல் கேட்டதுண்டு. பாகவதர், பழமொழி பாக்கியத்தம்மாள் என அனைத்து கதாப்பாத்திரங்களும் இன்றும் மனசில் நிற்கின்றன.<br />
<br />
ஆங்கில கலப்பு இல்லாமல் சில விதிமுறைகளுடன் வலம் வரும் செப்புக செந்தமிழ், உண்டு களைத்தவுடன் 2 மணிக்கு துள்ளல் இசைப் பாடல்களுடன் வரும் நாக்அவுட் டமாக்கா, விளம்பரதாரர் நிகழ்ச்சியாக நவசதீஷ்குமார் வழங்கும் டாப் 5 சாங்ஸ் என ஒவ்வொரு நிகழ்ச்சியும் பசுமையாக இனிய நினைவுகளுடன் பதிந்துள்ளன.<br />
<br />
வானொலி வரலாற்றில் குறுக்கெழுத்துப் புதிரை ஒலிபரப்பிய பெருமை கோடைப் பண்பலைக்கு மட்டுமே உண்டு. சிந்தனைக் கட்டங்கள் என்ற பெயரில் ஒலிபரப்பான அந்த நிகழ்ச்சிதான் பிற்காலத்தில் நான் சில தமிழ் குறுக்கெழுத்துப் புதிர்கள் உருவாக்க உத்வேகமாக இருந்தது.<br />
<br />
Tone Tunes என்ற பெயரில் வலம் வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் முக்கியமானது.<br />
<br />
பின்னர் இரவு பத்து மணி வரை ஒலிபரப்பை நீட்டித்து தற்போது 24 மணி நேரமும் ஒலிபரப்பாகி வருகிறதென நினைக்கிறேன். <br />
<br />
ஜான் டீ பிரிட்டோ , சித்ரா.எஸ்.ரவி என சில தொகுப்பாளர்களின் பெயர்தான் நினைவில் உள்ளது.<br />
<br />
பாட்டு போடுற ஒரு சாதாரண எப்.எம் என கோடைப் பண்பலையை என்னால் நினைக்க முடியவில்லை. அதை தாண்டிய ஒரு பிணைப்பு இருப்பதாகவே கருதுகிறேன்.<br />
<br />
#Kodai_FM #100.5சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-33723886470872122362016-08-16T22:50:00.000+05:302016-08-16T22:50:08.307+05:30புதுக்கோட்டை சுற்றுப்பயணம்வாழை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து எங்காவது சுற்றுலா செல்லவேண்டும் என்பது நீண்ட நாள் பேச்சாகவே இருந்துவந்தது . ஒருவழியாக நண்பர் மணிவண்ணன் அதற்கு செயல் வடிவம் கொடுக்க முன் வந்தார் . தன் சொந்த ஊரான புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல இடங்களை சுற்றி பார்க்கலாம் என்ற யோசனையை அனைவரும் ஏற்றோம்<br />
<br />
சுற்றுலா செல்ல ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளை முடிவு செய்திருந்தோம் . நீளமான வாரயிறுதி என்பதால் கடும் போக்குவரத்து நெரிசலை தாண்டி நார்த்தாமலை சென்று சேர்ந்தோம் . அதற்குள் பெங்களுருவில் இருந்து இதர நண்பர்கள் வந்து பயணத்தை தொடங்க காத்திருந்தனர்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-66GKkeYk0lw/V7NGT8NRa2I/AAAAAAAAAZg/5vR_Ab4k580QN2mG-XnDxh4TQn0oLgOFwCLcB/s1600/IMG-20160815-WA0044.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://2.bp.blogspot.com/-66GKkeYk0lw/V7NGT8NRa2I/AAAAAAAAAZg/5vR_Ab4k580QN2mG-XnDxh4TQn0oLgOFwCLcB/s640/IMG-20160815-WA0044.jpg" width="640" /></a></div>
<br />
<br />
சுற்றிலும் அழகிய பாறைகளும் சிறு சிறு நீராதாரங்களும் நிரம்பிய நார்த்தாமலை எங்களை வரவேற்று அணைத்து கொண்டது . பாசி படர்ந்த அழகிய குட்டைகளில் அகமகிழ்ந்து<br />
நீராடி ஓடோடி விளையாடினோம் . காலை சிற்றுண்டிக்கு பிறகு நார்த்தாமலை எற ஆரம்பித்தோம் . கண்ணுக்கெட்டிய தூரத்தில் புறப்பட்ட மலை நடக்க நடக்க தூரம் போய்க்கொண்டிருந்தது .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-TANNf4_kxgU/V7NHQvbqR1I/AAAAAAAAAZk/IGGIDtyIpZMJpUL6UXDn2kLlnTVZcqHzACLcB/s1600/IMG-20160815-WA0039.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://4.bp.blogspot.com/-TANNf4_kxgU/V7NHQvbqR1I/AAAAAAAAAZk/IGGIDtyIpZMJpUL6UXDn2kLlnTVZcqHzACLcB/s640/IMG-20160815-WA0039.jpg" width="640" /></a></div>
<br />
நார்த்தாமலையில் அமைந்திருந்த குடைவரை கோவில் எங்களை பெருமளவில் ஈர்த்தது . பல்லவர்கள் ,பாண்டியர்கள் , சோழர்கள் , முத்தரையர்கள் மற்றும் நாயக்கர்கள் ஆண்ட பகுதியென மண்ணின் மைந்தர் மணி எங்களுக்கு விளக்கம் கொடுத்து கொண்டே வந்தார் . சோழர் கால கல்வெட்டுகள் சிலவற்றையும் பார்க்க முடிந்தது . பதினெண்பூமி விண்ணகரம் மற்றும் திருமேற்கோவில் என அவ்விடம் அழைக்கப்படுவதாக அறிய முடிந்தது .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-yM3renUcv9Q/V7NJC3vfygI/AAAAAAAAAZ4/xW7nLfx6_VwsvTwjrrL7OBUdmikcjwI4wCLcB/s1600/IMG_20160813_120125412.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://4.bp.blogspot.com/-yM3renUcv9Q/V7NJC3vfygI/AAAAAAAAAZ4/xW7nLfx6_VwsvTwjrrL7OBUdmikcjwI4wCLcB/s640/IMG_20160813_120125412.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<br />
அடுத்ததாக நான் ஆர்வமுடன் எதிர்நோக்கி இருந்த சித்தன்னவாசல் நோக்கி புறப்பட்டோம் . அழகிய சித்தன்னவாசல் ஓவியங்கள் குறித்து எங்களுக்கு வழிகாட்டியாய் அங்கிருந்த தொல்பொருள் துறை ஊழியர் உதவினார் .<br />
<br />
அழகிய வண்ண சித்திரங்களில் இதயத்தை தொலைத்துவிட்டு அவரின் நேர்த்தியான விவரிப்பை கேட்டு மகிழ்ந்தோம் . அன்னப்பறவைகள் ,தர்மரை மலரின் பருவ நிலைகள் , அழகிய குளம் ஒன்றில் பூவினங்கள் புள்ளினங்கள் மாந்தர்கள் என பல்லுயிர் ஓம்பும் ஓவியம் என சிலாகித்து மகிழ்ந்தோம் .. இந்த ஓவியங்களில் குழந்தை பருவம் , இல்லறம் , துறவறம் மற்றும் சமாதி ஆகிய நிலைகள் மறை பொருளாக உணர்த்தப்படுவதாக ஐயா கூறினார் .<br />
<br />
அங்கே ஒரு அறையில் எழுப்பப்பட்ட ஒலி கற்களால் கிரகித்து கொள்ளப்பட்டு மற்றும் எதிரொலிக்கப்படும் விந்தையை கண்டு சொல்லற்று நின்றோம் . 1.5 Km நீளமுள்ள பாறையில் அந்த இடத்தை மட்டும் கண்டுபிடித்து உருவாக்கிய நுட்பத்தை எண்ணி சிலாகித்தோம்.<br />
<br />
அடுத்து சமணர் படுகைகள் உள்ள இடத்துக்கு கொஞ்சம் மலையேற வேண்டி இருந்தது நண்பகல் வெயிலில் . அங்கொன்றும் இங்கொன்றுமாக 17 படுகைகள் இருந்தன . சமணர்கள் அங்கு வாழ்ந்ததற்கு அவை ஆதாரம் . மக்கள் அங்கு சென்றுள்ளனர் என்பதற்கு பல கிறுக்கல்களும் இதயத்தை துளைக்கும் அம்புகளும் ஆதாரங்களாக விளங்கின . பாறையின் நிழலில் படுகைகளை பக்கத்தில் கண்களை மூடி கிடந்த தருணங்கள் இனிமையானவை .<br />
<br />
<br />
குடுமியான் மலை செல்லும் வழியில் சிறிய சாரல் மழை பொழிந்து எங்கள் பயணத்தை வளப்படுத்தியது . குடுமியான்மலையில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட அர்த்த மண்டபத்தில் பல்வேறு வகையான சிற்பங்களை பார்க்க முடிந்தது . அங்கு எங்களை கட்டி போட்டது இரண்டு விடயங்கள் தான் . முதலாவது தேனிசை கல்வெட்டு . தேனிசை என்றதும் ஆச்சர்யபட வேண்டாம் .அது இசை குறிப்புகள் அடங்கியுள்ள கல்வெட்டுதான் ஆனால் அதை எப்பொழுதும் பாதுகாப்பது தேனீக்கள் என்பதனால் அந்த பெயர் . மனிதன் பாதுகாத்திருந்தால் கூட சேதம் ஏற்பட்டிருக்கலாம் . இரண்டு முதல் ஏழு தேன்கூடுகள் அமைந்து எப்பொழுதும் ஒரு முரணாகவே அமைந்திருக்குமாம் .<br />
<br />
அடுத்து நடு மலைப்பகுதியில் காணப்பட்ட நாயன்மார்களின் சிற்பங்கள் தான் . இதிலென்ன சிறப்பு என்கிறீர்களா ? . மலையின் நடுப்பகுதி யாருமே செல்ல இயலாவண்ணம் செங்குத்தாக அமைந்திருந்தது அதில் எவ்வாறு இத்தகைய சிற்பங்களை அமைத்தார்கள் என தெரியவில்லை<br />
<br />
இறுதியாக கொடும்பாளூர் சென்றோம் .பூதி விக்கிரமகேசரி கட்டிய ஒரு கற்றளியை கண்டோம் . அகழ்வாராய்ச்சியின் போது கண்டறியப்பட்ட அந்த இடத்தில ஒரு நிலைக்கிணறு இருந்தது . மேலும் மகாமண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் ஆகிய சேதம் அடைந்திருந்தன.<br />
<br />
இவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்த இனிய நாள் இத்துடன் முடிந்துவிடவில்லை என்பதை நண்பர் மணி வீட்டுக்கு சென்றவுடன் உணர முடிந்தது . தங்கைகள் , தம்பிகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கூடி எங்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தது மறக்க முடியாத அனுபவம் . பிறகு மொட்டைமாடியில் அனைவரும் அமர்ந்து நிலாச்சோறு உண்டோம் . பெரிய வாழை இலையில் ஆடும் மீனும் விளையாட அதனோடு சேர்ந்து நாங்கள் உறவாடினோம் .<br />
<br />
<br />
தெவிட்ட தெவிட்ட இன்பம் கொடுத்த முதல் நாள் இனிதே நிறைவு பெற்றதுசசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-5753207592473683892015-06-07T01:29:00.001+05:302015-06-07T01:31:51.934+05:30மூங்கில் காடுகளினூடே ஒரு பயணம்<br />
<br />
<br />
<br />
வாழை மெகா வொர்க்சாப்பை எங்கு நடத்துவது என்ற பேச்சு ஆரம்பித்த பொழுது இந்த முறை சற்று வித்தியாசமாக வானகம் அல்லது மூங்கில் கோம்பையில் நடத்தலாம் என்ற கருத்துகள் வெளிப்பட்டன . ஏற்கனவே வானகம் சென்று வந்ததால் மூங்கில் கோம்பை இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-Ien6JSB-xzQ/VXNPAMR15pI/AAAAAAAAAKo/thWtZshQeY0/s1600/11401042_712949212149052_8581269771553352058_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="http://1.bp.blogspot.com/-Ien6JSB-xzQ/VXNPAMR15pI/AAAAAAAAAKo/thWtZshQeY0/s640/11401042_712949212149052_8581269771553352058_n.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<br />
ஒரு வழியாக மூங்கில் கோம்பை (Coop Forest) என முடிவு செய்தவுடன் மனம் ஒவ்வொரு கணமும் எதிர்பார்ப்பில் காத்திருக்க ஆரம்பித்தது . நண்பனின் கல்யாணத்துக்கு செல்ல வேண்டி வாங்கிய விடுமுறையை பயிலரங்கிற்கு உபயோகப்படுத்தி கொள்ள முடிவு செய்து வியாழக்கிழமை இரவே இங்கிருந்து சக நண்பர்களுடன் கிளம்பி விட்டேன்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-QFEQ9NdM_GU/VXNPJaCZkyI/AAAAAAAAAKw/t3bacq3gsuk/s1600/07ppcoopforest_2_J_1646171g.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="http://1.bp.blogspot.com/-QFEQ9NdM_GU/VXNPJaCZkyI/AAAAAAAAAKw/t3bacq3gsuk/s640/07ppcoopforest_2_J_1646171g.jpg" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-IrS608GU4Tk/VXNPLkW2bqI/AAAAAAAAAK4/jmVRfdVuo8Q/s1600/11393084_712949268815713_8899477382515859043_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="http://2.bp.blogspot.com/-IrS608GU4Tk/VXNPLkW2bqI/AAAAAAAAAK4/jmVRfdVuo8Q/s640/11393084_712949268815713_8899477382515859043_n.jpg" width="480" /></a></div>
<br />
<br />
தர்மபுரியில் இருந்து சுமார் 20 மைல் தொலைவில் அமர்ந்திருந்தது மூங்கில் காடுகள் . மனுஷ் பியுஷ் அவர்களால் கடந்த 15 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட கானகம் அது . சீரற்ற பாதையில் எங்கள் வாகனம் நுழைந்தவுடன் , இளங்காற்று வந்து எங்களை தழுவி கொண்டது .<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-VPHWrLaVbXA/VXNPYOrEs5I/AAAAAAAAALA/Y98LtqkcRY8/s1600/10406349_712948948815745_1740910600356948797_n%2B%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="http://1.bp.blogspot.com/-VPHWrLaVbXA/VXNPYOrEs5I/AAAAAAAAALA/Y98LtqkcRY8/s640/10406349_712948948815745_1740910600356948797_n%2B%25281%2529.jpg" width="480" /></a></div>
காலை துயில் எழுந்தவுடன் எங்கள் முன்னே விரிந்த காட்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை .பல் துலக்க எடுத்த வேப்பங்குச்சியின் அளவு குறைய குறைய நடந்து எங்கள் குடிலை அடைந்து விட்டோம்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-oAQRUrbHX74/VXNPneDbY9I/AAAAAAAAALI/HKWR0CvEXyo/s1600/11295585_712948202149153_189849046064542769_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="http://3.bp.blogspot.com/-oAQRUrbHX74/VXNPneDbY9I/AAAAAAAAALI/HKWR0CvEXyo/s640/11295585_712948202149153_189849046064542769_n.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<br />
முதல் வேலையாக வாய்க்காலில் தம்பிகளுடன் குளித்து விட்டு திணை பொங்கலை ருசித்தேன் . கிட்டத்தட்ட 80 சிறார்களுடன் தன்னார்வலர்கள் முப்பது பேரும் இருந்தனர் . காலையில் திரு.கண்ணன் அவர்கள் தலைமை பண்புகள் குறித்து திருக்குறள் சொல்லும் கருத்துகளை அழகாக எடுத்துரைத்தார் . ஒரு தலைவனிடம் இருக்க வேண்டிய தலைமை பண்புகள் பற்றி திருக்குறள் சொல்லும் நெறிகளை எளிமையாக விளக்கினார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-qV01UMUTpqY/VXNPyaHOYlI/AAAAAAAAALQ/_4m_hDhsZxs/s1600/11401149_712949122149061_4620889297634088120_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="http://1.bp.blogspot.com/-qV01UMUTpqY/VXNPyaHOYlI/AAAAAAAAALQ/_4m_hDhsZxs/s640/11401149_712949122149061_4620889297634088120_n.jpg" width="480" /></a></div>
<br />
அங்கு வந்த பியுஷ் இடம் சிறார்கள் மீண்டும் குளிக்க வேண்டும் என கேட்க அவரும் அனுமதியளித்து விட்டார் . நீச்சல் தெரியும் என பொய் சொல்லி சற்று ஆழமான குட்டைக்கு தம்பிகள் செல்ல முயல , அவர்களை சமாளிப்பதே எங்களுக்கு வேலையாக போய்விட்டது<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-koHnKP4uBqM/VXNQBIEMFrI/AAAAAAAAALY/3MXUFSPK1SA/s1600/20150531_075131.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="http://1.bp.blogspot.com/-koHnKP4uBqM/VXNQBIEMFrI/AAAAAAAAALY/3MXUFSPK1SA/s640/20150531_075131.jpg" width="640" /></a></div>
<br />
<br />
குழந்தைகள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் என்ற எங்களது எண்ணம் பொய்த்துவிட்டது . நான்கு சுவர்களை தாண்டிய வெளியில் அவர்கள் புள்ளினங்களாக மாறி போனார்கள் . அவர்களுடன் சேர்ந்து ஓடலாம் என பார்த்தால் தொப்பை தடுக்கவே செய்தது<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-APD-By0xSnA/VXNQPG0_qoI/AAAAAAAAALg/tf4db62NsYo/s1600/Img1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="http://3.bp.blogspot.com/-APD-By0xSnA/VXNQPG0_qoI/AAAAAAAAALg/tf4db62NsYo/s640/Img1.jpg" width="640" /></a></div>
<br />
<br />
மதியம் சாப்பிட்ட சிறுதானிய புளி சாதம் மற்றும் தயிர் சாதத்தை இப்பொழுது நினைத்தாலும் நாவு ஊற ஆரம்பிக்கிறது. மாலை வேளையில் பியுஷ், தான் புதிதாக ஆரபிக்க போகும் ஐயப்ப வனம் திட்டம் பற்றி சொல்ல ஆரம்பித்தார். அவர் விவரித்த விதம் எங்களது கண்முன்னே ஐயப்ப வனத்தை கொண்டுவந்து நிறுத்தியது<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-mpvwUhxZQiQ/VXNQYGhJp3I/AAAAAAAAALo/9ZclhbQm3ZM/s1600/Img4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="http://1.bp.blogspot.com/-mpvwUhxZQiQ/VXNQYGhJp3I/AAAAAAAAALo/9ZclhbQm3ZM/s640/Img4.jpg" width="640" /></a></div>
<br />
முதல் நாள் இவ்வாறாக களித்து கழித்தோம் . விருந்தினராக வந்திருந்த திரு . கொளத்தூர் மணி அவர்களுடன் தோழர்கள் இரவு உரையாட செல்ல , அசதி காரணமாக நான் தம்பிகளுடன் குடிலில் உறங்கி போனேன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-olLYoLDc6bU/VXNQoKXNFTI/AAAAAAAAALw/_3AqGGLdMZk/s1600/11401149_712949122149061_4620889297634088120_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/-olLYoLDc6bU/VXNQoKXNFTI/AAAAAAAAALw/_3AqGGLdMZk/s640/11401149_712949122149061_4620889297634088120_n.jpg" width="480" /></a></div>
<br />
<br />
அடுத்த நாள் தீபக் உள்பட மேலும் சில நண்பர்கள் வந்து எங்களுடன் கலந்து கொண்டனர், காலை பொழுதில் மரம் நடுவதற்கு சென்றோம் . மனுஷ பியுஷ் அவர்கள் யோசனை படி மேடான பகுதியில் மூங்கில் மரங்களை நட்டால் அவை நன்றாக செழித்து வளர்ந்து ஒன்றோடொன்று பின்னி செழிப்பாக வளரும் என்பதால் அவ்வாறே நட்டோம் .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-WHiWb07O9vQ/VXNQ2KABMoI/AAAAAAAAAL4/qQrl4x6M9qs/s1600/11407049_712953188815321_3460762164113489450_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="http://2.bp.blogspot.com/-WHiWb07O9vQ/VXNQ2KABMoI/AAAAAAAAAL4/qQrl4x6M9qs/s640/11407049_712953188815321_3460762164113489450_n.jpg" width="640" /></a></div>
<br />
முந்தைய நாள் வெல்லம் குறைவாக சேர்த்ததால் தம்பிகளுக்கு ஆவாரம் பூ தேனீர் பிடிக்காமல் போக , அன்று அதிகமாக சேர்த்து அருமையாக தயாரித்திருந்தனர் .<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-WivpBDw4Nt8/VXNRC4K2p9I/AAAAAAAAAMA/cXw-r85Wfbc/s1600/Img2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="http://4.bp.blogspot.com/-WivpBDw4Nt8/VXNRC4K2p9I/AAAAAAAAAMA/cXw-r85Wfbc/s640/Img2.jpg" width="640" /></a></div>
<br />
<br />
காலை உணவான சத்துமாவு கஞ்சியையும் பலா பழத்தையும் உண்டுவிட்டு அன்றைய தின நிகழ்வுகளுக்கு தயாரானோம் . இந்த கானகம் அமைக்கப்பட்ட விதம் மற்றும் இயற்கை சார்ந்த சுய வாழ்வியல் பற்றி பியுஷ் பேசினார் . அவரது பேச்சு மற்றும் அனுபவங்கள் தம்பிகளுக்கு மிகவும் பிடித்திருந்தது . இயற்கை சார்ந்த தொழில்கள் பற்றிய அவரது பேச்சு எங்களுக்கும் பல கேள்விகளை எழுப்பியது . மூங்கிலினால் செய்யப்பட்ட கட்டில்கள் மற்றும் நாற்காலிகள் , பாக்கு மட்டையால் செய்யப்பட்ட கதவுகள் என இயற்க்கை சார்ந்த 30க்கும் மேற்பட்ட தொழில்கள் இருப்பதாக சொல்லி எங்களை பிரமிக்க வைத்தார்<br />
<br />
<br />
பிறகு மனுஷ பியுஷ் , தன்னார்வலர்களுடன் சேர்ந்து சுத்தம் செய்த மூக்கனேரி, அம்மாபேட்டை எரி மற்றும் இஸ்மாயில் கான் எரி போன்றவற்றை சுத்தப்படுத்திய விதம் பற்றி பேச ஆரம்பித்தார்<br />
<br />
குப்பைகூளங்கள் நிறைந்து மிக மோசமாக இருந்த மூக்கனேரியை தூய்மைபடுத்தி இன்று சேலத்தின் ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றியமைத்த நிகழ்வை கேட்ட பொழுது மலைத்து போய் நின்று விட்டோம்<br />
<br />
ஏரியை தூய்மைப்படுத்தி மணல் திண்டல்கள் அமைத்து அதில் மரங்களை நட்டு சிறு தீவுகளாக மாற்றி பறவைகள் சரணாலயமாகவும் மக்கள் கூடும் பூங்காவாகவும் மாற்றியிருந்த அமைப்பை புகைப்படங்கள் மூலம் விவரித்ததை எண்ணியபோது எங்கள் கண்களுக்கு பியுஷ் உயர்ந்து கொண்டே சென்றார்<br />
<br />
பிறகு Brick roof மூலம் உருவாக்கப்படும் பசுமை வீடுகள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது . வெளிநாட்டில் இருந்து வந்திருந்த நண்பர் ராம் எங்களுக்காக ஒரு சிறு வீட்டை கட்டி காண்பித்தார் . மேலும் இளந்தளிர் அமைப்பை சேர்ந்த நண்பர் பாலா , அடுத்த நாள் (ஞாயிற்று கிழமை ) இலக்கியம்பட்டி ஏரியை சுத்தம் செய்யும் பணிக்காக எங்களை அழைக்க வந்திருந்தார்<br />
<br />
பிறகு தன்னார்வலர்களை அழைத்து கொண்டு பியுஷ் டிரக்கிங் செல்ல நாங்கள் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தோம் . அதிலும் நாயும் எலும்புத்துண்டும் கேம் மிக அருமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது<br />
<br />
இரவு தம்பி தங்கைகள் தாங்கள் இரு தினங்களில் கற்று கொண்ட செய்திகளை பகிர்ந்து கொண்ட பொழுதுதான் தெரிந்தது . அவர்கள் விளையாடி கொண்டும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும் இருந்தாலும் எல்லாவற்றையும் நன்கு கவனித்து உள்வாங்கி இருக்கிறார்கள் என்பது . இதை அறிந்தவுடன் எங்களைவிட பியுஷ் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்<br />
<br />
<br />
இரவு இட்லி மற்றும் பணியாரத்தை ருசித்துவிட்டு கண் அயர்ந்தோம் . அடுத்தநாள் சிறுவர்கள் சிலரும் நமது தன்னார்வலர்கள் சிலரும் இலக்கியம்பட்டி ஏரியை சுத்தம் செய்ய கிளம்பினார்கள் . ஒருவாறாக முடித்துவிட்டு குழந்தைகளை எல்லாம் புறப்பட வைக்க மணி 12 ஆகிவிட்டது . பிறகு பியுஷ் இடம் சில நேரம் பேசிவிட்டு விடைபெற்று அங்கிருந்து கிளம்பினோம்<br />
<br />
<br />
பி கு :<br />
<br />
விடுபட்ட சில துணுக்குகள்<br />
<br />
மனுஷ் பியுஷ் தன் கையால் ராகி தோசை சுட்டு எங்களுக்கு பரிமாறி அசத்தினார் மேலும் தன் குழந்தைகளை அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்தார்<br />
<br />
மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினராக இருக்கும் நண்பர் ஒருவர் வந்து சிறிது நேரம் பேசினார்<br />
<br />
வீடு கட்ட செம்மண் மிதித்து பின் அதை உடலில் பூசி ,குளித்து சிறுவர்கள் ஆனந்தம் கண்டனர்<br />
<br />
அணைத்து உணவு பொருட்களும் மிக சிறப்பாக இருந்தது . அதிலும் இரு தினங்களும் பலா பழத்தை இரு அண்ணன்கள் எங்களுக்கு உரித்து கொடுத்து கொண்டே இருந்தனர்<br />
<br />
வரையறை செய்யப்படாத நிகழ்வுகள் , குழந்தைகளுக்கு பிடிக்காத உணவுகள் , சிறுவர்கள் விளையாட தேவையான வசதி இன்மை என சில இடர்பாடுகளை தாண்டி அனைவரும் மகிழ்ச்சியாக இரண்டரை தினங்கள் களித்தோம்<br />
<br />
எங்களில் ஒருவராக நெருங்கிய நண்பராக பியுஷ் இந்த இருதினங்களில் மாறி போனார்<br />
<br />
<br />
<br />
நிச்சயம் பலவேறு புதிய தகவல்களையும் இயற்கை சார்ந்த விழிப்புணர்வும் அனைவரும் பெற முடிந்தது நிச்சயம் வெற்றியே<br />
<br />
<br />
அலைபேசியின் அலைக்கற்றைகளுக்கு எட்டாத தொலைவில் மூன்று தினங்கள் இயந்திரத்தின் பிடியில் இருந்து விடுபட்டு சொர்க்கத்தில் வாழ்ந்துவிட்டு வந்தோம்<br />
<br />
<br />
<br />சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-47236551672207107812014-11-25T13:10:00.000+05:302014-11-25T13:10:02.212+05:30இது யாருடைய வகுப்பறைசில காலம் முன்பு ஆயிஷா .இரா.நடராசன் அவர்களின் <a data-source="user" href="http://anbarasusasi.blogspot.in/2013/12/blog-post_21.html" rel="nofollow">இது யாருடைய வகுப்பறை</a> புத்தகம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வுக்கு சென்றிருந்தேன். <br /><br />
அப்பொழுதே வாங்கியும் வந்து படிக்கவும் ஆரம்பித்து விட்டேன் ஆனால் அதை தொடர்ந்து படிக்க கூடிய சூழல் வரவில்லை.<br /><br /><span id="goog_768594203"></span><span id="goog_768594204"></span><br />
இப்பொழுதுதான் படித்து முடித்தேன். அதை பற்றிய பேச்சுதான் இது.<br /><br /><br /><span id="goog_768594199"></span><span id="goog_768594200"></span><br />
ஆசிரியரான ஆயிஷா.இரா .நடராசன் அவர்கள் கல்வி மற்றும் கற்றல்
குறித்து ஆய்வு செய்து எழுதிய ஏழு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே இந்நூல்<br /><br /><br /><br /><strong>1. ஆசிரியர்களே தேவைஇல்லை.... என்றார் ரூசோ ! </strong><br /><br /><br />
ரூசோவின் இந்த கருத்துடன் ஆரம்பிக்கும்
இந்தக்கட்டுரை மாணவப் பருவம் என்பதே தொழிற்புரட்சியின் கண்டுபிடிப்புதான்
என தொடர்கிறது.நம்முடைய பழமையான கல்வி முறைகளான குருகுலம் ,திண்ணைப்பள்ளி
மற்றும் மதராசா பற்றி விரிவாக விளக்குகிறது . நமது பாரம்பரிய கல்வி
முறைகளில் ஆசிரியர் -மாணவர் உறவு எப்படி இருந்தது என்பது பற்றியும்
அலசுகிறது. மேற்கத்திய கல்வி சித்தாந்தங்கள் நம்மிடம் பரவியது பற்றியும்
அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் அறிய முடிகிறது .<br /><br />
மத அடிப்படியிலான கல்வி முறையின் வரையறைகளையும் ,அது
உண்டாகிய விளைவுகளையும், கிரேக்க மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளின் கல்விமுறை
தோன்றிய வரலாற்றையும் அடுத்தடுத்த பக்கங்கள் நிறைவு செய்கின்றன. மதம்
சார்ந்த ஒரு கல்விமுறையில் மறுமலர்ச்சியை மார்டின் லூதர் கிங் மற்றும்
பிரான்சிஸ் பெக்கான் ஆகியோர் கொண்டு வந்திருக்கின்றனர் <br /><br /><strong>2.யாருடைய வகுப்பறை இது?</strong> <em><br /><br /><strong> </strong>" பன்னிரண்டு வயது வரை ஒரு குழந்தை இயற்கையிலும் தன் வாழ் சூழலிலும் தனித்து விடப்பட வேண்டும் என்பதுதான் ரூசோவின் கல்விமுறை " <br /></em>என
ஆரம்பிக்கிறது இரண்டாவது கட்டுரை. கல்விக்கும் பள்ளிக்கும் இடையிலான
வித்தியாசங்களை பேசுகிறது. கல்வியின் நோக்கம் என்ன என்பது குறித்தும் சில
கருத்துக்களை இந்த பக்கங்கள் முன் வைக்கின்றன <br /><br />
ஆங்கிலேயர் வருகையும் அதனால் நமது கல்வி முறையில்
ஏற்பட்ட மாற்றங்களையும் அறிய முடிகிறது. நமது இந்த கல்வி முறையை
கொடுத்தவர் என அறியப்படும் மெக்காலே வருகையும் அவரது மெக்காலே குறிப்புகள்
பற்றியும் மெக்காலேவின் கல்வி கொள்கைகள் எப்படி இருந்தன என்பது பற்றியும்
தெளிவாக விளக்குகிறார் இரா நடராசன்.<br /><br /><em>" இந்திய மொழிகள்
அனைத்தையும் தூக்கியெறியும் மெக்காலே அத்தகைய மொழிகளில் புத்தகம் என்று
ஒன்று அச்சாகுமானால் அது பைபிளாக இருக்கும் என பிடிவாதமாக இருந்தார் " </em><br /><br /><br />
நமது கல்விமுறை ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டாலும் இன்று நமக்கும்
இங்கிலாந்தின் கல்விமுறைக்கும் உள்ள வேறுபாட்டுக்கு காரணமாக இருப்பவர்
சார்லஸ் வுட் ஆவார்<br /><br /><em>. " நமக்கு தேவை சிந்திக்க தெரிந்த மேதைகள் அல்ல .நம் அறிவை தாண்டாமல் அடி பணிந்து உழைக்கும் சேவகர்கள் " <br /></em>என்ற 'உயரிய' நோக்கத்தோடு கல்வி சீர்திருத்தங்களை செய்தவர் வுட்.<br /><br /><br />
இந்த பரீட்சையை, கண்டுபிடிச்சது யாரு என நம்மை பலமுறை புலம்ப வைத்த
பெருமை பெற்ற ஹன்டர் கமிசனை பற்றி அறிய முடிந்தது . காந்தியடிகள் முன்வைத்த
'கல்விக்கான இந்திய வடிவம் ' எனும் கொள்கைகள் பற்றியும் அது
புறந்தள்ளப்பட்டது பற்றியும் அறிய முடிகிறது.<br /><br /><br />
கோத்தாரி கமிசன் வகுப்பறைகளை தரம் பிரித்தது பற்றி அறிந்து கொள்ள
முடிவதால் இந்த கமிசன் செயல்பாடுகள் ஏற்படுத்திய பின்னடைவுகள் எளிதாக
நம்மால் உணர முடிகிறது <br /><br /><br /><br /><strong>3.அறிவியல் தெரியும்...... ராமலிங்கத்தை தெரியுமா ? :<br /></strong>
இந்த பகுதி கல்வி உளவியல் பற்றி பேசுகிறது ?
மாணவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தகூடிய காரணிகள் பற்றி விரிவாக
அலசுகிறது . சிக்மன் பிராய்டு முதலிய உளவியல் வல்லுனர்களின் கல்வி சார்ந்த
உளவியல் கருதுகோள்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. குழந்தைப்பருவ
,பிள்ளைப்பருவ ,குமாரப்பருவதில் குழந்தைகள் சிந்தனைகள் மற்றும்
செயல்பாடுகளை உளவியல் ரீதியில் விளக்கியுள்ளார் ஆசிரியர் . மேலும்
வகுப்பறை மற்றும் அதன் சூழல் பற்றிய கருத்துக்கள் இங்கு முன்
வைக்கப்படுகின்றன<br /><br /><br /><strong>4.வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றிய போது.....<br /></strong>
நமது அரசியல் அமைப்பு சட்டத்தின்படி இந்தியாவில் கல்வி
என்பது சலுகை அல்ல உரிமை என இந்த பகுதி ஆரம்பிக்கிறது . கற்றல் மற்றும்
கற்றல் சார்ந்த செயல்பாடுகள் குறித்த செய்திகள் இங்கு நிறைகின்றன.
கற்றலின் இரு கோட்பாடுகளான தூண்டல் (stimulus) துலங்கல் (response) மற்றும்
அறிவுப் புலக் கோட்பாடு (Field theories) பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது .<br /><br />
நமது வகுப்பறையில் அடிப்படியாக விளங்கும்
விதிகளையும் அந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்ட விதம் பற்றியும் இங்கு
அறிகிறோம் அந்த விதிகளின் விளைவை இந்த கட்டுரையின் தலைப்பாக
வைத்துவிட்டார் போலும் <br /><br /><br /><strong>5.உள்ளேன் டீச்சர்<br /></strong>தனது
பிள்ளைகளின் கல்வி பற்றிய பெற்றோரின் அணுகுமறை எப்படி இருக்கிறது எனவும்
இன்றைய நவீனமயமாதல், குழந்தைகளை பெற்றோர் எப்படி பார்கின்றனர் எனவும்
பேசுகிறது இந்த கட்டுரை . <br /><br />
உலகளாவிய குழந்தைகள் உரிமை சட்டம் பற்றி தெரிந்து கொள்ள
முடிந்தது. அதே போல் நம் நாட்டில் உள்ள குழந்தைகளுக்கான கட்டாய இலவசக்
கல்விச் சட்டம் பற்றியும் அதன் தன்மைகள் பற்றியும் விரிவாக
எடுத்துரைத்திருக்கிறார் இரா .நடராசன் அவர்கள் . <br /><br /><br /><em>"நமது
கட்டாய இலவச கல்விச் சட்டம் ஒரு குழந்தைக்கு ஆறு வயது முதல் பதினான்கு வயது
வரை மட்டுமே பொருந்தும். இங்கு ஒருவர் 14 வயதிலேயே பெரியவர் ஆகிவிடுகிறார்
"</em> <br /><br />
தேசிய கலை திட்ட வடிவமைப்பு மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை பற்றியும் அடுத்தடுத்த பக்கங்கள் விளக்குகின்றன . <br /><br /><br />
நமது கல்வி சீரமைப்பில் முதல் முறையாக யஷ்பால் குழு
மட்டும்தான் கல்வியை குழந்தை பருவ அடிப்படைகளுக்கு ஏற்ற கல்வி என்ற
பார்வையில் அணுகி இருந்திருக்கிறது (கல்விக்காக குழந்தைகள் என்றில்லாமல்
குழந்தைகளுக்காக கல்வி என்ற ரீதியில் ) மேலும் இன்றைய செயல்வழி கற்றலை
நமக்கு இந்த யஷ்பால் கமிட்டிதான் வழங்கியுள்ளதாம் <br /><br /><br /><br /><br /><strong>6.அவங்க வகுப்பறை நம்ம வகுப்பறை : </strong><br /><br />
ஆசிரியரின் செயல்திறனை எப்படி அளப்பது என்ற
வினாவுடன் இப்பகுதி தொடங்குகிறது ஆசிரியர்களின் சிறப்பியல்புகள் பற்றியும்
விளக்கம் தரப்பட்டுள்ளது . ஒரு பள்ளியின் செயல்திறன் மற்றும் அதனை
தீர்மானிக்கும் காரணிகள் பற்றிய அறிஞர்களின் ஆய்வு முடிவுகளை தெரிந்து
கொள்ள முடிந்தது <br /><br />
அடுத்த பகுதி மிக விறுவிறுப்பானது . உலக நாடுகளின்
கல்வி முறை பற்றியது. அமெரிக்க கல்வி முறையில் இருந்த ஆரம்பிக்கும் இது
அதன் குறைபாடுகள் குறித்து பேசுகிறது (இதை படித்தவுடன் நம்ம ஊரு
பள்ளிக்கூடமே தேவலை போல இருந்தது ). உலகின் சிறந்த கல்விமுறை கொண்ட நாடு
என அழைக்கப்படும் பின்லாந்து கல்வி முறை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள
முடிந்தது .<br /><br />
பிறகு தொழில் மற்றும் சேவை சார்ந்த கல்வியை கொண்ட
கியூபா கல்வி முறை பற்றி அறிய முடிகிறது . ஆனால் கியூபாவிடம் இருந்து ஒரு
நல்ல விசயத்தை கற்க நம்முடைய மேன்மை பொருந்திய சமூகம் இடம் தராதே ! பிறகு
ஜப்பான் ,டென்மார்க் மற்றும் சிங்கப்பூரில் கல்வி முறை கண்ட மாற்றங்கள்
பற்றிய வரலாற்று நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.<br /><br /><em>சர்வதேச மாணவர் தர
ஆய்வு நிகழ்வில் பள்ளியின் செயல்திறன் சராசரி(Efficiency) கணக்கிடபடுகிறது.
இதில் பின்லாந்து 0.86 to 0.98 பெற்று முதலிடத்தில் உள்ளது தமிழகத்தின்
செயல்திறன் சராசரி 0.02 - 0.96 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது . சிறந்த
கல்விமுறை கொண்ட நாடுகளின் தரவரிசையில் நாம் 96 வது இடத்திலும் குழந்தைகள்
மகிழ்ச்சியாக உள்ள பள்ளி எனும் ஆய்வில் 116வது இடத்திலும் இருக்கிறோம்<br /><br /></em> <strong>7. வகுப்பறையின் சுவர்களைத் தகர்த்தெரிந்தவர்கள்......<br /></strong>இந்த
பகுதி நமது கல்வி முறை விவசாயத்தை சொல்லி கொடுக்கவில்லை என குற்றம்
சாட்டுகிறது. பள்ளிகளில் குழந்தைகளின் விதிமீறல்கள் ,அவற்றின் காரணங்கள்
மற்றும் அதற்கான அணுகுமுறை பற்றி இந்த பகுதி விளக்குகிறது நடத்தையியல்
சார்ந்த ஆட்லரின் பார்வை மற்றும் ஆன்னா பிராய்ட்டின் நடத்தை வேறுபாடுகள்
குறித்த சித்தாந்தங்களை அறிய முடிகிறது.<br /><br />
ஆசிரியர்- மாணவர் உறவுமுறை குறித்த உலக
கல்வியாளர்கள் பலரின் கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன . பிறகு ஒரு
ஆசிரியரின் பணிகள் மற்றும் கடமைகள் விவரிக்கப்பட்டுள்ளன <br /><br /><strong><br /><br /><br />
எனது பார்வை </strong>:<br /><br /><br />
என்னை பொருத்தமட்டில் எனது ஆசிரிய பெருமக்களை சந்திக்க
நேர்ந்தால் அவர்களுக்கு என்னால் கொடுக்க முடிந்த மிக பெரிய பரிசு புத்தகமாக
இதை கருதுகிறேன். (இதுவரை ஆசிரியப் பெருமக்களுக்கு என்ன நினைவு பரிசு
வழங்க வேண்டும் என்பது எனக்கு தெரியாமல் இருந்தது )<br /><br /><br /><br />
நம்முடைய இன்றைய செயல்வழிகற்றல் ஆரோக்கியமான மாற்றங்களை
செய்திருக்கிறது . இது கற்றல் செயல்பாட்டில் ஒரு விருப்பத்தையும்
ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது .இப்பொழுது இங்கு பாட திட்டங்களைவிட
வகுப்பறைகள்தான் மாற்றம் பெற வேண்டும் . வகுப்பறைகள் மாற்றம் பெற
வேண்டுமென்றால் கரும்பலகைக்கு பதில் டிஜிட்டல் பலகைகள் வரவேண்டும் என்பது
அர்த்தமல்ல . வகுப்பறை சூழல்தான் மாற்றம் அடைய வேண்டும் . இந்த நூலில்
வரும் ஜனநாயக வகுப்பறை மலர வேண்டும்.<br /><br /><br /><strong>இந்த நூலை நாம் ஏன் படிக்க வேண்டும் ? யார் யார் படிக்க வேண்டும் ? </strong><br />
நாம் இன்று படித்தவர்களாக இயங்கி கொண்டிருக்கிறோம் .
நாம் கற்ற கல்வி உருவான விதம் மற்றும் அது கண்ட மாற்றங்கள் பற்றி நாம்
அறிதல் அவசியம் . மேலும் உலக அரங்கில் உள்ள கல்விமுறைகள் பற்றியும் அறிந்து
கொள்ள முடியும் ..<br /><br /><strong>யாரெல்லாம் படிக்க வேண்டும்?</strong><br /><br />
குழந்தைகள் சார்ந்த சட்டங்கள் மற்றும் பல அறிய தகவல்களை
தெரிந்து கொள்ள மாணவர்கள் இதை படிக்க வேண்டும் . அது கொஞ்சம் கடினம்
(வாக்கிய மற்றும் வார்த்தை அமைப்புகள் கொஞ்சம் கடினம் என்பதால் மாணவர்கள்
படிப்பது கடினம் ) <br /><br />
ஒரு பெற்றோராக குழந்தையின் படிப்பை எப்படி அணுக வேண்டும்
என்பது பற்றி தெரிந்து கொள்ள பெற்றோர்கள் நிச்சயம் படிக்க வேண்டும். ஒரு
குழந்தையின் குடும்ப மன நிலை அதன் கற்றல் செயல்பாடுகளில் தாக்கங்கள்
ஏற்படுத்துவதால் பெற்றோர்கள் நிச்சயம் படிக்க வேண்டும் <br /><br />
இன்றைய சூழலில் ஒரு ஆசிரியரின் Role பல்வேறு நிலைகளை
கொண்டுள்ளதால் ஆசிரியர்களும் படிக்க வேண்டும். ஆசிரியர் -மாணவர்
உறவுமுறைகள் குறித்து பல தகவல்கள் நிச்சயம் அவர்களுக்கு பயன்தரும் <br /><br />
சாதாரண குடிமக்களாக நாமும் நம்முடைய கல்வி முறை பற்றி தெரிந்து கொள்ள
வேண்டும் தானே அதனால் நாம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் <br /><br /><br /><br /><br /><br />
பி.கு : அனைவரும் படித்து பாருங்கள்சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-57004414694504214112014-10-19T13:54:00.001+05:302014-10-19T14:20:34.530+05:30ஓர் வரலாற்று சுற்றுப்பயணம்அண்மையில் நான் சில நண்பர்களுடன் சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இடங்களுக்கு சென்றிருந்தேன். ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது
ஆண்டுவிழா மற்றும் பொன்னியின் செல்வன் அறுபதாவது ஆண்டு நிறைவு விழாவை
முன்னிட்டு பொன்னியின் செல்வன் கதையில் வரும் சில இடங்கள், சோழபுரம்
மற்றும் தாராசுரம் போன்ற இடங்கள் எங்களது பயண பட்டியலில் இருந்தன <br />
<br />
<br />
முதலில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றோம் . அதன் வரலாற்று சிறப்பு
மற்றும் பெருமைகளை என் நண்பர் மண்ணின் மைந்தர் நரசிம்மன் அழகாக விவரித்தார்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-oNDicVJK-q4/VENxJaO0ZJI/AAAAAAAAAFc/ShxLWOtmcF8/s1600/be7f4e307242982d22239f261e2a2f1e844ef33b.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-oNDicVJK-q4/VENxJaO0ZJI/AAAAAAAAAFc/ShxLWOtmcF8/s1600/be7f4e307242982d22239f261e2a2f1e844ef33b.JPG" height="480" width="640" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
அங்கு முடித்துவிட்டு வந்தியதேவன் அறிமுகமாகும் வீர நாராயணபுரம் ஏரிக்கு (தற்போது வீராணம் ஏரி) சென்றோம் .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-RKO4gL6sL5Q/VENxW3iqEQI/AAAAAAAAAFk/krV5a-sen-k/s1600/713fa7ae70f2a57a4a825d7778cbaf218fd9e11f.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-RKO4gL6sL5Q/VENxW3iqEQI/AAAAAAAAAFk/krV5a-sen-k/s1600/713fa7ae70f2a57a4a825d7778cbaf218fd9e11f.JPG" height="480" width="640" /></a></div>
குறுகியும் அகன்றும் கிட்டத்தட்ட 12 காத தூரத்துக்கு செல்லும் அதன் அழகிய
வனப்பில் மிதந்து கொண்டே சென்றது கண்ணுக்கு விருந்தாக அமைந்தது <br />
<br />
<br />
பிறகு காட்டுமன்னார் கோவிலில் காலை உணவை முடித்துவிட்டு அங்குள்ள
புகழ்மிக்க அனத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றோம். மிக பழமையான அந்த கோவிலில்
பல சிற்பங்களை பார்த்தோம்<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-1uOsmys0_wA/VENxhSJ1NPI/AAAAAAAAAFs/4UxuEW2CUqo/s1600/6b5c19bc98c6127771cbb82befad1733d98c78b1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-1uOsmys0_wA/VENxhSJ1NPI/AAAAAAAAAFs/4UxuEW2CUqo/s1600/6b5c19bc98c6127771cbb82befad1733d98c78b1.JPG" height="480" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-ThNVlZORjpc/VENxm3QHnwI/AAAAAAAAAF0/gSPntca0RqA/s1600/e6c8a4d3158494560f78d58de03bb5166387078e.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-ThNVlZORjpc/VENxm3QHnwI/AAAAAAAAAF0/gSPntca0RqA/s1600/e6c8a4d3158494560f78d58de03bb5166387078e.JPG" height="480" width="640" /></a></div>
<br />
அதன் பிறகு மேல கடம்பூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்றோம்.
ஆதித்த கரிகாலன் பாண்டிய ஆபத்துதவிகளால் கொல்லப்பட்டதற்கான கல்வெட்டுகள்
அந்த கோவிலில் உள்ளன. <br />
<br />
அங்கிருந்த கல்வெட்டில் அந்த வார்த்தைகளை வெகு நேரம் தேடினோம்.
கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களை படிக்க ரொம்ப சிரமமாக இருந்தது .
கடைசியில் நண்பர் ஒருவர் உதவியால் அந்த வார்த்தைகளை கண்டுபிடித்தோம்.அங்கு
ஒரு வந்திருந்த ஒரு பெரியவர் பாடல் பெற்ற தலங்களை தரிசித்த தன் அனுபவத்தை
பகிர்ந்து கொண்டார் <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-YECK3Qv7THw/VENyBGWL64I/AAAAAAAAAF8/b8m4TbEW52s/s1600/030560466891427c8d324a3194146290097e4d4f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-YECK3Qv7THw/VENyBGWL64I/AAAAAAAAAF8/b8m4TbEW52s/s1600/030560466891427c8d324a3194146290097e4d4f.jpg" height="356" width="640" /></a></div>
<br />
ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதற்கான கல்வெட்டு <br />
<br />
<br />
( இடம் : காட்டுமன்னார் கோவில் ) <br />
அகிலனின் வேங்கையின் மைந்தன் படித்ததில் இருந்தே நான் பார்க்க வேண்டும் என ஆவல்கொண்ட இடம் கங்கை கொண்ட சோழபுரம்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-lfolDKyoRjA/VENySoZ-VQI/AAAAAAAAAGE/CDolphIMjkU/s1600/592cea55e8f3856d61d95055be7c216a5a27d312.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-lfolDKyoRjA/VENySoZ-VQI/AAAAAAAAAGE/CDolphIMjkU/s1600/592cea55e8f3856d61d95055be7c216a5a27d312.JPG" height="480" width="640" /></a></div>
<br />
அங்கு சென்று இறங்கி ஆலயத்தினுள் நுழைந்தவுடன் ஒரு மிக பெரிய பிரம்மாண்டம்
ஏற்பட்டது. அந்த நந்தியின் உயரத்திலேயே நான் இறங்கி போனேன். அங்கு எங்கள்
நண்பர் ஒருவர் ஆலயத்தை பற்றி சொல்ல சொல்ல நான் என்னை மறக்க ஆரம்பித்தேன்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-BY9dSQH7Mx4/VENynM9cx5I/AAAAAAAAAGM/6cdhMIlBq5A/s1600/f479c67b1d2415d324b2249fb867938933bb9e45.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-BY9dSQH7Mx4/VENynM9cx5I/AAAAAAAAAGM/6cdhMIlBq5A/s1600/f479c67b1d2415d324b2249fb867938933bb9e45.JPG" height="640" width="480" /></a></div>
<br />
ஆகம விதிப்படி இல்லாமல் வானியல் விதிப்படி உருவாக்கப்பட்ட நவக்கிரக
சிலையினில் உள்ள விஞ்ஞானம் பிரமிக்க வைத்தது . அங்கிருந்த ஒவ்வொரு
சிலைகளிலும் இருந்த அழகையும் ,விஞ்ஞானத்தையும் ,சிற்ப கலை நுட்பத்தையும்
அறியும் பொது வியக்காமல் இருக்க முடியவில்லை .<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/--amawlhHPQc/VENy4RMS7sI/AAAAAAAAAGU/4AwfsfY_KVU/s1600/6706bdc9b915cde84121d73786873848f24f60e7.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/--amawlhHPQc/VENy4RMS7sI/AAAAAAAAAGU/4AwfsfY_KVU/s1600/6706bdc9b915cde84121d73786873848f24f60e7.JPG" height="400" width="300" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
தமிழர்களின் பொறியியல் மற்றும் நுட்பத்திறன் முறையாக ஏன் இந்த தலைமுறைக்கு
கொண்டு வரப்பட வில்லை என நாங்கள் செய்த சிறு விவாதம் மிக ஆரோக்கியமாக பல
அரிய செய்திகளை அறியும் வகையில் இருந்தது<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-h4Sj9X82aqk/VENzNxjObVI/AAAAAAAAAGc/mcB9LjzSyEo/s1600/6a6aa847746e3a5bfbc28ce2ce02ffc8e7c21629.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-h4Sj9X82aqk/VENzNxjObVI/AAAAAAAAAGc/mcB9LjzSyEo/s1600/6a6aa847746e3a5bfbc28ce2ce02ffc8e7c21629.JPG" height="480" width="640" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
முகலாய ,ஆங்கிலேய படையெடுப்புகளால் சிதிலமடைந்த பகுதிகளை பார்த்த போது மனதில் ஒரு கணம் ஏற்பட்டது<br />
<br />
தஞ்சை பெரிய கோவிலை பிரம்மாண்டம் என்றும் கங்கை கொண்ட சோழபுரத்தை நளினம் என்றும் கூறுவார்கள் என நண்பர் விளக்கி கொண்டிருந்தார்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-vES6Rdql2aU/VEN0HO66irI/AAAAAAAAAGo/UvGwnKdLl0E/s1600/25870361c9f810c94777001937be91b19f6ae891.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-vES6Rdql2aU/VEN0HO66irI/AAAAAAAAAGo/UvGwnKdLl0E/s1600/25870361c9f810c94777001937be91b19f6ae891.jpg" height="356" width="640" /></a></div>
<br />
<i><b>ஒரு பக்கம் யானையும் ஒரு பக்கம் காலையும் கொண்ட வினோத சிலை </b></i><br />
<br />
<br />
<br />
கோவிலின் கட்டிட அமைப்பு பற்றி சொன்ன அவர் ஐங்கோண அமைப்பில் அடிப்பாகம்
ஆரம்பித்து வட்டமாக முடியும் எனவும் அதன் குறுக்கு வெட்டு தோற்றங்களின்
மாதிரிகளையும் காண்பித்தார் <br />
ஒரு வழியாக பிரியாத விடை பெற்று அங்கிருந்து மாளிகைமேடு கிளம்பினோம் <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-fCevLcJw1J0/VEN0fWIaBaI/AAAAAAAAAGw/9zRn8iSaiQI/s1600/3c588eaf0d8714059c13fc14b4b8dc48e28aa4e0.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-fCevLcJw1J0/VEN0fWIaBaI/AAAAAAAAAGw/9zRn8iSaiQI/s1600/3c588eaf0d8714059c13fc14b4b8dc48e28aa4e0.JPG" height="480" width="640" /></a></div>
<br />
<br />
தற்கால அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட சோழர்களின் மாளிகை இருந்த இடம் என
சொல்லப்படும் மாளிகைமேடு எங்களுடன் வந்திருந்த பெரியவர்களை ஈர்க்கவில்லை.
எங்கள் மக்களிடமும் அதை சேதப்படுத்த வேண்டாம் என கூறிவிட்டுத்தான் அழைத்து
சென்றோம் <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-uV_Si3MiHK4/VEN0xpB9GRI/AAAAAAAAAG4/NZatHuqZyzk/s1600/05e60f9d44f0dc7974057e1e69f5035b536128e3.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-uV_Si3MiHK4/VEN0xpB9GRI/AAAAAAAAAG4/NZatHuqZyzk/s1600/05e60f9d44f0dc7974057e1e69f5035b536128e3.JPG" height="480" width="640" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
அந்த காலகட்டத்தில் இருந்த செங்கற்கள் முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தில்
சற்று இறுக்கமாக இருந்திருக்கும் என ஒரு அவதானிப்பு அங்கு ஏற்பட்டது<br />
<br />
சில ஆண்டுகளுக்கு முன்பு கூகிள் தேடலில் UNESCO வேர்ல்ட் ஹேரிடேஜ் பார்த்து
கொண்டிருந்த போது தமிழ் நாட்டின் தாராசுரம் என்ற இடம் இருந்தது. பின் அதை
பற்றி அறிந்த போது ஒரு தமிழனாக அதை அறியாமல் கூட இருந்திருப்பது கண்டு நான்
வெட்கப்பட்டேன் <br />
<br />
எப்படியாவது தாராசுரம் போய் பார்க்கவேண்டும் என்ற ஆவல் அப்போதே துளிர்விட்டு விட்டது<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-LgOjter3knk/VEN1Yj_nQ5I/AAAAAAAAAHA/Goo22AOo79Y/s1600/48080d60666f28faccae7fac0cc652904989823a.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-LgOjter3knk/VEN1Yj_nQ5I/AAAAAAAAAHA/Goo22AOo79Y/s1600/48080d60666f28faccae7fac0cc652904989823a.JPG" height="480" width="640" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
தாராசுரத்தை அடையும் போது நேரம் மாலை 4 மணியாகி விட்டிருந்தது. வானத்தில்
மேக மூட்டங்கள் பல்வேறு ஓவியங்களை உருவாக்கியும் கலைத்தும் விளையாடி
கொண்டிருந்தன<br />
<br />
தூரத்தில் இருந்து பார்த்த போதே ரம்மியமான புல்வெளியின் மத்தியில் கோவில்
அழகாக தெரிந்தது. அங்கு நாங்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த வழிகாட்டி
எங்களை அழைத்து கொண்டு போனார்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-Stvf_emU7uA/VEN1xc6yqDI/AAAAAAAAAHo/JT7g47ltUQA/s1600/90874b5126cdf895932f0e2c87b2ce6511635567.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-Stvf_emU7uA/VEN1xc6yqDI/AAAAAAAAAHo/JT7g47ltUQA/s1600/90874b5126cdf895932f0e2c87b2ce6511635567.jpg" height="640" width="356" /></a></div>
<br />
<br />
<br />
<br />
முதலில் இங்கு காணப்படும் சிலைகள் கலிங்க நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு கற்களால் கட்டப்பட்டவை என்று ஆரம்பித்தார்<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-29NAqSPqevc/VEN1ijRiSMI/AAAAAAAAAHQ/Y7w2PhtDRtw/s1600/9d919bdf098dd2461c34e531c1b4501301ed93ca.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-29NAqSPqevc/VEN1ijRiSMI/AAAAAAAAAHQ/Y7w2PhtDRtw/s1600/9d919bdf098dd2461c34e531c1b4501301ed93ca.jpg" height="356" width="640" /></a></div>
<i><b>ஆட்டுகிடா சண்டை </b></i><br />
<br />
கண்ணப்ப நாயனார் உள்ளிட்ட பல்வேறு அடியவர்களின் வாழ்க்கை வரலாறு சுவற்றில் சிற்பங்களாக தீட்டப்பட்டிருந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-yCduSa4ZP08/VEN2vJ5JYDI/AAAAAAAAAHw/bArzyi44X98/s1600/8f3162f2508354b00a040160727bca0eaf249fd1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-yCduSa4ZP08/VEN2vJ5JYDI/AAAAAAAAAHw/bArzyi44X98/s1600/8f3162f2508354b00a040160727bca0eaf249fd1.jpg" height="356" width="640" /></a></div>
<br />
<i><b>ஒரு பெண் ஆணை அடிப்பது போன்ற சிற்பம்</b></i><br />
<br />
<br />
ஒவ்வொரு சிற்பத்துக்குமான கதையை அவர் அழகாக கூறி கொண்டே வந்தார். கடவுளுடன்
மக்களின் வாழ்வியல் ,இதிகாசங்கள் என பலவற்றை ஓவியங்களாக அழகாக
செய்திருந்தனர் <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-QtaF6Tk4ue4/VEN1kdoCmzI/AAAAAAAAAHY/IYLm7rF7oNU/s1600/3bf818dab30e7b38ad595753d2113cb3d16969bc.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-QtaF6Tk4ue4/VEN1kdoCmzI/AAAAAAAAAHY/IYLm7rF7oNU/s1600/3bf818dab30e7b38ad595753d2113cb3d16969bc.JPG" height="640" width="480" /></a></div>
<br />
முழுமையாக பார்ப்பதற்குள் வருண பகவான் தலையிட்டார் .எனவே பாதியில் முடித்து
விட்டு கோவிலினுள் சென்றோம். அங்கு நாங்கள் கண்ட காட்சி எங்களை வியப்பின்
உச்சிக்கே கொண்டு சென்றது <i><b></b></i><br />
<i><b><br /></b></i>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-2nQUpU121zE/VEN1tPYsglI/AAAAAAAAAHg/QuumcrgObwI/s1600/e37a94217012670255bef2b5ec0869547e49c1c5.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-2nQUpU121zE/VEN1tPYsglI/AAAAAAAAAHg/QuumcrgObwI/s1600/e37a94217012670255bef2b5ec0869547e49c1c5.JPG" height="480" width="640" /></a></div>
<br />
<i><b></b></i><br />
<br />
<br />
<br />
எனது இரு விரல் நீல உயரத்தில் தூணில் செதிக்கி இருந்த சிற்பத்தில்
சிவபெருமான் பார்வதியுடன் காட்சி தந்தார் . சிவனின் தலையில் பாம்பை பார்க்க
முடிந்தது . ஒரு சாண் உயரம் கொண்ட சிவபெருமான் சிலையின் கால் விரல் நகத்தை
பார்க்க முடிந்தது . இவ்வாறு அணைத்து தூண்களிலும் எண்ணற்ற நுண்கலை
சிற்பங்கள் மெய் சிலிர்க்க வைத்தது. இன்று மிக நுண்ணிய ஊசி மற்றும்
நுண்ணோக்கிகள் கொண்டு செய்யப்படும் இந்த நுண்கலையை அன்று நம் முன்னோர்கள்
எப்படி செய்திருப்பார்கள் என்ற எண்ணம் வந்தது<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-SRZCZ3E_YFE/VEN3tmJGuUI/AAAAAAAAAH4/RbpvIyOAhf0/s1600/c0377a6e5a8489dc247c69f8855df88e390727e6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-SRZCZ3E_YFE/VEN3tmJGuUI/AAAAAAAAAH4/RbpvIyOAhf0/s1600/c0377a6e5a8489dc247c69f8855df88e390727e6.jpg" height="480" width="640" /></a></div>
<b>நடனம் </b><br />
<br />
அங்கு புகைப்படம் துக்க முடியவில்லை. ஒரு நாள் முழுக்க இருந்தால் நன்றாக
இருக்கும் என்ற எண்ணத்துக்கு திரும்ப ஒரு நாள் வரலாம் என பதில்
கூறிக்கொண்டே அங்கிருந்து விடைபெற்று பட்டீஸ்வரம் சென்றோம் <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-nO8geWK73wc/VEN3wGmKvbI/AAAAAAAAAIA/49vofxPVdh0/s1600/c74645c6553cbe142e9a01ed519683f64178dddf.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-nO8geWK73wc/VEN3wGmKvbI/AAAAAAAAAIA/49vofxPVdh0/s1600/c74645c6553cbe142e9a01ed519683f64178dddf.jpg" height="480" width="640" /></a></div>
<br />
<b>வாலிவதம் </b><br />
<br />
பட்டீஸ்வரம் துர்க்கை கோவிலில் சில நேரம் இருந்தோம். சில தோழிகள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டிருந்தனர் <br />
<br />
பின் அங்கிருந்து பஞ்சவன் மாதேவி கோவில் சென்றோம். ராஜேந்திரர் தன்
சிற்றன்னை பஞ்சவன் மாதேவிக்கு கட்டிய அந்த கோவில் கேட்பாரில்லாமல் மிக
சிதிலமடைந்து இருந்தது <br />
<br />
எங்கள் நண்பர் ராஜ் அதை பராமரிக்க முயற்சித்து வருகிறார். அங்கிருந்து
குடந்தை சென்று இரவு உணவை முடித்து விட்டு மக்கள் சென்னை திரும்ப நான்
மட்டும் அங்கிருந்து பஸ் பிடித்து எனது வீட்டுக்கு சென்றேன் . <br />
<br />
<br />
<br />
<br />
பி.கு :<br />
<br />
என்னது சசி கோவிலுக்கு போறானா ? என்று பலர் ஆச்சர்யத்தில் கேட்டவண்ணம் இருந்தனர் <br />
<br />
அவர்களுக்கு என் பதில் என்னை பொறுத்த மட்டில் இது வரலாற்று சுற்றுபயணம் . கடவுளை தேடும் விஞ்ஞானம் அல்ல கலையை தேடிய மெய்ஞானம்.<br />
<br />
வீட்டுக்கு சென்றவுடன் கோவில் பிரசாதம் கேட்டனர். நான் கோவிலின் உள்ளே
சென்று தரிசிக்கவே இல்லை என சொன்னவுடன் " நாய் வாலை நிமிர்த்த முடியுமா "
என்பது போல ஒரு முகபாவம் காண்பித்துவிட்டு சென்றுவிட்டனர் <br />
<br />
என்னை பொறுத்த மட்டில் கோவில் கடவுள் வாழும் இடம் என்பதை விட கலையும் நாகரிகமும் குடி கொண்ட இல்லம் .<br />
<br />
<br />
<br />சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-61372598086343060902014-10-19T13:22:00.000+05:302014-10-19T14:22:18.935+05:30இலக்கிய சந்திப்புஇராஜேந்திர சோழர் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டுவிழா மற்றும் பொன்னியின்
செல்வன் அரங்கேறிய அறுபதாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு
பகுதியாக Cholan Heritage Preservator & Historical research Foundation சார்பில் இலக்கிய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-0vttg_yvm7c/VENqnf09lrI/AAAAAAAAAE4/KVltBXE5hno/s1600/Img1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-0vttg_yvm7c/VENqnf09lrI/AAAAAAAAAE4/KVltBXE5hno/s1600/Img1.jpg" height="480" width="640" /></a></div>
<br />
<br />
<br />
<br />
நண்பர்கள் வர சிறிது நேரம் ஆனதால் அந்த இடைப்பட்ட நேரத்தில் மழலைகளாய் மாறி மணலில் எங்கள் கலைத்திறனை காண்பித்தோம்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-ASpwAeYUA4I/VENrLjYPU3I/AAAAAAAAAFA/1sq5D3Qcelg/s1600/Img2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-ASpwAeYUA4I/VENrLjYPU3I/AAAAAAAAAFA/1sq5D3Qcelg/s1600/Img2.jpg" height="480" width="640" /></a></div>
அணைத்து நண்பர்களும் வந்தவுடன் ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்தி கொண்டோம். கடைசியாக படித்த புத்தகங்கள் பற்றி சிறிது நேரம் பேசினோம் <br />
<br />
நண்பர் வெங்கட், திரு சாவி அவர்களின் வாஷிங்டனில் திருமணம் எனும் நாவலை
பற்றி பேசினார். அவருடைய பேச்சை கேட்டவுடன் அதை படிக்க வேண்டும் என்ற
எண்ணம் அனைவருக்கும் உருவாகி விட்டது<br />
<br />
<br />
<br />
நண்பர் <a data-source="user" href="https://knome.ultimatix.net/users/59128-harishreyas-neelakantan" rel="nofollow">ஹரி</a>
சில ஆங்கில நாவல்கள் பற்றி பேசினார். உளவியலின் தந்தை என போற்றப்படும்
சிக்மண்ட் பிரைடு எழுதிய Interpretation of Dreams என்ற புத்தகத்தை
விரைவில் படிக்கபோவதாக சொன்னார் <br />
<br />
பிறகு சந்திப்பின் முதல் தலைப்பான <br />
<br />
பொன்னியின் செல்வன் உங்கள் பார்வையில் <br />
<br />
பிரமாண்டம் <br />
பிரமாதம் <br />
பிரமிப்பு <br />
<br />
நண்பர்கள் பேச தொடங்கினோம். பொன்னியின் செல்வன் படித்து முடித்திருந்த
அனைவரும் பொன்னியின் செல்வன் பற்றிய தங்கள் பார்வையை முன்வைத்தனர் .
நண்பர்கள் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் பற்றியும் பிடிப்பதற்கான
காரணங்கள் பற்றியும் சொல்லியது மிக சிறப்பாக அமைந்தது<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-nmS1kVmUHGU/VENsCha6d1I/AAAAAAAAAFM/5whD4giMm_U/s1600/Img3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-nmS1kVmUHGU/VENsCha6d1I/AAAAAAAAAFM/5whD4giMm_U/s1600/Img3.jpg" height="480" width="640" /></a></div>
<br />
<br />
பயணங்களில் ஆர்வம் கொண்ட நண்பர் <a href="https://www.facebook.com/rajchetty24?fref=ts">ராஜ் பன்னீர்செல்வம்</a>
கல்கி ஒவ்வொரு இடங்களையும் வர்ணித்து நம் கண்முன் கொண்டு வந்து
நிறுத்தியதை பற்றி பேசினார் . பொன்னியின் செல்வன் குறித்து நண்பர்கள் பேசிய
விதம் அவர்கள் மனதில் எந்த அளவு ஒரு தாக்கத்தை கல்கி ஏற்படுத்தி
இருக்கிறார் என்பதை உணர முடிந்தது.இது அங்கு வந்திருந்த வாசிக்காத
நண்பர்களிடம் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.<br />
<br />
எழுத்து சித்தர் பாலகுமாரன் படைப்புகள் பற்றி ஒரு நண்பர் பேசியது சிறப்பாக அமைந்தது <br />
காற்று வாங்க கடற்கரைக்கு வந்திருந்த நண்பர் ரயென் மேக்ஸ்வின் எங்களது
பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு எங்களோடு கலந்து கொண்டார். தமிழர்களின்
கடலாதிக்கம் குறித்து அறிய வேண்டும் என்று புது தேடலையும் என்னுள்ளே
ஏற்படுத்திவிட்டார்.மேக்ஸ்வின் தொ.பரமசிவன் எழுத்துக்களை பற்றி அதிகம்
பேசினார் <br />
எங்களுக்கு இடைவேளை வேண்டும் என்பதை ஒரு காளை மாடு துரத்தி உணர்த்தியது.<br />
என்னுடன் வந்திருந்த நண்பர் நரசிம்மனும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார்<br />
<br />
இது ஒரு நல்ல தொடக்கமாக நிச்சயம் இருக்கும். பின்னால் பெரு விருட்சமாக வளர இருக்கும் இதற்கான விதை இனிதே போடப்பட்டுவிட்டதுசசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-68758279571674215192014-02-23T12:11:00.002+05:302014-02-23T12:11:44.354+05:30சென்னை புத்தக திருவிழா-2014தமிழகத்தின் மிக பெரிய புத்தக கண்காட்சியான சென்னை புத்தக திருவிழா நந்தனம்
YMCA மைதானத்தில் கடந்த 10.01.2014 வெள்ளிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
37 வது ஆண்டான இந்த ஆண்டு கிட்டத்தட்ட 700 அரங்குகள் அமைக்கப்பட்டு
இருந்தன.<br /><br />
நான் 11.01.2014 சனிக்கிழமையன்று சென்றிருந்தேன். வழக்கமாக புத்தகம்
வாங்க செல்லும்முன் ஒரு பெரிய பட்டியல் தயாரிப்பது வழக்கம்.ஆனால் இந்த
ஆண்டு அவ்வாறு எதுவும் செய்யாமல் வெற்று மனதுடன் சென்றிருந்தேன். உள்ளே
நுழைந்து புத்தகங்களை தேட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 4 மணிநேரம் சுற்றியும்
அணைத்து பதிப்பக(தமிழ் ) அரங்குகளுக்கும் செல்ல முடியவில்லை.கூட்டமும்
குறைவாகவே தென்பட்டதால் அதிகபட்சமான அரங்குகளை சுற்றி பார்த்தேன். <br /><br />
ஒவ்வொரு புத்தக விழாவிலும் எப்போதும் முதலிடம் பெரும் நூல் பொன்னியின்
செல்வன் மட்டுமே. கல்கியை தொடர்ந்து சாண்டில்யன் அதிக அரங்குகளில்
இடம்பெற்றிருந்தார். இதில் எனக்கு ஆச்சர்யம் என்னவெனில் இம்முறை
ஜெயகாந்தனின் புத்தகங்களை அதிகமாக காண முடியவில்லை. மாறாக பாலகுமாரன்
புத்தகங்களை ஏறக்குறைய எல்லா அரங்கிலும் பார்க்க முடிந்தது. <br /><br />
பூம்புகார் பதிப்பகம் கோவி.மணிசேகரன் நூல்களை நல்ல தரமான முறையில்
அச்சிட்டிருந்தார்கள். மேலும் எல்லா அரங்கிலும் பிடெல் காஸ்ட்ரோ
,சேகுவேர,லெனின் முதலானவர்களை பற்றிய புத்தகங்கள் அதிகம் தென்பட்டன.
வேளாண்மை சார்ந்த புத்தகங்களுக்கு தனி அரங்கே இருந்தது வரலாற்று
நாவல்களில் நா.பார்த்தசாரதி, கோவி.மணிசேகரன் ,சாண்டில்யன் போன்றோரின் நிறைய
அரிய புத்தகங்களை பார்க்க முடிந்தது. <br /><br /><br />
விழாவில் விகடன் மற்றும் காலச்சுவடு இரண்டும் அதிக முக்கியத்துவம்
பெற்றிருந்தன. காலச்சுவடு பதிப்பகம் அசோகமித்திரன் ,சுந்தர ராமசாமி
போன்றோரின் நாவல்களை அதிகம் வைத்திருந்தது. மேலும் திரு.அசோகமித்திரன்
அவர்களை சந்திக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தது . காலச்சுவடில்
அதிக நூல்கள் இடம்பெற்றிருந்தன. விகடன் பதிப்பகம் கிட்டத்தட்ட 4
அரங்குகளை வைத்திருந்தது .நிறைய புதிய மற்றும் அரிய படைப்புகள்
காணப்பட்டன.உதாரணமாக ராமகிருஷ்ணன் எழுதிய எனது இந்தியா மற்றும்
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு ஆகியவை. <br /><br />
கடைசியாக நூற்றாண்டு விழா கண்ட அல்லயன்ஸ் பதிப்பகம் சென்று விட்டு
திரும்பி விட்டேன் .அங்கு நான் பல மாதங்களாக தேடி கொண்டிருந்த துப்பறியும்
சாம்பு கிடைத்தது. <br /><br /><br />
சில முக்கிய அரங்குகள்:<br />
1.காலச்சுவடு <br />
2.பாரதி புத்தகாலயம் <br />
3. மணிமேகலை பிரசுரம் <br />
4.நர்மதா பிரசுரம் <br />
5. பூம்புகார் பதிப்பகம் <br />
6.அல்லயன்ஸ் <br />
7. தி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் <br />
8. விகடன் பதிப்பகம்<br />
9. குமுதம் பதிப்பகம் <br />
10. புலம் பதிப்பகம் <br />
11. தமிழ் செம்மொழி தமிழாய்வு நிறுவனம்<br />
12. தமிழ் இலக்கிய கழகம்<br />
13. பெரியார் புத்தக நிலையம் <br />
14. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் <br />
15. வானதி பதிப்பகம்<br />
16.கிழக்கு பதிப்பகம்<br />
17. கண்ணதாசன் பதிப்பகம் <br />
18.நக்கீரன் <br />
19.பனுவல்<br /><br />
மற்றும் பல<br /><br />
தொழில்நுட்ப புத்தகங்களுக்கு<br />
1.Chand and Chand Company <br />
2. Techno <br />
3. Prentice Hall of India<br />
4. British library council <br />
5. Cambridge university <br /><br /><br />
மற்றும் பல <br /><br />
ஏற்கனவே வாங்கிய படிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை அதிகம். எனவே இம்முறை குறைவாகவே வாங்கினேன்<br /><br /><br />
நான் வாங்கிய புத்தகங்களின் விபரம் <br /><br />
1.விலை ராணி மற்றும் இந்திரா குமாரி <br />
ஆசிரியர் : சாண்டில்யன் <br />
வகை :வரலாற்று நாவல்கள் <br />
பதிப்பகம் : வானதி <br /><br />
2. காஞ்சி கதிரவன் <br />
ஆசிரியர் : கோவி.மணிசேகரன் <br />
வகை : வரலாற்று நாவல் <br />
பதிப்பகம்: பூம்புகார்<br /><br />
3. அணையா பெரு விளக்கு சே குவேரா<br />
ஆசிரியர் : ஆதனூர் சோழன் <br />
வகை: சே குவேர வரலாறு <br />
பதிப்பகம் : நக்கீரன் <br /><br />
4. இன்னும் பிறக்காத தலைமுறைக்கு <br />
ஆசிரியர் :தியோடார் பாஸ்கரன் <br />
வகை : சுற்றுச்சூழியல் மற்றும் வன உயிரினங்கள் சார்ந்த கட்டுரைகள்<br />
பதிப்பகம் : உயிர்மை <br /><br />
5. கணிதத்தின் கதை<br />
ஆசிரியர்: ஆயிஷா. இரா. நடராசன் <br />
தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் <br />
வகை : கணிதம் தோன்றிய வரலாற்று பதிவு<br />
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் <br /><br />
6. பெரியார் கல்வி சிந்தனைகள் <br />
வகை : கல்வி குறித்த பெரியாரின் கருத்துக்களின் தொகுப்பு <br />
தொகுப்பு : மார்க்ஸ் <br /><br />
7. சேகுவேராவிம் கடிதங்கள்<br />
வகை : சேகுவேர எழுதிய கடிதங்களின் தொகுப்பு <br />
தொக்குப்பின் தமிழாக்கம் : உமர்<br />
பதிப்பகம் : புலம்<br /><br />
8. திமிங்கல வேட்டை <br />
ஆங்கில நாவலான இது உலகின் தலை சிறந்த பத்து நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது<br />
ஆசிரியர் : ஹெர்மன் மெல்விஸ் <br />
தமிழாக்கம் : மோகன ரூபன்<br />
பதிப்பகம் : புலம் <br /><br />
துப்பறியும் சாம்பு 1&2<br />
வகை : நகைச்சுவை நாவல் <br />
ஆசிரியர் : தேவன் <br />
பதிப்பகம் : அல்லயன்ஸ்<br /><br /><br />
அவ்வளவு தான்<br /><br />
மேலும் சினிமா மற்றும் நுண்ணுயிரியல் தொடர்பான சில புத்தகங்கள்
வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.திரு அசோக மித்திரன் ,தியோடார் பாஸ்கரன்
மற்றும் பல இளம் எழுத்தாளர்கள் கலந்து சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-22546940123565846132014-02-23T11:58:00.001+05:302014-02-23T11:58:35.675+05:30தமிழன் உலகின் முன்னோடி -பகுதி 2<div class="kdescription">
இந்த
உலகிற்கு தமிழர்கள் கற்று தந்த பல கலைகளுள் போர்க்கலையும் ஒன்று. ஈவு
இரக்கமின்றி உயிர்களை துன்புறுத்தும் கொலைக்களம் எப்படி கலையாகும் என
நீங்கள் நினைக்கலாம். அதைப்பற்றி விளக்குவதே இப்பதிவு <br /><br />
தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையினை அகம் புறம் என இருண்டு பிரிவுகளாக
பிரித்தனர் .இதில் வீரம் புறவாழ்க்கையில் வருகிறது. அன்றிலிருந்து இன்று
வரை போருக்கு காரணமாக விளங்குபவை மண்ணாசை,பெண்ணாசை , பொன்னாசை, இதைவிட
மோசமான அதிகார ஆசை இவை நான்குமே <br /><br />
தமிழர்களின் போர்முறை மிகவும் நேர்மையானது . எதிரி நாட்டின் மீது
படையெடுக்கும் மன்னன் ,போருக்கு முன் முறையாக பறைசாற்றி எதிரிக்கு
அறிவித்து ,அவன் தயாரானவுடன்தான் போரை தொடங்குவான். எதிரி அயர்ந்த
நேரத்தில் தாக்கி வீழ்த்தும் பழக்கம் நம் மக்களுக்கு கிடையாது. போர் என்பது
இரு படைவீரர்களுக்கும் இடையில் தான் நடக்கும். அப்பாவி மக்களுக்கு
தொந்தரவு தர கூடாதென போருக்கென்றே தனியாக பாலை நிலங்களை உருவாக்கி
வைத்திருந்தனர் . இன்று போர் என்றாலே அப்பாவி மக்கள் மீது மனித உரிமை
மீறல்களை நடத்துவது என சில அ"சிங்க" குணம் கொண்ட வீணர்கள்
நினைக்கிறார்கள்.காலையில் ஆரம்பிக்கும் போர் மாலையில்
முடித்துகொள்ளப்படும்.<br /><br />
தான் கைப்பற்றிய நாட்டை,நாட்டு மக்களை வெற்றி களிப்பில் சூறையாடி மகிழும்
பண்பாட்டை கொண்ட அயலார்க்கு அவர்களை தம் குடிமக்களாக கொள்ளும் நம் பழக்கம்
சற்று வியப்புதானே<br /><br /><br />
நால்வகை படைகளை தமிழ் மன்னர்கள் கொண்டிருந்தார்கள் என் வரலாறு விளம்புகிறது.தேர்ப்படை ,குதிரைப்படை,யானைப்படை,காலாட்படை இவையே. <br />
நம் போர்கள் நிகழும் முறையை இலக்கியங்கள் கூறுகின்றன.அவற்றை பார்ப்போம் <br /><br />
முதலில் எதிரி நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் மன்னன் தன் படையை ஏவி
எதிரி நாட்டு பசுக்களை கவர்ந்து வர வேண்டும் .அதற்க்கு கரந்தை என்று பெயர்
. அந்த பசுக்களை மீட்க அவற்றின் உரியவர் வருவார் அது வெட்சி எனப்படும் <br /><br />
போரை தொடங்கும் மன்னன் பகை நாட்டை எதிர்த்து நின்று தாக்குதலை வஞ்சி
என்றும் பகைவர் கோட்டையை முற்றுகை இடுவதும் முற்றுகை இடப்பட்ட மதிலை
காத்தலும் உழிஞை என்றும் அழைக்கப்படும் .இரு மன்னர்கள் களத்தில் இறங்கி
போர் புரிவது தும்பை என்றும் அதில் வெற்றி பெறுவது வாகை எனப்படும் <br /><br />
கடற்போரில் தமிழர்கள் சிறந்து விளங்கியதையும் ,அவர்கள் கடாரம் மாநக்காவரம்
.ஸ்ரீ விஜயம் போன்ற பகுதிகளை ஆட்சி செய்ததையும் வரலாறு நமக்கு சொல்கிறது.
கடற்போர்களில் பயன்படுத்தப்படும் நாவாய்கள் (போர்கப்பல்) அமைத்தலில்
கொண்டிருந்த பொறியியல் நுட்பம் அலாதியானது <br /><br />
போரில் விழுப்புண் பட்டு இறத்தலை பெருமையாகவும் புறமுதுகு காட்டி ஓடி தப்பித்தலை இழிவானதாகவும் கொண்டிருந்தனர் .<br /><br />
பொதுவாக ஆயுதங்களாக வில் ,வேல் ,வாள் போன்றவையே இருந்தது . இதில் அருகில்
இருந்து போர் புரிய வாளும் தூரத்தே இருந்து போர் செய்ய வில் மற்றும் வேல்
பயன்படுத்தப்பட்டன. இது தவிர கழல்,கண்ணி,தார் ,அடார்,அரம்,அரிவாள்
,ஆயுதக்காப்பு ,கணிச்சிப்படை ,கலப்பை ,கழிப்பிணி ,காழெக்கம்,கிளிகடிகருவி
,குந்தாலி,குறடு ,கேடகம் ,கோடாலி ,சேறுகுத்தி,நவியம் மற்றும் வளரி போன்ற
ஆயுதங்களையும், பயன்படுத்தினர் .<br /><br />
போர்கருவிகள் ஊரு விளைவிக்கா வகையில் புலி தோலால் செய்யப்பட்ட உறைகளையும் கேடயங்களையும் பயன்படுத்தினர் <br /><br />
போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக நினைவிடங்களையும் படைவீடுகளையும் அமைத்து அவர்களை பெருமைப்படுத்தினார்கள். <br /><br /><br />
ஆயுதம் இன்றி உடல் பலத்தால் மட்டும் நடக்கும் மல்யுத்தம் ,விற்போர்,வளரி
வீசுதல் மற்றும் சிலம்பம் போன்றவை வீர விளையாட்டுகளாக இருந்திருக்கின்றன. <br /><br /><br />
நம்முடைய மரபில் இருந்த பெரிய பிரச்னை என்னவெனில் மக்களை கடவுளாக உயர்த்தி
கூறுவதுதான். அதாவது மனிதர்களாக அவர்கள் செய்த வீரபிரதாபங்களை ,செயற்கரிய
செயல்களை உயர்த்தி கூறுவதாக எண்ணி கடவுளரோடு ஒப்பிட்டு கூறுவதுதான். இதன்
மூலம் வீர மரபுகள் புராதான மரபுகளாகி நம்ம முடியாத அளவிற்கு பொய் விடுகிறது
<br /><br />
உதாரணமாக சிபி, முசுகுந்தன்,காந்தன் ,செம்பியன் மற்றும் மனு நீதி சோழன்
போன்றோரின் வீர வரலாற்றை நம் இந்த புராதான மரபு கெடுத்து விட்டது (சிபி -
புறாவை காக்க பருந்திடம் தன் தசையை கொடுத்தவன் ,முசுகுந்தன்-அரக்கர்கள்
பலரை வென்று இந்திரனை காதவன் ,காந்தன் - குடகு மலையை பிளந்து காவிரி ஆற்றை
வரவிட்டவன் ,செம்பியன் - அரக்கர்களின் பறக்கும் கோட்டையை அழித்தவன்
,மனுநீதிச்சோழன் - உங்களுக்கே தெரியும் )<br /><br /><br />
அடுத்த பதிவில் சந்திப்போம் <br /><br /><br />
பி.கு :<br />
ஒரு முறை மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்ற போது ஒரு வேற்று மாநிலத்து
நண்பர் மயிலுடன் நிற்கும் ஒரு மனிதரின் சிலையை காட்டி அவர் யார் என ஒரு
தோழியிடம் வினவ ,உடனே தோழி அது முருகன் என பதிலுரைத்தார். மயிலோடு யாரை
பார்த்தாலும் நம் மக்களுக்கு முருகர் நியாபகமே வருகிறது. உடனே குறுக்கிட்ட
நான் அவர் பேகன் எனவும் அவர் மயிலுக்கு போர்வை தந்த வரலாற்றை சுருக்கமாக
சொன்னேன் உடனே அந்த நண்பர் "அவர் தான் முட்டாள்தனமாக செய்திருக்கிறார்
என்றால் அதை பெருமையாய் நினைத்து போற்றுகிறீர்களே ." என கேட்க உடனே நான்
"அதை அவ்வாறு எடுத்துக்கொள்ள கூடாது .மக்களுக்கு ஒருவர் உதவி புரிவது
இயற்கைதான் .ஆனால் மாக்களுக்கும் உதவி புரிந்த நல்லோர்கள் வாழ்ந்த பூமி
எங்கள் பூமி " என கூறினேன் .என்ன நான் சொன்னது சரிதானே ????<br /><br /><br /> <br /><br /><br /><br />
மூலங்கள் :<br />
>தென்னாட்டு போர்களங்கள் -கா.அப்பாதுரையார் <br />
> பத்தாம் வகுப்பு (2006-2010) தமிழ் துணைப்பாட நூல்<br />
><a data-source="user" href="https://knome.ultimatix.net/r?url=http%3A%2F%2Fwww.santhan.com%2Findex.php%2F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86">http://www.santhan.com/index...</a><br />
><a data-source="user" href="https://knome.ultimatix.net/r?url=http%3A%2F%2Fta.wikipedia.org%2F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">http://ta.wikipedia.org/விக்கி</a><br />
><a data-source="user" href="https://knome.ultimatix.net/r?url=http%3A%2F%2Fwww.thinnai.com%2Findex.php%3Fmodule%3Ddisplaystory%26story_id%3D20511112%26format%3Dprint%26edition_id%3D20051111">http://www.thinnai.com/index...</a></div>
சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-52629638514207761082014-01-18T20:15:00.003+05:302014-01-18T20:15:47.250+05:30இந்திய நாடு என் வீடு <br /><br />சமீப காலங்களில் நான் ஒரு விதமான பேச்சுக்களை கேட்க முடிகிறது. அண்மையில் நடந்த சில நிகழ்வுகள் ,ஆளும் வர்க்கத்தின் போக்கு மற்றும் சமூக பிரச்சனைகள் போன்ற காரணங்களினால் அவர்களின் கோபம் நாட்டின் மீது திரும்புகிறது.சிலர் இன்றைய சூழலால் வெறுப்படைந்து சுதந்திரத்தையும் அதை பெற்றுத் தந்த தலைவர்களையும் ஏசும் போது கோபம் தான் வருகிறது அவர்களுக்கு என்னால் இயன்ற பதிலை தருவது தான் இந்த பதிவின் நோக்கம் <br /><br /><br /><br />இந்தியா புவியியல் அமைப்பிலும் மக்களின் வாழ்க்கை முறையிலும் மிக பெரிய வித்தியாசம் கொண்ட நாடு. பல்வேறு சாதி,மத மற்றும் இன வித்தியாசம் கொண்ட பல்வேறு விதமான மக்கள் வாழ்கிறார்கள்.பருவ மற்றும் சீதோசன நிலைகளும் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது .எனவே இந்தியா துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.பல்வேறு பழக்கவழக்கங்கள் ,கலாச்சாரம் கொண்ட மக்கள் வாழ்வதால் இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு எனவும் அழைக்கிறோம் (இவையெல்லாம் சமூக அறிவியல் பாட புத்தகத்தில் படித்திருப்பீர்கள் )<br /><br />இந்தியாவில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக அனைவரும் சகோதரத்துவத்தோடு வாழ்கிறார்கள் என நான் சொல்ல வில்லை .ஆனால் தேச பாதுகாப்பு ,பேரிடர் மற்றும் விபத்துக்களின் போது ஒரு ஒற்றுமை ஏற்படவே செய்கிறது. ஆக மக்களுக்கும் ஒற்றுமை இல்லை என சொன்னாலும் வெறுப்புணர்ச்சி இல்லை என்பது உண்மைதானே .<br /><br /><br /><br />உலகில் மனிதம் என்ற நிலை கடந்து மத வாத சக்திகளே ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் இந்த வேளையில் உலகில் உள்ள ஒரே மதச்சார்பற்ற நாடு நம்நாடு என்பது நமக்கு பெருமைதானே. இன்று மிக வளர்ந்த நாடுகளும் மத நம்பிக்கைகள் எனும் மடமையினால் மனித வன்முறை செய்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் பகுத்தறிவை போதித்த மாமனிதர்கள் பலர் வாழ்ந்த நாடு இது <br /><br /><br />அண்மையில் நடந்த சில விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் மக்கள் பலரை நாட்டின் மீது அதிருப்தி அடைய செய்திருக்கலாம். அதற்க்கு ஏற்றாப்போல் XXXXXXX நாட்டின் பிரபல இதழான XXXXXX வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்தியாவை பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் சேர்த்திருந்தது. கண்டிப்பாக சில கோர சம்பவங்களை யாராலும் நியாயப்படுத்த முடியாது.ஆனால் குற்ற எண்ணிக்கையை மட்டுமே வைத்து ஒரு நாட்டை குறை கூற முடியாது. பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகமாக தானே இருக்கும். மக்கள் தொகைக்கும் குற்ற எண்ணிக்கைக்கும் இடையே உள்ள விகிதாசாரத்தை பார்த்தால் உண்மை நிலை புலப்படும்.<br /><br />என்னை பொறுத்தமட்டிலும் நாடு என்பதை நான் அதன் வளங்கள் ,கலாச்சாரம் ,மக்களின் வாழ்வியல் ஆகியவற்றுடன் பார்க்கிறேன் .மாறாக அரசுகள்,அரசாங்கம் ,கேளிக்கைகள் என பார்ப்பதில்லை . உலகின் தொன்மையான நாகரிகங்களான எகிப்திய ,கிரேக்க அரேபிய போன்றவை முழுமையாக அழிந்து விட்டநிலையில் ஏறக்குறைய எஞ்சியிருப்பது நமது மட்டுமே. உலகிற்கு மிளகு முதல் சந்திரசேகர் எல்லை வரை தந்தவர்கள் நாம் மட்டுமே. மற்ற எந்த நாட்டின் மீதும் போர் அறிவித்து அதன் பகுதிகளை ஆக்கரமிப்பு செய்யாத ஒரே நாடு நமது நாடுதான் (பிந்தைய வரலாறு மட்டும் ).மேலும் போர் என மற்றவர் வரும்போது எதிர்த்து நின்று தக்க பதிலடியும் கொடுத்துள்ளோம். <br /><br />வானுயர வளர்ந்து நிற்கும் கோபுரங்கள்,நகரமயமாதலால் பாதிக்க பட்டாலும் தன் பெருமையை இழக்காமல் நிற்கும் கிராமங்கள் திகழும் நாடு. உலகின் பல நாடுகள் விடுதலைக்கு ஆயுதம்தான் ஒரே வழி என்ற நிலையில் இருந்த போது அகிம்சை எனும் போர் முறையை போதித்த நாடு.போர் என்றாலே ரத்தமும் மரண ஒலமுமான வெறித்தனமான கொலைகள் என்றறியப்பட்ட கால கட்டத்தில் போரிலும் தர்மம் பார்த்த புண்ணியவான்கள் வாழ்ந்த நாடு. மருத்துவம் ,பொறியியல் ,இலக்கியம் போன்றவற்றில் பல்வேறு சாதனைகள் செய்தாலும் அதை அடுத்தவர் மீது திணிக்காமல் விட்டதால் இன்று எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் தியாகத்தின் சொருபமாக விளங்குகிறோம்.நாட்டின் பெருமைகளை பற்றி பேசினால் இந்த பதிவு பல பாகமாகிவிடும். இவற்றையெல்லாம் மறந்து விட்டு தற்கால நிலைமையை மட்டுமே எண்ணி நாட்டை தூற்றுவது நியாயமாகுமா ?<br /><br /><br />இன்னொரு விதமான பேச்சையும் நான் கேட்பதுண்டு. வெள்ளையரிடம் அடிமை பட்டு கிடந்த இந்தியாவில் ஊழல் , லஞ்சம் போன்றவை இல்லை எனவும் வெள்ளையரே இந்தியாவை ஆண்டிருந்தால் இன்னுமும் அதிக முன்னேற்றம் கண்டிருப்போம் என சில அறிவு ஜீவன்கள் செப்பி திரிவதை பார்க்க முடிகிறது. இன்று இவர்கள் இப்படி பேசி திரிய காரணம் அன்று பலர் ரத்தம் சிந்தி வாங்கி கொடுத்த சுதந்திரம்தானே. வெள்ளையர்கள் இரும்புபாதை அமைத்து கொள்ளையடித்தவற்றை எளிதாக கொண்டு செல்லவே ஒழிய நம் மக்கள் சொகுசாக பயணம் செய்ய அல்ல என்பது அந்த மேதைகளுக்கு தெரியவில்லை போலும்.வருடத்தில் இரு தினம் மட்டுமே சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளை நினைவு கொள்ள முயலும் நமக்கு சுதந்திரத்தின் அருமை புரியாமல் போனதில் வியப்பொன்றுமில்லை. தனி மனித வசதி வாய்ப்புகளை காரணம் காட்டி விடுதலையின் புனிதத்தை இழிவு செய்வது தகுமோ?காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் நாம் வேலைமுடிந்து வீடு திரும்புவோம் என்ற நம்பிக்கைக்கு காரணமே சுதந்திரம்தானே. <br /><br /><br />பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன் <br /><br /><br /><br />நன்றி வணக்கம் <br />சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-47117063346778269342013-12-25T20:34:00.003+05:302013-12-25T20:34:45.267+05:30பிரபாகரன் வாழ்வும் மரணமும் -புத்தகம் பற்றிய பேச்சு <br /><br /><br /><br />அண்மையில் ஈழம் தொடர்பாக ஆதாரபூர்வமாக எழுதப்பட்ட புத்தகங்கள் ஏதேனும் இருந்தால் பரிந்துரை செய்யுமாறு நம் நண்பர்களிடம் கேட்டு இருந்தேன். அதற்க்கு முருகன் அவர்கள் இந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். <br /><br /><br />கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆயுதம் ஏந்தி தம் மக்களின் நலனுக்காக போராடி வந்த பிரபாகரனின் முழுமையான வாழ்க்கை அவரிடம் நெருங்கிய மக்களுக்கு மட்டுமே தெரியும் .ஆனால் அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை . எனவே இந்த நூல் ஈழம் தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள் மற்றும் சில மூத்த போராளிகள் சொன்ன தகவல்களில் இருந்து எழுதப்பட்டுள்ளது என இதன் ஆசிரியர் ராகவன் முன்னுரையிலேயே சொல்லி விட்டார் .<br /><br /><br />பிரபாகரனின் இளம் பிராயத்திலிருந்து இந்நூல் தொடங்குகிறது. S/o வல்வெட்டித்துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை யாக இருந்த அவர் விடுதலை புலிகளின் தலைவராக மாறிய வரலாற்றை கால நிகழ்ச்சிகளின் ஓட்டத்தோடு சொல்லி இருக்கிறார் ராகவன்.<br /><br />தமிழரசு கட்சியின் அறப்போராட்ட வழியில் நம்பிக்கை இழந்து தன் நண்பர்களுடன் சேர்ந்து இளம் வயதில் ஆல்பர்ட் துரையப்பாவை சுற்று கொன்றதில் ஆரம்பிக்கிறது இவரின் பயணம். பின் தமிழகத்துக்கு தப்பி வந்தது,புலிகள் அமைப்பை ஆரம்பித்தது ,ஆயுத தேடலுக்காக வங்கி கொள்ளைகளில் ஈடுபட்டது என அடுத்தடுத்த அத்தியாயங்கள் நிறைகின்றன.ஆளில்லா விமானத்தை வெடிக்க செய்து அதன் மூலம் உலகத்தை திரும்பி பார்க்க செய்தார். <br /><br />இலங்கையில் பல்வேறு போராட்ட குழுக்கள் இருந்தாலும் அவர்களுடன் பிரபாகரன் எவ்வாறு வேறு பட்டார் என்பதை உணர முடிந்தது. மற்ற குழுக்கள் தங்கள் விடுதலையில் இந்தியாவின் பங்கு கண்டிப்பாக இருக்கும் என நம்பிய காலத்தில் அவர் மட்டும் இந்தியாவின் உதவியை நம்பாமல் இருந்திருக்கிறார்.<br /><br />எதிரிகளால் ஏற்பட்ட காயங்களை விட நம்பிக்கை துரோகம் செய்தவர்களால் ஏற்பட்ட காயம் அவரை எங்கனம் பாதித்திருக்கிறது என்பதை அறிய முடிந்தது. தங்களின் உறைவிடத்தை தீர்மானித்தது ,ஆயுத கொள்முதல் முறை ,மற்ற நாட்டு போராட்ட முறையை பின்பற்றாமல் தனக்கு தெரிந்ததை தன் குழுவுக்கு போதித்து அவர்களை நடத்தி சென்றது போன்றவற்றில் இருந்து பிரபாகரனின் தெளிந்த அறிவும் கூறிய சிந்தனையும் புலப்படும் .<br /><br />இதற்க்கு இடையில் திருப்போரூரில் நடைபெற்ற பிரபாகரன் - மதிவதனி திருமணம் ,அதனால் ஏற்பட்ட விளைவுகள் என தொடர்கிறது. ஆயுத கொள்முதல் மற்றும் வர்த்தகத்துக்காக கப்பல் கம்பெனி நிறுவியது முதல் தனி போர்விமானங்கள் பயன்படுத்தியது வரை ஒரு சாதாரண தீவிரவாத கும்பலால் என்னவே முடியாத பலவற்றை அவர் சாதித்து காட்டியுள்ளார்.<br /><br />வெளிநாட்டில் இருந்து நிதி மற்றும் ஆயுத கொள்முதலுக்கு குமரன் பத்மநாபன் ,உளவு துறைக்கு பொட்டு அம்மான்,அரசியல் பேச்சுவார்த்தை மற்றும் யோசனைகளுக்கு ஆண்டன் பாலசிங்கம் என பல போராளிகளை பற்றியும் அறிய முடிந்தது <br /><br />மேலும் மாத்தையா ,கருணா ,உமா மகேஸ்வரன் போன்றவர்களின் துரோகங்கள் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் அறிய முடிந்தது.<br /><br />இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் தலையீடு பற்றியும் அதனால் கண்ட விளைவுகள் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும் .இந்திரா காந்தி காலத்தில் இந்திய உளவு துறை இலங்கை போராளிகளுக்கு பயிற்சி அளித்தது ,பின் ராஜீவ் காந்தி அமைதி நடவடிக்கையாக போர் நிறுத்தம் கொண்டுவந்தது ,இந்திய அமைதி படையை அங்கு அனுப்பியது போன்ற அரசியல் நிகழ்வுகளை அறிய முடிந்தது .<br /><br />இந்திய அமைதி படை அங்கு நடத்திய "அமைதி " நடவடிக்கைகள் ,போர்நிறுத்த காலத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட துரோக செயல்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.<br /><br /><br />பின்பு இந்தியவின் தலையீடால் இலங்கையில் இருந்த மற்ற போராளி குழுக்கள் சிதறியது ,அவர்களை விடுதலை புலிகள் கொன்றது ,ராஜீவ் காந்தி படுகொலை என அடுத்த கருப்பு பக்கங்கள் வருகின்றன.<br /><br /><br />ஒரு தீவிரவாத(அவர்கள் பாசையில்) குழு ஒரு சுதந்திர நாட்டுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கால் நூற்றாண்டுகள் மேலாக போராடிய வரலாறு இன்னொரு முறை அரங்கேறுவது கடினம். பல கிலோமீட்டர் நிலபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு சிறு எல்லைக்குள் வந்து ஒவ்வொரு விழுதாக வீழ்ந்து கடைசியில் ஆலமரமாய் பிரபாகரன் சரிந்த காரணங்களை விளக்க ராகவன் முற்பட்டுள்ளார்.<br /><br />பிரபாகரன் மீது உலக சமுதாயம் கூறும் குற்ற சாட்டுகளையும் அதற்கான விளக்கங்களையும் சொல்ல முனைந்திருப்பது சிறப்பு.<br /><br /><br />இறுதியில் இனி என்ன செய்யலாம் என கூறி இருப்பது சிறப்பு <br /><br />ஆனால் முக்கிய போராளியாக கருதப்பட்ட தமிழ்செல்வன் பற்றியோ நார்வே தூதுக்குழு பற்றியோ எதுவும் சொல்லாதது ஆச்சர்யம் .<br /><br /><br />ஒரு புத்தகம் அடுத்த புத்தகத்துக்கான தேடலை வழங்குகிறது .அந்த வரிசையில் இது நிறைய தேடல்களை வழங்கிவிட்டது <br /><br />சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-55390416012951354722013-12-21T21:48:00.001+05:302013-12-21T21:48:26.102+05:30எங்கே செல்லும் இந்த பாதை -பகுதி 5குழந்தை வளர்ப்பு <br /><br />
முன் குறிப்பு : குழந்தை வளர்ப்பு பற்றி எழுதுவதற்கு தேவையான வயதோ அனுபவமோ
என்னிடம் இல்லை.இருப்பினும் சமூகத்தில் வாழும் ஒரு சராசரி மனிதனாக
பார்க்கும் விசயங்களை பகிர்வோம் என்ற நினைப்பில் எழுதப்பட்டது . அறியா
சிறுவன் எழுதிய இந்த பதிவு சிறுபிள்ளைதனமாகவோ தவறாகவோ இருக்கலாம்.அப்படி
இருந்தால் உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து போனால் போகட்டும் என நினைத்து
விட்டுவிடுங்கள். <br /><br />
குழந்தை வளர்ப்பு பற்றி ஒரு குழந்தை (சத்தியமா நான்தான் ) எழுதிய சிறு பதிவு . (அப்பாடா இனி யாரும் திட்ட மாட்டார்கள் )<br /><br /><br /><br /><br /><br />
குழந்தை வளர்ப்பு என்பதை உடல் ரீதியான மற்றும் மன ரீதியான வளர்ச்சி என்று
பிரிக்கலாம். உடல் ரீதியான வளர்ச்சியை தாய்மார்கள் பார்த்து கொள்வார்கள்.
மனரீதியிலான வளர்ச்சியை மட்டும் பார்ப்போம் <br /><br /><br />
குழந்தைகள் பள்ளி ,நண்பர்கள் சமுதாயம் என பலவற்றில் இருந்து கற்று
கொண்டாலும் குழந்தைகளின் முதல் ஆசான் பெற்றோர் தான். பெற்றோரிடம் இருந்து
குழந்தைகள் அணைத்து விசயங்களையும் கற்று கொள்கிறார்கள் .இதனால்
குழந்தைகளிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது முக்கியமானது.
பெற்றோரிடம் இருந்து கோபத்தில் பிறக்கும் ஒவ்வொரு சொல்லும் குழந்தைகளிடம்
பதிந்து விடுகிறது. தொலைக்காட்சி ,சமூகத்தில் அவர்கள் பார்க்கும் காட்சிகள்
அவர்களுக்கு நல்லவற்றை மட்டுமல்லாமல் சில தீயவற்றையும் போதிக்கின்றன. <br /><br /><br />
இன்றைய குழந்தைகளின் Observation மற்றும் Learning Ability மிக அதிகம்.நம்
சிறு வயதில் நம்மால் யோசிக்க முடியாத பல விசயங்களை இன்று அவர்கள் நிகழ்த்தி
காட்டுகிறார்கள். அவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை பற்றி
நாமே யோசிக்க வேண்டி வருகிறது. குழந்தைகளின் இந்த வளர்ச்சி பெற்றோரும்
மனரீதியாக வளர அல்லது பக்குவம் மேம்பட வேண்டும் என்பதை
புலப்படுத்துகின்றன.குடும்பத்தில் ஆரோக்கியமான சூழல் நிகழ்வது குழந்தைகளின்
மன நிலையை பேண உதவும். பெற்றோரிடையே எழும் கருத்து வேறுபாடுகள் குழந்தைகளை
நேரடியாக பாதிக்கின்றன .<br /><br />
இன்றைய தலைமுறை குழந்தைகளின் பெரும்பாலான நேரத்தை கேம்ஸ்களும்
கார்ட்டூன்களும் கவர்ந்து விடுகின்றன. இன்றைய அறிவியல் முன்னேற்றம்
குழந்தைகளுக்கு நிறைய கற்று கொடுப்பதோடு அவர்களை கெடுக்கவும் செய்கிறது.
இதனால் உறவுகளோடு உலாவி மகிழும் நேரம் குறைகிறது.இவ்வாறு நிஜ மனிதர்களோடு
வாழும் நேரம் குறைந்து நிழல் கதாபாத்திரங்களோடு வாழ வேண்டிய சூழல்
நிலவுகிறது.<br /><br /><br />
அறிவு என்பது பள்ளியில் சொல்லி தரப்படும் பாட புத்தகங்களோடு நின்று விடாது.
அதை தாண்டி அவர்களுக்கு வாழ்கையை கற்று தரவேண்டிய பெருமை பெற்றோரையே
சாரும். ஒரு பெற்றோராக குழந்தையின் சிறு சிறு ஆசைகளையும் பூர்த்தி செய்து
விடுகிறோம். இதனால் தோல்வி,ஏமாற்றம் போன்றவற்றை அறியாமல் வளரும் அவர்களால்
வாழ்கையின் சுக துக்கங்களை தாங்கி கொள்ள முடியாமல் போகிறது. ஆக வாழ்கையை
வாழ்வின் அர்த்தங்களை அதன் சுமைகளை கற்று தரவேண்டும். <br /><br />
மேலும் குழந்தைகளிடம் சொல்லப்படும் நீதி கதைகளும் வரலாற்று உதாரணங்களும்
அவர்களை நல்ல மனிதர்களாக மாற்ற உதவுகின்றன. இவை அவர்களை ஆரோக்கியமான
பாதையில் பயணிக்க வைக்கின்றன. துரதிஸ்டவசமான இன்றைய குடும்ப சிதைவுகள் தனி
குடும்பங்களாக பிரிந்து விட்டதால் பாட்டி-தாத்தாக்களின் வேலையை இன்று
பெற்றோர் தான் செய்ய வேண்டும். மேலும் இன்றைய சூலில் குழந்தைகளிடம் அதிக
நேரம் செலவிட முடியாமல் போகிறது. <br /><br />
இதனால் எந்த எதிர்பார்ப்போ நெருக்கடியோ இல்லாத குழந்தைகளின் உலகத்தை நாம்
இழக்கிறோம் .குழந்தைகளின் உலகம் வசீகரமானது எப்பொழுதும் இன்பம் மட்டுமே
இருக்க கூடியது.அந்த உலகில் நீங்கள் அனைவரும் குழந்தைகளே.<br /><br />
குழந்தைகளின் மீதான வன்முறைகள் அதிகரித்து வரும் சமுதாயத்தில் வாழ்ந்து
வரும் நாம் நம் குழந்தைகள் நம்மிடம் எதையும் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் ஒரு
நல்ல நண்பர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இதனால் அவர்களுடன் அதிக
நேரம் செலவிடுதல் கட்டாயமாகிறது. <br /><br /><br />
இந்த பரந்த உலகில் இருந்து நாள்தோறும் குழந்தைகள் புதுப்புது விசயங்களை
கற்கிறார்கள். ஒரு பெற்றோராக அவர்கள் கற்று கொள்வதை அவர்களுக்கு
பயனளிக்கும் வகையில் நெறியாள்கை செய்து தீயதை விளக்கி அவர்களுக்கு புகட்ட
வேண்டும். குழந்தைகள் முன் தீய வார்த்தைகள் பேசுவதையோ செய்கைகள் செய்வதையோ
நிறுத்த வேண்டும். அர்த்தம் தெரியாமல் பாடும் ஆங்கில போயம்கள் மட்டும்
போதாது. அவர்கள் பேசும் பேச்சுக்களின் பொருளை அவர்களுக்கு புரிய வைக்க
வேண்டும்.நீதி கதைகள் சொல்வதன் மூலம் அவர்களை சிறந்த மனிதர்களாக்க முடியும்
. அன்று நம் வளர்ந்த சூழ்நிலையில் நம் அறிவும் குறைவாக இருந்தது விஞ்ஞான
முன்னேற்றமும் குறைவாக இருந்தது.ஆனால் இன்று குழந்தைகள் வாழும் சூழல் வேறு
. திரும்ப திரும்ப இதை சொல்ல காரணம் ஒரு பெற்றோராக நாம் இன்னும்
பக்குவப்பட வேண்டும் என்பதுதான் .ஏனெனில் பெருபாலான நம்மவர்கள் வாழ்வது
பழைய Traditional வாழ்க்கையோ அதி நவீன (modern) வாழ்க்கையோ இல்லை
.கிட்டத்தட்ட ரெண்டு கேட்டான் நிலை. <br /><br /><br />
அதி முக்கியமானது உறவுகளின் முக்கியத்துவத்தை புரிய வைக்க வேண்டும். இது
பின்னாளில் சமூகத்தோடு அவர்கள் சேர்ந்து இயங்கவும் உதவும் .பெரியோரை
மதிக்கும் பண்பு ,நட்பு பாரட்டுதல் போன்றவற்றை சொல்லி தர வேண்டியது
பெற்றோரின் கடமையாகும் <br /><br />
இவ்வாறு குழந்தைகளை நாளைய உழைக்கும் எந்திரங்களாக மட்டும் மாற்றாமல் நல்ல மனிதம் கொண்டவர்களாகவும் மாற்ற உதவும் <br /><br /><br />
பி.கு :<br /><br />
அனைத்தையும் கற்று கொடுக்கிறோம் என்ற Spoon Feeding செய்வதாகவும் இத்தனை
கற்று கொள்ளும் அவர்கள் இதையும் தானே கற்று கொள்வார்கள் என்பது சிலரின்
வாதம். பெற்றோர்கள் குழந்தைகளின் மேல் எதையும் திணிக்காமல் குழந்தைகளாகவே
அவர்களை வளர விடவேண்டும் பின் வளர்ந்து தாங்களே கற்று கொள்ளட்டும் என்பது
அவர்கள் கருத்து. இதற்க்கு என் பதில் அறிவு என்பது வேறு அனுபவம் என்பது
வேறு . தீ சுடும் என்று அறிவுக்கு முதலில் அனுபவமே காரணம். ஆக நல்லது எது
கேட்டது எது என சீர்தூக்கி பார்க்கும் அளவுக்கு அவர்களுக்கு அனுபவம் வரும்
வரை இது தேவை .<br /><br /><br />
என் பதில் அவர்களுக்கு திருப்திகரமாக இல்லை. என்னதான் இருந்தாலும் அனுபவமற்ற ஒரு அற்ப பதரின் பதிலில் பக்குவம் இல்லாமல் இருக்கலாம் <br /><br />
சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-83905096485413779582013-12-21T21:43:00.000+05:302013-12-21T21:44:10.092+05:30இது யாருடைய வகுப்பறை- புத்தக சந்திப்புதிருவான்மியூர் அருகே உள்ள பனுவல் புத்தக நிலையத்தில் திரு.ஆயிஷா இரா
.நடராசன் அவர்கள் எழுதிய இது யாருடைய வகுப்பறை எனும் நூல் விவாத நிகழ்ச்சி
நடைபெற்றது..சிறப்பு விருந்தினர்களாக ஆசிரியர் திரு .கல்யாணி மற்றும்
திரு.வேணுகோபால் ஆகியோர் வந்திருந்தனர். நம் கல்விமுறையின் ஆரம்பம் அதன்
போக்கு மற்றும் குறைபாடுகள் குறித்து மிக சிறப்பான ஒரு விவாதம் நடந்தது.<br />
<br />
நிகழ்ச்சியை காவேரி அவர்கள் தொகுத்து வழங்கினார் .தன் முன்னுரையிலேயே
ஆசிரியர்களின் பெருமை மற்றும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் அவர்களின்
மகத்தான பங்களிப்பு குறித்து பேசினார். அதற்க்கு பிறகு ஐயா திரு.கல்யாணி
அவர்கள் பேச்சை தொடங்கினார்.<br />
<br />
மிக நகைச்சுவையுடன் நம் கவனத்தை சிதற விடவே முடியாத அளவுக்கு தம் பேச்சால்
கட்டி போட்டார். குழந்தைகள் பள்ளியில் நடத்தப்பட வேண்டிய விதம் மற்றும்
அவர்கள் மனநிலை குறித்து பேசினார்.ஒரு ஆசிரியராக தம் அனுபவத்தை முன்
நிறுத்தி பல கருத்துக்களை முன் வைத்தார். அவரது பேச்சில் ஆசிரியர் -மாணவர்
உறவின் இடைவெளி குறித்த கருத்துக்கள் அதிகம் இடம் பெற்றிருந்தன.
மாணாக்கர்களுக்கான பள்ளி தான் வேண்டுமே ஒழிய மதிப்பெண்களுக்கான பள்ளி
தேவையில்லை என்ற வாதத்தை அருமையாக அனைவரும் ரசிக்கும் படி முன் வைத்தார்.<br />
<br />
பின் பேசிய திரு.வேணுகோபால் அவர்கள் இன்றைய கல்விமுறை சமூகத்தில்
ஏற்ப்படுத்திய தாக்கம் குறித்து பேசினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள்
மீது தங்கள் விருப்பு வெறுப்புகளை திணிக்க கூடாது போன்ற கருத்துக்கள்
அதிகம் இருந்தன. இன்றைய தனியார் கல்வியின் மோகம் மக்களை எந்த அளவுக்கு
பாதித்திருக்கிறது என்பதை அழகாக தற்போதைய நிகழ்வுகளின் வாயிலாக
எடுத்துரைத்தார். மேலும் அவர் நகைச்சுவையாய் சொன்ன சில வரிகள் <br />
<br />
{புத்தகத்தை 'எடு' 'படி' என்று சொல்லி சொல்லி நம்மை எடுபடியாக்கி விட்டார்கள் ↑<br />
<br />
இன்றைய நம் கல்விமுறை பில்கேட்ஸ் களை உருவாக்க வில்லை <br />
அவரது வேலையாட்களை உருவாக்கி கொண்டிருக்கிறது <br />
<br />
இன்றைய கல்வி முறை வாஷிங் மெசின் போன்றது.பள்ளியில் அழுக்கு துணியாக
சேர்க்கப்படும் மாணாக்கர்கள் பிறகு நல்ல வேலையில் சேர்ப்பித்து துவைத்து
எடுக்கப்படுவது போல் கையாளப்படுகிறார்கள் }<br />
<br />
இடையில் பார்வையாளர்கள் சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள்.ஒரு
தலைமையாசிரியை தான் மாணவர்களிடம் இருந்து பெற்ற சில நல்ல வித்தியாசனமான
அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.இன்றைய கல்வி முறையின் அவலத்தை கடலூர்
வாசிப்பாளர்கள் சார்பில் பங்கேற்ற BSNL நிறுவனத்தில் துணை மேலாளராக
பணியாற்றும் ஒரு அன்பர் சொன்னார். இன்றைய கல்வி முறையில் தனியார்மயமாதலின்
பிரதிபலிப்பு மற்றும் அரசு பள்ளிகள் குறித்தும் சில நண்பர்கள் பேசினார்கள் ←<br />
<br />
இறுதியாக தன் புத்தகம் பற்றி ஆயிஷா இரா.நடராசன் பேசினார். கல்வி முறை
தோன்றிய வரலாற்றை அழகாக எடுத்துரைத்தார். நம் கல்வி முறை எவ்வாறு
உண்டாக்கப்பட்டது மற்றும் அதற்க்கு வித்திட்டோர் குறித்தும் பேசினார்.
ஆசிரியர் -மாணவர் உறவு மற்றும் ஆசிரியர்கள் குறித்து பல மொழிகளில்
எழுதப்பட்ட பல்வேறு நூல்கள் பற்றி விரிவாக பேசினார். நம் கல்வி முறையில்
உள்ள பல்வேறு கோட்பாடுகள் எங்கிருந்து தருவிக்க பட்டன மற்றும் கல்வி முறை
குறித்து பல்வேறு நாட்டு அறிஞர்கள் கொண்டுவந்த வரையறைகள் பற்றி பேசினார்.<br />
<br />
அதில் என்னை பாதித்தது ஜப்பானிய எழுத்தாளர் யாமக்குச்சி (சத்தியமா அது
தாங்க பேரு ) எழுதிய God save my children எனும் நாவல் தான். அதன் கதையை
கேட்டவுடனே கண்ணீர் வந்து விட்டது. மிக உணர்வுபூர்வமாக பல விசயங்களை பற்றி
பேசினார் நடராசன் அவர்கள்.அதில் கல்வி சீரமைப்பு குறித்த கோத்தாரி குழு
சமர்ப்பித்த அறிக்கையின் குறைகள் மற்றும் யாஸ்பால் கமிசன் கொண்டுவந்த பல
நல்ல விஷயங்கள் மற்றும் நம் கல்வி முறை மாற்றத்தில் UNICEF நிறுவனத்தின்
பங்கு இன்னும் பல விஷயங்கள் பற்றி பேசினார் <br />
<br />
அதற்குள் நேரமாகிவிட்டது .எனவே நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது <br />
<br />
பி.கு :<br />
<br />
அவர்கள் சொன்ன சில விஷயங்கள் விடுபட்டிருக்கலாம் .அதற்க்கு
வருத்தங்கள்.முழுமையாக சொன்னால் இது யாருடைய வகுப்பறை புத்தகம் பற்றியும்
பேச வேண்டி வந்துவிடும் <br />
<br />
<br />
அதை படித்து முடித்தவுடன் புத்தகம் பற்றிய பேச்சில் விரிவாக பேசுவோம் <br />
<br />
<br />
நன்றி வணக்கம் <br />
<br />
வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ்!!!<br />
<br />
<br />
<div>
Books prescribed by Thiru. Aayesha Natarajan on Education:<br />
1) To Sir with love - E. R. Braithwaite<br />
2) Black Skin, White Masks - Frantz Fanon<br />
3) Painted house - john grisham<br />
4) The Little Village school - Gervase Phinn<br />
5) God Save my Children (Double A-Bomb Victim: My Life beneath the Atomic Clouds - Tsutomu Yamaguchi)<br />
6) The Petals of Blood - Ngũgĩ wa Thiong'o<br />
7) Pedagogy of Freedom - Paulo Freire<br />
8 ) Encyclopedia of Creativity, Two-Volume Set - Steven R. Pritzker<br />
9) To Kill a Mockingbird - Harper Lee<br />
</div>
சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-3731590166070243692013-12-21T21:39:00.001+05:302013-12-21T21:39:28.096+05:30இந்திய விளையாட்டுகள் - பகுதி 2இந்திய விளையாட்டுகள் - பகுதி 2<br />
கிரிக்கெட்டினால் வந்த விளைவு <br /><br />
நம் நாட்டில் நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன.அவற்றில் கிரிக்கெட் மட்டுமே
முதலாய் பார்க்க படுகிறது .கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்பதை தாண்டி
மக்களின் உணர்வாகவே மாறி விட்டது வருந்ததக்கது. (பாகிஸ்தான் உடன் தோற்றால்
அது அவமானமாகி விடுகிறது. பாகிஸ்தான் நம்மை நெஞ்சுக்கு நெஞ்சாக சந்திக்கும்
எதிரி ஆனால் சில முதுகில் குத்தும் துரோகிகளுடன் நாம் சந்தோசமாக
விளையாடிக்கொண்டுதானே இருக்கிறோம் )<br /><br />
கிரிக்கெட்டின் விளையாட்டின் வளர்ச்சி மற்ற விளையாட்டுகளை அதிக அளவில்
பாதித்திருக்கிறது. மற்ற விளையாட்டுகளை மக்களும் அரசும் புறக்கணிக்க
கிரிக்கெட் காரணமாகிறது. அதிக லாபம் தரும் கிரிக்கெட் அரசுக்கு
முக்கியமாகிவிட்டது. இத்தனைக்கும் பிசிசிஐ இந்திய விளையாட்டு அமைச்சகத்தின்
கீழ் செயல்படுவதில்லை .எனவே அது ஒரு தனியார் அமைப்பு .ஒரு தனியார் அமைப்பு
நாட்டின் பெயரையும் தேசிய கொடியையும் பயன்படுத்துவது எந்த வகையில்
நியாயம். மேலும் ஒரு இந்தியனாக இந்திய கிரிக்கெட் அணியையோ அல்லது அதன்
வீரர்களையோ நான் support செய்ய வேண்டியதில்லை. <br /><br /><br /><br /><br />
நமது தேசிய விளையாட்டை பற்றி நாம் அறியாதிருப்பது மிகவும் வருந்ததக்கது.
ஒரு காலத்தில் நம் அணியின் வெற்றிகள் வார்த்தையால் விவரிக்க இயலாதது.உலகின்
அணைத்து அணிகளையும் பந்தாடியுள்ளோம்.மேஜர்.சர் .தயான் சந்த் அவர்களின்
தலைமையில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியன் ஆக நாம் வலம் வந்த காலம் மறக்க
முடியாதது.<br /><br /><br /><br />
இன்று நாம் வலு குறைந்து இருக்கலாம்.அதற்கு ஆட்ட வீரர்களின் திறன் காரணம்
இல்லை. களத்துக்கு பதிலாக நவீன புல்தரையில் ஹாக்கி ஆரம்பிக்கப்பட்டதில்
இருந்து ஆசிய அணிகளின் ஆதிக்கம் குறைந்து விட்டது. அரசு கிரிக்கெட்க்கு
அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை தன்
இஷ்டப்படி பிசிசிஐ ஆட்டிவைக்கிறது. அணைத்து நாடுகளும் ஒப்புக்கொண்ட பலவற்றை
பிசிசிஐ எதிர்க்கிறது.ஆனால் ஹாக்கிஇல நம் உரிமைகளை தாரைவார்த்ததொடு
வளர்ச்சி பணிகளிலும் மெத்தனம் காட்டுகின்றது. மைதானங்களின் தரம்
கேள்விக்குரியதாய் உள்ளது அதே போல் அதிக அளவில் உள்நாட்டு போட்டிகள்
நடத்தப்படுவதில்லை. <br /><br /><br />
ஹாக்கிஇல் ஒரு குறிப்பட்ட மாநிலத்தவரின் ஆதிக்கம் மட்டுமே மேலோங்கி
நிற்கிறது .அதை தவிர்த்து அணைத்து பகுதிகளின் சிறந்த
வீரர்-வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக
விளையாட்டு வீரனுக்கு மக்கள் மத்தியில் கிடைக்க பெரும் பாராட்டுதான்
அவனுக்கு ஊக்கம் அளிக்கும்.எனவே அணைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே மாதிரியான
முக்கியத்துவம் தர வேண்டும்.இந்த தொடக்கம் முதலில் ஊடகங்களில் இருந்து
ஆரம்பித்து படிப்படியாக சமூகம் முழுக்க பரவ வேண்டும் <br /><br /><br />
ஹாக்கி மட்டும் இல்லை மற்ற விளையாட்டுகளுக்கும் இதே நிலை தான். கபடியில்
காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் பெரு வெற்றிகள் பெற்ற அணியினரை நாம்
கண்டு கொள்ளவே இல்லை. வில்வித்தையில் அண்மையில் நடந்த உலக சுற்று
போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் physiotherapist இல்லாமல் கடும் உடல்
நல குறைவுடன் ஆடி வெள்ளி பதக்கம் பெற்றனர். அவர்களை பற்றி யாரும் கவலைப்பட
வில்லை.குத்துசண்டை போட்டியில் தலைகவசம் இன்றி சண்டையிடும் புதிய விதிக்கு
எந்த கருத்தும் தெரிவிக்காமல் அதன் சம்மேளன தலை பதவி ஆசையில் அடித்து
கொண்டிருந்தோம்.பாட்மிட்டன் விளையாட்டில் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய
ஆடை 'குறைப்பை' பற்றியும் நாம் பேச வில்லை.<br /><br /><br />
இவ்வாறாக மற்ற விளையாட்டுகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் நம்மை பாதிப்பதை
பற்றி நாம் கவலைப்பட வில்லை .மாறாக IPL போட்டிகளில் பணத்தை வாரி இறைத்து
/குவித்து கொண்டிருந்தோம்.<br />
வாள்சண்டை போன்ற விளையாட்டுகளில் நாம் பின் தங்கியிருக்க காரணம்
திறமையின்மை அல்ல ,போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததுதான். ஐரோப்பிய
நாடுகள் தங்கள் பாரம்பரிய விளையாட்டுகளை உள்ளே கொண்டு வரும்போது நாமும்
கபடியை கொண்டு வரலாம்.<br /><br /><br />
கிரிக்கெட் வேண்டாம் என நான் கூறவில்லை. கிரிக்கெட்டின் பலத்தை குறைக்கலாம்
என்பதே என் கருத்து. இந்திய வீரர்களின் சம்பளம் மற்ற அணி வீரர்களை
காட்டிலும் மிகவும் அதிகம்.எனவே அவற்றை குறைத்து முறைப்படுத்தலாம்.பிசிசிஐ
தன்னிச்சையாக செயல்படாமல் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட
வேண்டும்.இதன் மூலம் அணைத்து விளயாட்டுகளையும் சமமாக பாவிக்கும் அரசின்
மனப்பான்மை மக்களையும் மாற்றும். மற்ற விளையாட்டுகளில் கொண்டு வரப்படும்
புதிய விதிகளை அவற்றின் சாதக பாதகங்களை கணக்கில் கொண்டு ஆராய்ந்து ஆதரிக்க
அல்லது எதிர்க்க வேண்டும்.புதிய கிரிக்கெட் மைதானங்கள் உண்டாக்குவதற்கு
பதிலாக கால்பந்து ,ஹாக்கி போன்ற இதர விளையாட்டு மைதானங்களையும் ஏற்ப்படுத்த
வேண்டும். <br /><br /><br />
இதன் மூலம் இதர விளையாட்டுகள் புத்துயிர் பெரும்.வில்வித்தை ,துப்பாக்கி
சுடுதல் ,மல்யுத்தம் ,குத்துசண்டை போன்ற விளையாட்டுகளில் நாம் தனி பெரும்
சக்தியாக திகழும் காலம் வெகு தொலைவில் இல்லை.அணைத்து விளையாட்டுகளிலும்
நம் வீரர்கள் முத்திரை பதிக்க காத்து கொண்டிருக்கின்றனர் .அவர்களுக்கு
வேண்டியது முறையான வழிகாட்டுதலும் உங்கள் கைதட்டல்களும் தான் <br /><br /><br /><br /><br />
பி.கு :<br /><br />
இந்தியாவின் C நிலை வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தென்
ஆப்பிரிக்காவின் முதல் நிலை வீரர்களுக்கு நிகரானது என்பது
குறிப்பிடத்தக்கது. அதில்லாமல் IPL மற்றும் விளம்பரங்களில் அவர்கள் ஈட்டும்
ஊதியம் மிக அதிகம். எனவே மற்ற அணியினரை போல் அவர்களுக்கும் ஊதியம்
வழங்கலாம். <br /><br />
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். IPL இல் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட
கூடாது என இரண்டாவது தொடரில் தீர்மானிக்கப்பட்டது .ஆனால் இன்று வரை இலங்கை
வீரர்கள் ஆடிக்கொண்டு தானே இருக்கிறார்கள்.இந்த தொடரில் மட்டுமே சிலர்
பிரச்சனயை கிளப்பினார்கள். சென்ற தொடர் வரை சென்னை அணியிலேயே
குலசேகரா,ரண்டிவ் போன்ற வீரர்கள் ஆடியதை யாரும் கண்டு கொள்ளவில்லையே . ஏன்
?? ஒருவேளை நியாயம் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுமோ ????<br /><br />
விளையாட்டு என்பது வேறு அரசியல் என்பது வேறு என கூறும் இவர்கள் அதை அணைத்து பிரச்சனைகளிலும் கடைபிடிக்க வேண்டுமல்லவா??<br />
எனக்கு அரசியல் எல்லாம் தெரியாதுங்க .நீங்களாவது சொல்லுங்க <br /><br /><br />
report abuse செய்ய கூடாது என்பதற்காக இதற்க்கு வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் எனும் காலன் எனும் தலைப்பை மாற்ற வேண்டி வந்தது. <br /><br /><br /><br />
நன்றி வணக்கம் சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-74132134545431505962013-12-21T21:35:00.001+05:302013-12-21T21:35:45.726+05:30மூங்கில் கோட்டை-புத்தகம் பற்றிய பேச்சுதிரு.சாண்டில்யன் அவர்கள் எழுதிய மூங்கில் கோட்டை எனும் வரலாற்று புதினம்
படித்தேன். தலையாலங்கனத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சேர
மன்னரை சிறை வைக்க உருவாக்கிய கோட்டையை பற்றிய புதினம் இது.
தலையாலங்கானத்து பெரும் போரில் பத்தொன்பது பிராயமே நிரம்பிய நெடுஞ்செழியன்
தன்னை எதிர்த்த சேர,சோழ மற்றும் ஐந்து வேளிர்களையும் தோற்கடித்தான் என
வரலாறு கூறுகிறது. இதில் சரணடைந்த சேர மன்னன் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல்
இரும்பொறையை நெடுஞ்செழியன் யாராலும் சிறை மீட்க முடியாத அளவுக்கு ஒரு
கடினமான கோட்டைக்குள் சிறை வைக்கிறான் <br /><br />
இனி கதைக்கு வருவோம் <br /><br />
சேர மன்னனின் மேல் மதிப்பு கொண்ட புலவர் குறுங்கோழியூர்கிழார் அவரை
சிறையில் இருந்து தப்புவிக்க எண்ணுகிறார்.அவருக்கு நெடுஞ்செழியனின் சகோதரி
இமயவல்லி உதவுகிறாள்.மன்னரை தப்பு விக்க சேர நாட்டில் இருந்து இளமாறன்
எனும் இளைஞனை மதுரைக்கு வரவழைக்கிறார் புலவர். வந்த அன்றே அவன் மன்னரோடு
மோத வேண்டி வருகிறது. மூங்கில் கோட்டைக்கு போகும் வழியில் பாண்டியனின்
ஆசிரியரான சித்தர் தடுத்து நிறுத்துகிறார் .அவர் அவர்களை கைது செய்யாமல்
போக அனுமதிக்க இளமாறன் மூங்கில் கோட்டைக்கு செல்கிறான் .<br /><br /><br /><br />
மூங்கில் கோட்டையில் இருந்து எங்கனம் அவன் மன்னரை விடுவிக்கிறான் ?
மன்னரின் சகோதரி மேல் இளமாறன் கொண்ட காதல் நிறைவேறுகிறதா ? சித்தர்
-இளமாறன் இடையே உள்ள உறவு என்ன ? போன்ற கேள்விகளுக்கு விடை தருவதே
இந்நூலின் முடிவு.<br /><br /><br />
மிக இளம் வயதில் அரியணை ஏறி பல போர்களில் வெற்றி பெற்று இறவாப் புகழை எய்திய நெடுஞ்செழியனின் பராக்கிரமங்கள் அருமை . <br /><br />
புலவர் குறுங்கோழியூர் கிழார் மன்னரை தப்பு விக்க பல முயற்சிகள்
எடுக்கிறார். சேர அரசிக்கு பிறந்த இளவரசி இமயவல்லி -இளமாறன் காதல்
காட்சிகள் சில கணங்களே வந்தாலும் அருமை .<br /><br /><br />
மூங்கில் கோட்டையின் அமைப்பு மிக பயங்கரம். சேனாதிபதி ,மருத்துவர்
,ஆசிரியர் என பல அவதாரம் புரியும் சித்தர் யார் என அவிழும் முடிச்சு நம்மை
வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.<br /><br />
கடைசியில் மன்னர் நெடுஞ்செழியன் வழங்கும் தீர்ப்பில் புலப்படும் நீதி அவரின் உயர்வை புலப்படுத்துகிறது .<br /><br /><br />
மிக அருமையான ஒரு அனுபவத்தை நல்கியது <br /><br /><br />
நன்றி வணக்கம் <br /><br />
வாழ்த்துக்கள் <br /><br /><br />
வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-67394570473095317192013-11-20T17:27:00.001+05:302013-11-20T17:27:26.133+05:30சேரன் செல்வி -புத்தகம் பற்றிய பேச்சுதிரு.சாண்டில்யன் அவர்கள் எழுதிய சேரன் செல்வி வரலாற்று புதினம்
படித்தேன். மாலிக் கபூரின் தென்னிந்திய படையெடுப்பை அடிப்படையாக கொண்டு
எழுதப்பட்ட ஒரு சரித்திர நவீனம். மாலிக் கபூரின் தென் நாட்டின் மீது
படையெடுத்து கொள்ளையை முடித்து சென்று விட்ட பிறகு அவன் தளபதி குஸ்ரூகான்
தென்னிந்தியாவில் ஒரு முகம்மதிய அரசை நிறுவ எண்ணுகிறான். வீர பாண்டியன்
-சுந்தர பாண்டியன் இடையே மூளும் வாரிசுரிமை போட்டியை தனக்கு சாதகமாக்கி தன்
ஆசையை நிறைவேற்ற முயல சேர மன்னர் ரவிவர்மன் குலசேகரன் எங்கனம் அதை
முறியடிக்கிறார் என்பதே கதை ←<br /><br />
பாண்டிய நாட்டில் இருந்து புலவர் ஒருவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும்
வாலிபன் இளவழுதி சேர நாட்டின் தளபதியாக நியமிக்க படுகிறான்.சந்தித்த பொழுதே
சேர இளவரசி இளமதி மேல் மையலும் கொள்கிறான். மாலிக் கபூரின் ஒற்றன்
அஜ்மல்கான் மன்னரை கொல்ல சதி செய்கிறான். அவன் இளவழுதியையும் தன் சதியில்
இழுக்க பார்க்கிறான். போர் திட்டங்களை மாற்றி கூறி அவனை இளவழுதி
ஏமாற்றுகிறான். மதுரையை ஆளும் வீரபாண்டியன் குஸ்ரூகானுக்கு உதவ அவர் மீது
சினம் கொண்டு படையெடுக்கும் சேர மன்னர் அவரை இளவழுதியின் துணையோடு
வெல்கிறார். அப்பொழுது சுந்தர பாண்டியன் கலகம் செய்ய அவனை அடக்க செல்லும்
இளவழுதியை சமாதானம் பேச அழைத்து வஞ்சித்து கத்தியால் குத்தி விடுகிறான் .<br />
சேர மன்னர் குஸ்ரூகானை வென்றாரா ? இளவழுதி உயிர் பிழைத்தானா? கடவுளுக்கு
அர்ப்பணிக்கப்பட்டவள் என சொல்லப்பட்ட இளமதியை இளவழுதி மணம் புரிந்தானா
போன்ற கேள்விகளுக்கு விடை கூறி விடைபெற்றது புதினம்.<br /><br /><br />
தமிழ் புலவர் ,கவி சமுத்திரபந்தன் ,கவிபூசணன் என பல்வேறு கவிஞர்களின்
உரையாடல்கள் மிகவும் அருமை. இளவழுதி -இளமதி காதல் காட்சிகளில் இன்பரசம்
சொட்டுகிறது. தமிழரின் பெருமையை மீண்டும் உயர்த்த பாடுபட்ட மன்னர்
ரவிவர்மன் குலசேகரன் பிரம்மிக்க வைக்கிறார் <br /><br />
போர்க்கள காட்சிகள் ,படை அணிவகுப்பு ,போர் வியுகங்கள் என தனக்கே உரித்தான பாணியில் கதையை அற்புதமாக நகர்த்திஇருந்தார் சாண்டில்யன் <br /><br /><br /><br />
சேரன் செல்வி<br />
வகை :சரித்திர நாவல் <br />
ஆசிரியர் :சாண்டில்யன் <br />
பதிப்பகம் :வானதி பதப்பகம் <br />
விலை :145<br /><br /><br />
↮எண்டமூரி விரேந்தர்நாத்தின் மற்றுமொரு அரிய படைப்பான சாகர சங்கமம் எனும்
நாவல் படித்தேன். தான் சரியாக இருப்பதாகவும் மற்றவர்களும் தன்னிடம் சரியாக
நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தரளா எனும் பெண்மணியால் வரும்
விளைவே சாகர சங்கமத்தின் கதை .<br /><br />
தரளா ,தன் காதலை பணம் எனும் மாயையால் இழந்த ஆனந்தன் மற்றும் தன் தோழிக்காக
தன் காதலை தியாகம் செய்து தன் காதலருக்காக வாழும் பிருந்தா ஆகிய மூன்று
நதிகளின் பிணைப்பு மற்றும் பிரிவே சாகர சங்கமம் கதை. கதையின் ஓட்டத்தை
காவிரி நதியின் ஓட்டத்தோடு சேர்த்து வழங்கி இருக்கிறார் ஆசிரியர்.கதையை
அந்தந்த கதாபாத்திரங்களே சொல்வது போல் நகர்த்தி இருப்பது சிறப்பு.பல்வேறு
திருப்பங்கள் ,ஆச்சர்யங்கள் என முதல் அத்தியாயத்தில் ஆரம்பிக்கும் கதையின்
வேகம் கடைசி அத்தியாயம் வரை தொடர்வது சிறப்பு. படிப்பதற்கு ஒரு நல்ல இனிய
அனுபவத்தை வழங்கி தன் சங்கமத்தை நிறைவு செய்தது நாவல் <br /><br /><br />
சாகர சங்கமம் <br />
வகை :சமூக நாவல் <br />
ஆசிரியர் :எண்டமூரி விரேந்தர்நாத் (தெலுங்கு )<br />
மொழிபெயர்ப்பு :கௌரி கிருபானந்தன் <br />
பதிப்பகம் :அல்லயன்ஸ் பதிப்பகம் <br />
விலை :110சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7619611233180836812.post-10633371774791220342013-11-20T17:25:00.000+05:302013-11-20T17:25:05.712+05:30கம்யுனிசம் நேற்று -இன்று-நாளை புத்தகம் பற்றிய பேச்சுகம்யுனிசம் நேற்று -இன்று-நாளை புத்தகம் பற்றிய பேச்சு <br /><br /><br />மு.கு :
இந்த புத்தகம் படிப்பதால் நீங்கள் கம்யூனிஸ்ட்டாக மாறி
விடமாட்டீர்கள்.கம்யுனிசம் குறித்து வெளியே சொல்லப்படும் பல குறைகளையும்
தவறுகளையும் தர்க்க ரீதியாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் மறுக்கும் முயற்சியே
இது. இதை படிப்பதால் உங்கள் பொன்னான நேரம் வீணாகாது என நான் உறுதி
கூறுகிறேன். சமீப காலங்களில் நான் படித்ததில் இது சிறந்த புத்தகம் என்பது
என் கருத்து. இது உலகம் மீதான என் குறுகிய பார்வையை எனக்கு உணர்த்தி
விசாலமாக்க உதவியது <br /><br />தோழர் ஜவகர் எழுதி நக்கீரன் இதழில் தொடராக
வெளிவந்த கட்டுரையே இது. அதிக அளவில் விற்று சாதனை செய்துள்ள இந்த
புத்தகத்தை பெரும் தேடலுக்கு பின் அண்மையில் வாங்கினேன். <br />முதலாளித்துவத்தின்
தோற்றமும் அதனால் உலகில் ஏற்ப்பட்ட பல விளைவுகளில் இருந்து இந்த புத்தகம்
ஆரம்பிக்கிறது. முதலாளித்துவ நாடுகள் பிற நாடுகளை ஆக்கிரமித்து அவற்றை
எவ்வாறு சுரண்டினார்கள் என்பதையும் எவ்வாறு காலனி நாடுகள் உருவாயின
என்பதையும் அழகாக சித்தரித்திருக்கிறார் இதன் ஆசிரியர் .<br /><br /><br />முதலாளித்துவத்தின்
சித்தாந்தம் கொலையில் தொடங்கியதாகவும் கம்யுனிசத்தின் சித்தாந்தம்
அமைதியில் தொடங்கியதாகவும் கூறி அடுத்தடுத்த பக்கங்களுக்கு நம்மை
ஆர்வத்துடன் செல்ல வைக்கிறார் மார்க்சிய தத்துவம் ,பொருளாதாரம்
போன்றவற்றையும் ,கருத்து முதல் வாதம் ,பொருள் முதல் வாதம் இயக்கவியல் போன்ற
கோட்பாடுகளை பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில்
தந்திருப்பது சிறப்பு <br /><br /><br />என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்த
பக்கங்கள் ,கம்யுனிச கோட்பாடுகளையும் தத்துவங்களையும் Theory of
relativity மற்றும் quantum theory போன்றவற்றை கொண்டு விஞ்ஞான பூர்வமாக
விளக்கியிருப்பதுதான்.இது எனக்கு அபூர்வமாக தோன்றியது ஏனெனில் இவ்வாறு நான்
கேள்விபட்டது கூட கிடையாது <br /><br /><br />மார்க்சியத்தை விஞ்ஞானம் என
விளக்கியிருப்பதும் அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் மார்க்ஸ் ,எங்கெல்ஸ் ,லெனின் ஆகியோரின் பங்களிப்பை பற்றியும் தெளிவாக உணர முடிந்தது.<br />புரட்சி
ஏற்பட்டு சோவியத் ரஷ்யா (USSR ) உதித்தது ,அதன் பிரம்மிக்க தக்க அசுரவேக
வளர்ச்சி ,அதன் வீழ்ச்சிக்கான காரணங்கள் என அனைத்தையும் தந்திருப்பது
நிறைவு .<br /><br /><br />ரஷ்யாவிலும் சீனாவிலும் கம்யுனிசத்தின் பாதை மாற்றங்கள் மற்றும் அதன் காரணங்கள் தந்திருப்பது சிறப்பு <br /><br />இந்தியாவில் கம்யுனிஸ்ட் கட்சியின் தோற்றம் அது சந்தித்த பிரச்சனைகள் ,சாதனைகள் மற்றும் பிளவு என இரண்டாம் பகுதி நிறைகிறது <br /><br />இப்புத்தகத்தின் சில துளிகள் <br /><br />➤பொதுவுடைமை
குறித்து பாரதியார் ,பாரதிதாசன் போன்ற இந்திய கவிஞர்களின் கவிதைகளை
இடைசெறுகலாக தந்து படிக்கும் ஆர்வதை கூட்டி இருக்கிறார்கள்<br /><br />➤பல அறிய புகைப்படங்களை காண முடிந்தது <br /><br />➤ மூலதனம் உயர்ந்தால் வேலைவாய்ப்பின்மை தான் உயரும் என்பதை இந்தியாவை வைத்து சொல்லி இருப்பது சிறப்பு <br /><br />➤அதிக புத்தகங்களிலும் அரசு கருவூலங்களிலும் இருந்து பல புள்ளி விபரங்களை கொடுத்திருப்பது சிறப்பு <br /><br />➤ நவம்பர் புரட்சியின் திக் திக் 26 மணி நேரங்களை விவரித்திருக்கும் விதம் அருமை <br /><br />➤முதலாளி -தொழிலாளி வர்த்தக உறவுகள் ,விஞ்ஞான சோசியலிசம் என நீள்கிறது <br /><br />➤ சுஜாதா எழுதிய இரு புத்தகங்கள் தொடர்ந்து விமர்சித்தும் மறுத்தும் எழுதி என் அடுத்த தேடலை துவக்கி வைத்துவிட்டார் ஜவகர் <br /><br />கம்யுனிசம் நேற்று-இன்று -நாளை <br />ஆசிரியர் : இரா .ஜவகர் <br />வகை : கம்யுனிசம் பற்றிய ஆய்வு <br />முன்னுரை : தோழர் நல்லக்கண்ணு மற்றும் தோழர் R .சௌந்திரராஜன்<br /> பதிப்பகம் : நக்கீரன் <br />விலை : 160 <br /><br /><br /><br /><br />பி.கு : <br /><br />முன் குறிப்பில் அனைத்தையும் சொல்லிவிட்டேன் <br /><br />அதனால் <br /><br /><br /><br />நன்றி வணக்கம் <br />அடுத்த பதிவில் சந்திப்போம் <br /><br />வாழ்க தமிழ்!!! வெல்க தமிழ் !!!சசிகுமார் - வாசகன்http://www.blogger.com/profile/07588948581323403295noreply@blogger.com0